01-18-2006, 09:24 PM
கற்பனையிலேயே கரகோசங்களையும் மைக்கையும் உருவாக்கி அசலாக ஒரு பட்டி மன்றத்தில் நிற்பது போன்ற தோற்றத்தோடு தனது விவாதத்தை வைத்துச் சென்றிருக்கிறார் புளுகர் பொன்னையா அவர்கள். என்னையா பொன்னையா பெயருக்கேற்ற படி புளுகிச்சென்றிருக்கிறீர்கள். (நடுவர்கள் பற்றியதைச்சொன்னன் மிகுதியை பின்னால பாப்பம்)
சரி புளுகர் பொன்னையாவின் கருத்தினைப் பார்ப்போம்..
புளுகர் எதிரணியினர் தலைப்பையே மறந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைச்துச் சென்றதோடு அவர்கள் இணைய ஊடகத்தின் பயன் பற்றியே பேசுகிறார்கள் இந்தப்பட்டி மன்றத்தின் தலைப்பு இணையத்தின் பயன்களா ? என்ன என்ற கேள்விகயைக்கேட்டுச்செல்கிறார். அதாவது பொன்னையா இணையத்தின் பயன்களை எடுத்து விவரிப்பதனால் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தில் அடையும் நன்மைகளை சொல்ல முனைகிறார்கள் போல அதன்மூலம் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மை அடைகிறார்கள் என்றதை கூறமுனைகிறார்கள் . அப்படியா எதிரணியினர் எங்கே பார்ப்போம் புளுகரின் புளுகுக்கு என்ன பதிலடி கொடுக்கிறார்கள் என்று.
இளையோர் சீரழிய பல வழிகள் இருந்தாலும் இணையமும் சீரழிக்கிறது அப்படி என்கிறார். இணையம் மட்டும் தான் சீரழிக்கிறது அப்படி என்றது விவாதம் இல்லை என்றதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இணையம் சீரழிக்கிறது என்பதைச் சொல்வது தான் தங்கள் வாதம் என்கிறார்.
ஒருவரின் அந்தரங்க படுக்கையறைக்குள் உலகத்தையே கொண்டு வருகின்ற இணையமானது எங்கோ ஒரு கோடியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை இன்னொரு முனையில் பல மைல்களுக்கு அப்பால் இருப்பவரது வீட்டிற்குள் கொட்டுகிறது அப்படி என்கிறார். ஐயா பொன்னையா.. இணையம் கொண்டு போய் கொட்டுதா இல்லை இணையத்தில நீங்கள் உள்ளிட்டு அள்ளுறியளா..?? பார்ப்போம் எதிரணியினர் கேட்கிறார்களா நாலு கேள்வி.
மேலும் அவர் தொடர்கையில் கூறுகிறார். ... இணையத்தில் நல்ல விடயங்களும் வருகிறது தானே நீங்கள் ஏன் குப்பையை மட்டும் கிளறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள் நாங்கள் விவாதிப்பது இளையோர் பற்றி என்கிறார். அத்தோடு புளுகர் போன்ற முதியவர்களுக்கு குப்பையாய் தெரிவது இளையோருக்கு நல்லதாய் தெரியலாம் என்கிறார். (அது ஒன்றும் இல்லை எல்லாம் வயசு செய்யிற வேலை.. புளுகர் மாதிரி வயசடைய எல்லாம் சரியாப்போயிடும்). அப்படியா..??
இன்னொரு கருத்தையும் வைத்துச் செல்கிறார். சீரழிபவர்கள் யாரும் தெரிந்து கொண்டு சீரழிவதில்லை.. சீரழிகிறோம் என்று தெரியாமலேயே சீரழிந்து போகிறார்கள். அப்படி சீரழிகிறவையை நல்வழிப்படுத்தவும் முடியவில்லை என்கிறார் காரணம் அவர்கள் நாலு சுவற்றுக்குள் அறையினுள் சத்தம் போடாமல் சீரழிவுகளை எதிர் கொள்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை இந்த இணையம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படி என்று கூறிச்செல்கிறார். பிள்ளை என்ன செய்யிது என்று தெரிஞ்சால் பெரியவர்கள் நல்வழிப்படுத்தலாம் கண்டிக்கலாம். பிள்ளை என்ன செய்கிறது என்றே தெரியாத நிலையில் எப்படி கண்டிப்பது நல்வழிப்படுத்துவது என்று கேட்கிறார் புளுகர் என்ன சொல்கிறீர்கள். பார்ப்போம் எதிரணியினர் கருத்தென்ன??
