01-14-2004, 07:17 PM
ஒரு மன்னன் தன்நாட்டில் பெரும் பணம் செலவுசெய்து அஸ்வமேத யாகம் செய்தான். அப்போது அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் ஒரு பக்கம் மட்டும் தங்கமாக ஜொலித்தது.
அது அவர்கள் யாகம் செய்த இடத்தில் வந்து புரண்டது பிறகு ஏமாற்றம் அடைந்து வெளியேற எத்தனித்தது. அதற்குள் தங்கநிறத்தில் பாதிஜொலித்த அந்த கீரிப்பிள்ளையைப்பார்க்க காவலாளிகள்,அமைச்சர்கள், யாகம் செய்த தீட்சிதர்கள் என அனைவரும் கூடிவிட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம். அதற்குள் கீரிப்பிள்ளை பேச ஆரம்பித்துவிட்டது.
அவர்களைப்பார்த்து "என்ன யாகம் செய்கிறீர்கள் பயனற்ற யாகம் இதே கிராமத்தில் ஒரு குடியானவன் உங்கள் அரசனைவிட மிகப்பெரிய யாகம் செய்துள்ளான்" என்றது.
அதற்கு ஆச்சரியப்பட்ட மக்கள் "இங்கு யாரும் யாகம் செய்யவில்லையே? அப்படியிருந்தால் இந்த தீட்சிதர்களுக்கு தெரிந்து இருக்குமே" என்றனர்.
அதற்கு கீரி "அவர்கள் செய்தது அன்னதானமதான் ஆனால் ஒருவகையில் யாகம். யாகத்தைவிட அதிக புண்ணியத்தை அவர்கள் பெற்றார்கள். அந்தபக்கம் போன என் உடல் புண்ணியம் பட்டு தங்;கநிறமாகிவிட்டது. மீதியையும் தங்க நிறமாக்கத்தான் நான் இங்குவந்து உருண்டு புரண்டேன். ஆனால் பயனேதும் இல்லை. இவ்வளவு பணம் செலவு செய்து என்னபயன்" என்றது.
ஆங்கிருந்த தீட்சிதர்களில் ஒருவர் "அப்படி என்ன பெரிதாக அன்னதானத்தில் புண்ணியம் பெற்றுவிட்டார்கள். எத்தனைபேருக்கு அன்னதானம் செய்தார்கள். இன்று இந்த யாகத்தில் நாட்டு மக்கள் அனைவருக்குமே அன்னதானம் தான்" என்றார் ஏளனமாக.
அதற்கு கீரிப்பிள்ளை அவர்கள் கதையைச்சொல்கிறேன் கேள் அதன்பின் நீயும் அதை மெச்சுவாய் என்று கதையை சொல்ல ஆரம்பித்தது.
அவர்கள் முன்னாளில் பெரிய பணக்காரர்கள் தான் ஆனால் வியாபாரத்தில் நஸ்டமாகிநொடிந்துபோனவர்கள். இயற்கையாகவே தர்மசிந்தனை உடையவர்கள். அன்று குடும்பத்துடன் அருகில் உள்ள ஊருக்குவேலைதேடிச்சென்றார்கள் வேலையேதும் கிடைக்கவில்லை. உண்ண உணவும் கிடைக்கவில்லை. கவலையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு மரத்தடியில் கொஞ்சம் நெற்கள் சிந்திக்கிடப்பதைப்பார்த்து அவற்றை குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனைபேரும் கஸ்டப்பட்டுப்பொறுக்கி எடுத்;து தந்தையிடம் கொடுத்தார்கள். தந்தை அதை சிரமப்பட்டு உமிநீக்கி மனைவியிடம் கொடுக்க மனைவி அவற்றைக்கொண்டு மரத்தடியிலேயே சோறாக்கினாள். அதற்குள் அனைவரும் மர இலைகளைப்பறித்து உண்பதற்கு