01-13-2004, 05:42 PM
மனசே ரிலாக்ஸ் இரண்டாம் பாகத்தில் நன்பன் படித்துச்சொன்னகதை.
ஒரு கிராமம் அங்கே ஒரு பாடசாலையை ஒட்டி இரண்டு ரெயில்ப்பாதைகள். ஒன்று அடிக்கடி ரெயில் செல்லும் பாதை. மற்றயது எப்போதாவது எதிரும் புதிருமாய் ரயில் வந்தால் ஒன்றை மாற்றி அங்கு நிறுத்தி எதிரே வந்த ரெயில் போனபின் விடப்படும் ஒரு மாற்றுப்பாதை.
பாடசாலைச்சிறுவர்கள் ரயில் பாதையையொட்டி விளையாடுவது வழக்கம். இந்த ரெயில் பாதையில் ரெயில்களை மாற்றிவிடும் பணியை வயசானஒரு ஊழியர் ஆற்றி வந்தார். அவர் இந்தச்சிறுவர்களை எப்போதும் இங்கு விளையாடவேண்டாம் என்று கண்டித்து அனுப்புவார். ஆனாலும் யாராவது அங்கு விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆண்டவன் கருணையால் எந்தவித விபத்தும் அங்கே இதுவரை இடம்பெற்றதில்லை.
அன்று வெளியே சென்றிருந்தவர் ரெயில் வரும் நேரத்திற்கு சற்றுமுன்பாகத்தான் வந்தார். கோபுரத்தில் ஏறி ரெயில்ப்பாதையைப்பார்த்தபோது அடிக்கடி ரெயில் செல்லும் பாதையில் நான்கைந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இவருக்கு பரிச்சயமானவர்கள் எத்தனையோதடவை எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அங்கே விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மாற்றுப்பாதையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான் அவனை உற்றுப்பார்த்ததும் அடயாளம் கண்டுகொண்டார் நல்ல மரியாதையான பையன்.ரெயில் பாதையில் விளையாடக்கூடாது என்பதைக்கடைப்பிடிப்பவன். அதனால் தான் என்னவோ தனியாக மாற்றுப்பாதையில் அமர்ந்து இருந்தான்.
வயசானவருக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. இரண்டொரு நிமிடத்தில் ரயில் வரலாம். கீழேபோய் அவர்களை விரட்ட நேரம்போதாது. அதுமட்டுமன்றி மேலே நின்று பச்சைக்கொடிகாட்டவேண்டும். ரயிலை நிறுத்தவும் முடியாது. நிறுத்தினாலும் அது சிறுவர்கள் விளையாடும் பகுதியைக்கடந்துதான் நிற்கும். மாற்றுப்பாதையில் விட்டால் விதிகளைப்பின்பற்றுகின்ற ஒரு நல்ல சிறுவன் இறக்கநேரிடும். என்னசெய்வது என்று அவர் தடுமாறிக்கொண்டிருக்கும் போதே ரயிலும் வந்துவிட்டது. அவர்என்னசெய்வது என்று ஒரிரு விநாடிகள் தடுமாறிவிட்டார். ஆனாலும் சாரியான முடிவை எடுத்தார் விபத்துகள் எதுவும் நடைபெறவில்லை. ரயிலை நிறுத்தவேண்டிய நிலையும் ஏற்படவில்லை. அவர் என்ன செய்திருப்பார். ஊகித்து எழுதுங்கள். அவர் எடுத்த சமயோசிதமுடிவை உங்களால் எடுக்கமுடிகிறதா பார்க்கலாம்.
இதைப்புத்தகதில் படித்தவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள
ஒரு கிராமம் அங்கே ஒரு பாடசாலையை ஒட்டி இரண்டு ரெயில்ப்பாதைகள். ஒன்று அடிக்கடி ரெயில் செல்லும் பாதை. மற்றயது எப்போதாவது எதிரும் புதிருமாய் ரயில் வந்தால் ஒன்றை மாற்றி அங்கு நிறுத்தி எதிரே வந்த ரெயில் போனபின் விடப்படும் ஒரு மாற்றுப்பாதை.
பாடசாலைச்சிறுவர்கள் ரயில் பாதையையொட்டி விளையாடுவது வழக்கம். இந்த ரெயில் பாதையில் ரெயில்களை மாற்றிவிடும் பணியை வயசானஒரு ஊழியர் ஆற்றி வந்தார். அவர் இந்தச்சிறுவர்களை எப்போதும் இங்கு விளையாடவேண்டாம் என்று கண்டித்து அனுப்புவார். ஆனாலும் யாராவது அங்கு விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆண்டவன் கருணையால் எந்தவித விபத்தும் அங்கே இதுவரை இடம்பெற்றதில்லை.
அன்று வெளியே சென்றிருந்தவர் ரெயில் வரும் நேரத்திற்கு சற்றுமுன்பாகத்தான் வந்தார். கோபுரத்தில் ஏறி ரெயில்ப்பாதையைப்பார்த்தபோது அடிக்கடி ரெயில் செல்லும் பாதையில் நான்கைந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இவருக்கு பரிச்சயமானவர்கள் எத்தனையோதடவை எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அங்கே விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மாற்றுப்பாதையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான் அவனை உற்றுப்பார்த்ததும் அடயாளம் கண்டுகொண்டார் நல்ல மரியாதையான பையன்.ரெயில் பாதையில் விளையாடக்கூடாது என்பதைக்கடைப்பிடிப்பவன். அதனால் தான் என்னவோ தனியாக மாற்றுப்பாதையில் அமர்ந்து இருந்தான்.
வயசானவருக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. இரண்டொரு நிமிடத்தில் ரயில் வரலாம். கீழேபோய் அவர்களை விரட்ட நேரம்போதாது. அதுமட்டுமன்றி மேலே நின்று பச்சைக்கொடிகாட்டவேண்டும். ரயிலை நிறுத்தவும் முடியாது. நிறுத்தினாலும் அது சிறுவர்கள் விளையாடும் பகுதியைக்கடந்துதான் நிற்கும். மாற்றுப்பாதையில் விட்டால் விதிகளைப்பின்பற்றுகின்ற ஒரு நல்ல சிறுவன் இறக்கநேரிடும். என்னசெய்வது என்று அவர் தடுமாறிக்கொண்டிருக்கும் போதே ரயிலும் வந்துவிட்டது. அவர்என்னசெய்வது என்று ஒரிரு விநாடிகள் தடுமாறிவிட்டார். ஆனாலும் சாரியான முடிவை எடுத்தார் விபத்துகள் எதுவும் நடைபெறவில்லை. ரயிலை நிறுத்தவேண்டிய நிலையும் ஏற்படவில்லை. அவர் என்ன செய்திருப்பார். ஊகித்து எழுதுங்கள். அவர் எடுத்த சமயோசிதமுடிவை உங்களால் எடுக்கமுடிகிறதா பார்க்கலாம்.
இதைப்புத்தகதில் படித்தவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள

