01-19-2006, 11:30 PM
புளுகர் பொன்னையாவை அடுத்த தனது அணிக்கான வாதத்தை வைக்க வந்துவிட்டார் வர்ணன். அவர் கூறியதைப்போல பட்டிமன்றம் இப்போது மிகவும் சுூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பது உண்மைதான். வெப்பத்தின் நடுவே வாழும் பீனிக்ஸ் பறவைக்கு எம்மை ஒப்பிட்டு ஆரம்பித்துத் தன் வாதங்களை முன்வைத்தார். எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் இங்கு கருத்துக்களை வைக்கும் அத்தனைபேருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஆராய்ந்து பார்த்துத்தான் நாம் தீர்ப்பு வழங்குவோம்.
பல்கலைக்கழகங்களையே வீட்டுக்குள் கொண்டுவரும் கணினித்திரை தரும் இணையத்தளங்களின் நன்மையான தகவல்கள் தெரிந்திருந்தும் இல்லை இல்லை அவை தீங்குதான்.சீரழிவுதான் என்று எதிரணியினர் வாதாட வருகிறார்கள் என்று ஆரம்பித்தார். இக்கூற்று சரியா? தவறா?
எதிரணித்தலைவர் சோழியனுடைய கருத்துக்களையே மேற்கோள் காட்டி கனடாவில் இளையோரின் பொங்குதமிழ் நிகழ்ச்சி பற்றியும், சுனாமியின் அனர்த்தங்களின்போது சிறியோர்களின் பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டார். இதற்கு எதிரணியினர் பதில் என்ன? இலண்டனில் இளையோருடன் நானும் சிலவேளைகளில் சேர்ந்து மடியேந்தினேன். அது ஒவ்வொருவரினதும் கடமைதானே!
"சாட்டிங்கிற்கும், டேற்றிங்கிற்கும்" இணையத்தளங்கள் தேவையில்லை என்றார். காதல் என்ற ஒன்று அதற்கு முன்னர் இருந்ததில்லையா? மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு மார்க்கங்கள் இருந்ததில்லையா? இணையம் வந்தபின்னர்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா? பல கண்காணிப்பாளர்கள் முன்னர் இருந்தும் அந்தக்குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா? என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார். இது ஒரு சிறிய பங்குதான் என்றும், இந்த ஒன்றை வைத்து பலதை தீர்மானிக்க முடியாது என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினார். காதல் புனிதமானது, அதைக் குப்பையாக்குவதும், தெய்வீகமாக்குவதும் அவரவரைப் பொறுத்தது அல்லவா? எதிரணியினர் இதனை ஏற்றுக்கொள்வார்களா?
முகத்தார் அவர்களும், அவரது அணியைச் சார்ந்தவர்களில் சிலரும் தலைப்பைப்பற்றிய தங்கள் கருத்துக்களை வைத்தனர். இணையத்தால் நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்படியான தலைப்புக்குக் கீழ் தாங்கள் வாதாடத்தேவையில்லை என்றும், எதிரணியினர் கொடுத்த தலைப்பில் இன்னும் தங்கள் விவாதத்தைத் தொடங்கவேயில்லை என்றும் குற்றம்சாட்டினர். இது உண்மையா? அல்லது நான் முன்பே குறிப்பிட்டதுபோல் "எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே!" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்களா?
எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார் வர்ணன். "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்" என்பதுபோல. தாம் தீமை வாதம் புரிந்து நன்மைக்கு வழிகாட்டுகிறோம் என்றார். முகத்தார் அவர்கள் எதிரணியில் இருந்தாலும் தங்கள் அணிக்கே வலுச்சேர்க்கிறார் என்றார். அதற்குப் பாராட்டும் தெரிவித்தார். உண்மையில் அப்படிச் செய்கிறாரா? முகத்தார் அவர்கள் இருக்கும் அணிக்கே குpழி தோண்டுகின்றாரா? அல்லது அவர் ஒரு முதியவர் என்பதால் அங்கிருக்கும் இளைஞரை தன் சொல்லம்புகளால் தாக்கப் பயந்து ஒரு முதியவரை வேண்டுமென்றே வர்ணன் தாக்குகின்றாரா? எதிரணிதான் இதற்குப் பதில் கூறவேண்டும்.