வட்டில்கள் தயார்செய்தனர். குடும்பத்தலைவி சுடச்சு அனைவாரது இலைகளிலும் சமமாகப்பங்கிட்டாள். அனைவரும் உண்பதற்கு முன் கண்களைமூடி ஆண்டவனைபிரார்த்தித்தனர். பின் கண்திற்ந்து பார்த்தபோது அந்தவழியால் வயதான ஒரு சிவனடியார் வந்தார். அவர் களைத்துப்போய் காணப்பாட்டார். கண்களில் பசிமயக்கம். குடும்பத்தலைவன் அவரைப்பார்த்ததும் எழுந்து சென்று விருந்தோம்ப அழைத்தான். அவரும் அதற்கு இணங்கினார். குடும்பத்தலைவன் தனது பங்கை எடுத்து அவரை அமரச்செய்து படைத்தான். கொடியபசியில் அவர் இருந்திருக்கவேண்டும். ஒருநொடியிலேயே சாப்பிட்டுவிட்டார். இதைப்பார்த்த குடும்பத்தலைவன் தனமனைவியின் பங்கையும் எடுத்து சிவனடியாருக்கு படைத்தான். இறுதியில் குழந்தைகளின் பங்கையும் அவருக்குப்படைத்து அவர் பசியைப்போக்கினான். ஆண்டவன் அவர்களின் செயலில் மகிழ்ந்து அவர்களுக்கு அனைத்துசெல்வங்களையும் வழங்கி அவர்களுக்கு நிறையப்புண்ணியத்தையும்கொடுத்தார். அந்தப்பக்கமாக சென்ற எனது உடலில் பாதி தங்கமாகியிருப்பதை உணர்ந்தேன். மீதி உடலையும் தங்கமாற்றிக்கொள்ளலாம் என்று புண்ணியம் செய்யப்படும் இடங்களை தேடி அலைந்தேன். இங்கே அஸ்வமேத யாகம் செய்வதால் புண்ணிம்பெற்ற இடம்என நினைத்து இங்கு வநதேன் மாற்றமேதும் இல்லை. உருண்டு பிரண்டேன். ஆனால் எந்தப்பயனும் இல்லை. உங்கள் யாகம் வெறும் புகழுக்குசெய்யப்படுவது என்று இப்போது உணாந்தேன் என்று சொல்லி ஓடிமறைந்தது.
அது அவர்கள் யாகம் செய்த இடத்தில் வந்து புரண்டது பிறகு ஏமாற்றம் அடைந்து வெளியேற எத்தனித்தது. அதற்குள் தங்கநிறத்தில் பாதிஜொலித்த அந்த கீரிப்பிள்ளையைப்பார்க்க காவலாளிகள்,அமைச்சர்கள், யாகம் செய்த தீட்சிதர்கள் என அனைவரும் கூடிவிட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம். அதற்குள் கீரிப்பிள்ளை பேச ஆரம்பித்துவிட்டது.
அவர்களைப்பார்த்து "என்ன யாகம் செய்கிறீர்கள் பயனற்ற யாகம் இதே கிராமத்தில் ஒரு குடியானவன் உங்கள் அரசனைவிட மிகப்பெரிய யாகம் செய்துள்ளான்" என்றது.
அதற்கு ஆச்சரியப்பட்ட மக்கள் "இங்கு யாரும் யாகம் செய்யவில்லையே? அப்படியிருந்தால் இந்த தீட்சிதர்களுக்கு தெரிந்து இருக்குமே" என்றனர்.
அதற்கு கீரி "அவர்கள் செய்தது அன்னதானமதான் ஆனால் ஒருவகையில் யாகம். யாகத்தைவிட அதிக புண்ணியத்தை அவர்கள் பெற்றார்கள். அந்தபக்கம் போன என் உடல் புண்ணியம் பட்டு தங்;கநிறமாகிவிட்டது. மீதியையும் தங்க நிறமாக்கத்தான் நான் இங்குவந்து உருண்டு புரண்டேன். ஆனால் பயனேதும் இல்லை. இவ்வளவு பணம் செலவு செய்து என்னபயன்" என்றது.
