01-19-2006, 11:42 PM
AJeevan Wrote:[size=15]அது போலத்தான் பல உண்மைகள்.
பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.
இப்போதைய நிலை அப்படி...................
இன்னுமொரு முக்கிய விடயம்
இந்த நாடுகளில் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட 98% வீதமானவர்கள்
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை.
மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கே
முறையான சான்றிதழ்கள் ஆதாரங்கள் கொடுக்க முடிகிறது.
உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையோடு ஓடியவர்களே................
அவர்களிடம் ஏதய்யா ஆதாரம்?
செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட
இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!
உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே
இல்லை மண்ணோடா.........?
[quote=ganesh]பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்கள் குடிவரவு திணைக்களத்திற்கு கையெழுத்து இடுவதற்காக செல்லும் பொழுது கைதுசெய்யபட்ட இரண்டு நாட்களுக்குள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள் அதனை விட ஒரு சிலர் வீட்டில் இருக்கும் பொழுது சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் அண்மையில் நான் லண்டனில் நிற்கும்பொழுது இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது தற்போது எமது நாட்டில் இடம்பெறும் சம்பவங்களை ஆதாரமாக கொடுத்து இப்படி திருப்பியனுப்புவதை (தற்காலிகமாக)நிறுத்தமுடியாதா?
8