இணையத்தால் மிகச்சில சீரழிவுகள்தான் உண்டு ஆனால் பயனடைபவர்கள் பலர் என்றும் தன் வாதத்தை வைக்கிறார். சீரழிவை உண்டாக்காத ஊடகத்தை அவர்கள் காட்டவில்லை, காட்டவும் மாட்டார்கள் ஏனென்றால் அவர்களிடம் இதற்கு விடையே இல்லை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார்.
எதிரiணியினர் இணைய அரட்டை, ஆபாசத்தளங்கள் என்ற சிலவிடயங்களையே வைத்து மல்லுக்கட்டுகிறார்கள் ஆனால் எத்தனையோ பயனுள்ளன இருக்கின்றன என்று பொருளாதாரம்- மருத்துவம்… என்று தொடங்கி விண்ணியல், வரலாறு, இயற்கை பற்றிய ஆய்வு என்று அடுக்கிக்கொண்டே போகிறார். சில காரணங்களை மட்டும் கூறி ஓர் இனத்தின் முன்னேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட எதிரணியினர் சம்மதமா? என்றும் கேட்கிறார்.
அவர் கூறுவதில் நியாயம் உள்ளதுபோலவே தெரிகிறது. ஆனால் வரப்போகும் தீர்ப்புபற்றி பேசவோ, கருத்துச்சொல்லவோ தான் வரவில்லை என்றும், இளையோருக்கு அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வரும் தீர்ப்பு அமையுமோ என்று ஒரு சந்தேகத்தைத் தன்னுள் எழுப்பி முடித்திருக்கின்றார்.
நல்ல கருத்துக்களை வைத்து வாதம் செய்வது ஒரு திறமை. எதிரணியினரை தாக்கியே வாதமிடுவதும்; ஒருவித திறமைதான். இந்தவகையில் இரு அணியினரும் தாம் என்ன செய்கிறோம் என்று தெளிவுடனே செய்கின்றார்கள் என்றே நடுவர்களாகிய நாம் எண்ணுகிறோம். வரப்போகும் முடிவும் அதனைப்பொறுத்தே அமையும் என்று கூறி தீமை அணியிலிருந்து ஈஸ்வர் அவர்களை அழைக்கிறேன்.
நன்றி
பல்கலைக்கழகங்களையே வீட்டுக்குள் கொண்டுவரும் கணினித்திரை தரும் இணையத்தளங்களின் நன்மையான தகவல்கள் தெரிந்திருந்தும் இல்லை இல்லை அவை தீங்குதான்.சீரழிவுதான் என்று எதிரணியினர் வாதாட வருகிறார்கள் என்று ஆரம்பித்தார். இக்கூற்று சரியா? தவறா?
எதிரணித்தலைவர் சோழியனுடைய கருத்துக்களையே மேற்கோள் காட்டி கனடாவில் இளையோரின் பொங்குதமிழ் நிகழ்ச்சி பற்றியும், சுனாமியின் அனர்த்தங்களின்போது சிறியோர்களின் பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டார். இதற்கு எதிரணியினர் பதில் என்ன? இலண்டனில் இளையோருடன் நானும் சிலவேளைகளில் சேர்ந்து மடியேந்தினேன். அது ஒவ்வொருவரினதும் கடமைதானே!
"சாட்டிங்கிற்கும், டேற்றிங்கிற்கும்" இணையத்தளங்கள் தேவையில்லை என்றார். காதல் என்ற ஒன்று அதற்கு முன்னர் இருந்ததில்லையா? மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு மார்க்கங்கள் இருந்ததில்லையா? இணையம் வந்தபின்னர்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா? பல கண்காணிப்பாளர்கள் முன்னர் இருந்தும் அந்தக்குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா? என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார். இது ஒரு சிறிய பங்குதான் என்றும், இந்த ஒன்றை வைத்து பலதை தீர்மானிக்க முடியாது என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினார். காதல் புனிதமானது, அதைக் குப்பையாக்குவதும், தெய்வீகமாக்குவதும் அவரவரைப் பொறுத்தது அல்லவா? எதிரணியினர் இதனை ஏற்றுக்கொள்வார்களா?