ஆங்கிருந்த தீட்சிதர்களில் ஒருவர் "அப்படி என்ன பெரிதாக அன்னதானத்தில் புண்ணியம் பெற்றுவிட்டார்கள். எத்தனைபேருக்கு அன்னதானம் செய்தார்கள். இன்று இந்த யாகத்தில் நாட்டு மக்கள் அனைவருக்குமே அன்னதானம் தான்" என்றார் ஏளனமாக.
அதற்கு கீரிப்பிள்ளை அவர்கள் கதையைச்சொல்கிறேன் கேள் அதன்பின் நீயும் அதை மெச்சுவாய் என்று கதையை சொல்ல ஆரம்பித்தது.
அவர்கள் முன்னாளில் பெரிய பணக்காரர்கள் தான் ஆனால் வியாபாரத்தில் நஸ்டமாகிநொடிந்துபோனவர்கள். இயற்கையாகவே தர்மசிந்தனை உடையவர்கள். அன்று குடும்பத்துடன் அருகில் உள்ள ஊருக்குவேலைதேடிச்சென்றார்கள் வேலையேதும் கிடைக்கவில்லை. உண்ண உணவும் கிடைக்கவில்லை. கவலையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு மரத்தடியில் கொஞ்சம் நெற்கள் சிந்திக்கிடப்பதைப்பார்த்து அவற்றை குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனைபேரும் கஸ்டப்பட்டுப்பொறுக்கி எடுத்;து தந்தையிடம் கொடுத்தார்கள். தந்தை அதை சிரமப்பட்டு உமிநீக்கி மனைவியிடம் கொடுக்க மனைவி அவற்றைக்கொண்டு மரத்தடியிலேயே சோறாக்கினாள். அதற்குள் அனைவரும் மர இலைகளைப்பறித்து உண்பதற்கு வட்டில்கள் தயார்செய்தனர். குடும்பத்தலைவி சுடச்சு அனைவாரது இலைகளிலும் சமமாகப்பங்கிட்டாள். அனைவரும் உண்பதற்கு முன் கண்களைமூடி ஆண்டவனைபிரார்த்தித்தனர். பின் கண்திற்ந்து பார்த்தபோது அந்தவழியால் வயதான ஒரு சிவனடியார் வந்தார். அவர் களைத்துப்போய் காணப்பாட்டார். கண்களில் பசிமயக்கம். குடும்பத்தலைவன் அவரைப்பார்த்ததும் எழுந்து சென்று விருந்தோம்ப அழைத்தான். அவரும் அதற்கு இணங்கினார். குடும்பத்தலைவன் தனது பங்கை எடுத்து அவரை அமரச்செய்து படைத்தான். கொடியபசியில் அவர் இருந்திருக்கவேண்டும். ஒருநொடியிலேயே சாப்பிட்டுவிட்டார். இதைப்பார்த்த குடும்பத்தலைவன் தனமனைவியின் பங்கையும் எடுத்து சிவனடியாருக்கு படைத்தான். இறுதியில் குழந்தைகளின் பங்கையும் அவருக்குப்படைத்து அவர் பசியைப்போக்கினான். ஆண்டவன் அவர்களின் செயலில் மகிழ்ந்து அவர்களுக்கு அனைத்துசெல்வங்களையும் வழங்கி அவர்களுக்கு நிறையப்புண்ணியத்தையும்கொடுத்தார். அந்தப்பக்கமாக சென்ற எனது உடலில் பாதி தங்கமாகியிருப்பதை உணர்ந்தேன். மீதி உடலையும் தங்கமாற்றிக்கொள்ளலாம் என்று புண்ணியம் செய்யப்படும் இடங்களை தேடி அலைந்தேன். இங்கே அஸ்வமேத யாகம் செய்வதால் புண்ணிம்பெற்ற இடம்என நினைத்து இங்கு வநதேன் மாற்றமேதும் இல்லை. உருண்டு பிரண்டேன். ஆனால் எந்தப்பயனும் இல்லை. உங்கள் யாகம் வெறும் புகழுக்குசெய்யப்படுவது என்று இப்போது உணாந்தேன் என்று சொல்லி ஓடிமறைந்தது.