முகத்தார் அவர்களும், அவரது அணியைச் சார்ந்தவர்களில் சிலரும் தலைப்பைப்பற்றிய தங்கள் கருத்துக்களை வைத்தனர். இணையத்தால் நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்படியான தலைப்புக்குக் கீழ் தாங்கள் வாதாடத்தேவையில்லை என்றும், எதிரணியினர் கொடுத்த தலைப்பில் இன்னும் தங்கள் விவாதத்தைத் தொடங்கவேயில்லை என்றும் குற்றம்சாட்டினர். இது உண்மையா? அல்லது நான் முன்பே குறிப்பிட்டதுபோல் "எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே!" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்களா?
எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார் வர்ணன். "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்" என்பதுபோல. தாம் தீமை வாதம் புரிந்து நன்மைக்கு வழிகாட்டுகிறோம் என்றார். முகத்தார் அவர்கள் எதிரணியில் இருந்தாலும் தங்கள் அணிக்கே வலுச்சேர்க்கிறார் என்றார். அதற்குப் பாராட்டும் தெரிவித்தார். உண்மையில் அப்படிச் செய்கிறாரா? முகத்தார் அவர்கள் இருக்கும் அணிக்கே குpழி தோண்டுகின்றாரா? அல்லது அவர் ஒரு முதியவர் என்பதால் அங்கிருக்கும் இளைஞரை தன் சொல்லம்புகளால் தாக்கப் பயந்து ஒரு முதியவரை வேண்டுமென்றே வர்ணன் தாக்குகின்றாரா? எதிரணிதான் இதற்குப் பதில் கூறவேண்டும்.
இணையத்தால் மிகச்சில சீரழிவுகள்தான் உண்டு ஆனால் பயனடைபவர்கள் பலர் என்றும் தன் வாதத்தை வைக்கிறார். சீரழிவை உண்டாக்காத ஊடகத்தை அவர்கள் காட்டவில்லை, காட்டவும் மாட்டார்கள் ஏனென்றால் அவர்களிடம் இதற்கு விடையே இல்லை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார்.
எதிரiணியினர் இணைய அரட்டை, ஆபாசத்தளங்கள் என்ற சிலவிடயங்களையே வைத்து மல்லுக்கட்டுகிறார்கள் ஆனால் எத்தனையோ பயனுள்ளன இருக்கின்றன என்று பொருளாதாரம்- மருத்துவம்… என்று தொடங்கி விண்ணியல், வரலாறு, இயற்கை பற்றிய ஆய்வு என்று அடுக்கிக்கொண்டே போகிறார். சில காரணங்களை மட்டும் கூறி ஓர் இனத்தின் முன்னேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட எதிரணியினர் சம்மதமா? என்றும் கேட்கிறார்.
அவர் கூறுவதில் நியாயம் உள்ளதுபோலவே தெரிகிறது. ஆனால் வரப்போகும் தீர்ப்புபற்றி பேசவோ, கருத்துச்சொல்லவோ தான் வரவில்லை என்றும், இளையோருக்கு அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வரும் தீர்ப்பு அமையுமோ என்று ஒரு சந்தேகத்தைத் தன்னுள் எழுப்பி முடித்திருக்கின்றார்.
நல்ல கருத்துக்களை வைத்து வாதம் செய்வது ஒரு திறமை. எதிரணியினரை தாக்கியே வாதமிடுவதும்; ஒருவித திறமைதான். இந்தவகையில் இரு அணியினரும் தாம் என்ன செய்கிறோம் என்று தெளிவுடனே செய்கின்றார்கள் என்றே நடுவர்களாகிய நாம் எண்ணுகிறோம். வரப்போகும் முடிவும் அதனைப்பொறுத்தே அமையும் என்று கூறி தீமை அணியிலிருந்து ஈஸ்வர் அவர்களை அழைக்கிறேன்.
நன்றி