தொடர்ந்து பேசுகையில் இணையத்தின் பயன்கள் ஆயிரம் இருக்கலாம் அவற்றை பேசிப்பயனில்லை. சீரழிவையும் இணையம் கொடுக்கிறது சீரழிவிற்கு வழி வகுக்கிறது அப்படி என்று கூறிச் செல்கிறார். அத்தோடு இந்த இணைய சீரழிவினால் இளையோர் மற்றும் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் கூறிச்செல்கிறார். பொருட்கள் இழக்கப்படுகின்றன.. பெண்கள் கடத்தப்படுகிறார்கள்... வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள் இப்படியான சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன அப்படி என்று கூறிச்செல்கிறார். புளுகர் கூறிய இந்த சீரழிவுகள் எல்லாம் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு பொருந்துகிறாதா இதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?? எங்கே நன்மையடைகிறார்கள் என்ற அணியினர் இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புலம் பெயர்வாழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் இதுவே உண்மை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைத்துச் செல்கிறார். செல்கையில் இன்னொன்றையும் கூறிச்செல்கிறார். எதிரணியினர் இன்னும் விவாதத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று சொல்கிறார். அப்படியா..?? எங்கே பொங்கியெழும் எதிரணியினரின் கருத்து வெள்ளம் புளுகரின் இந்த கூற்றை அடித்துச் செல்கிறதா இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம். அளவாக தனது கருத்தை வைத்துச்சென்ற புளுகர் பொன்னையாவைத் தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
சரி புளுகர் பொன்னையாவின் கருத்தினைப் பார்ப்போம்..
புளுகர் எதிரணியினர் தலைப்பையே மறந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைச்துச் சென்றதோடு அவர்கள் இணைய ஊடகத்தின் பயன் பற்றியே பேசுகிறார்கள் இந்தப்பட்டி மன்றத்தின் தலைப்பு இணையத்தின் பயன்களா ? என்ன என்ற கேள்விகயைக்கேட்டுச்செல்கிறார். அதாவது பொன்னையா இணையத்தின் பயன்களை எடுத்து விவரிப்பதனால் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தில் அடையும் நன்மைகளை சொல்ல முனைகிறார்கள் போல அதன்மூலம் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மை அடைகிறார்கள் என்றதை கூறமுனைகிறார்கள் . அப்படியா எதிரணியினர் எங்கே பார்ப்போம் புளுகரின் புளுகுக்கு என்ன பதிலடி கொடுக்கிறார்கள் என்று.
இளையோர் சீரழிய பல வழிகள் இருந்தாலும் இணையமும் சீரழிக்கிறது அப்படி என்கிறார். இணையம் மட்டும் தான் சீரழிக்கிறது அப்படி என்றது விவாதம் இல்லை என்றதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இணையம் சீரழிக்கிறது என்பதைச் சொல்வது தான் தங்கள் வாதம் என்கிறார்.
ஒருவரின் அந்தரங்க படுக்கையறைக்குள் உலகத்தையே கொண்டு வருகின்ற இணையமானது எங்கோ ஒரு கோடியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை இன்னொரு முனையில் பல மைல்களுக்கு அப்பால் இருப்பவரது வீட்டிற்குள் கொட்டுகிறது அப்படி என்கிறார். ஐயா பொன்னையா.. இணையம் கொண்டு போய் கொட்டுதா இல்லை இணையத்தில நீங்கள் உள்ளிட்டு அள்ளுறியளா..?? பார்ப்போம் எதிரணியினர் கேட்கிறார்களா நாலு கேள்வி.
மேலும் அவர் தொடர்கையில் கூறுகிறார். ... இணையத்தில் நல்ல விடயங்களும் வருகிறது தானே நீங்கள் ஏன் குப்பையை மட்டும் கிளறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள் நாங்கள் விவாதிப்பது இளையோர் பற்றி என்கிறார். அத்தோடு புளுகர் போன்ற முதியவர்களுக்கு குப்பையாய் தெரிவது இளையோருக்கு நல்லதாய் தெரியலாம் என்கிறார். (அது ஒன்றும் இல்லை எல்லாம் வயசு செய்யிற வேலை.. புளுகர் மாதிரி வயசடைய எல்லாம் சரியாப்போயிடும்). அப்படியா..??
இன்னொரு கருத்தையும் வைத்துச் செல்கிறார். சீரழிபவர்கள் யாரும் தெரிந்து கொண்டு சீரழிவதில்லை.. சீரழிகிறோம் என்று தெரியாமலேயே சீரழிந்து போகிறார்கள். அப்படி சீரழிகிறவையை நல்வழிப்படுத்தவும் முடியவில்லை என்கிறார் காரணம் அவர்கள் நாலு சுவற்றுக்குள் அறையினுள் சத்தம் போடாமல் சீரழிவுகளை எதிர் கொள்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை இந்த இணையம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படி என்று கூறிச்செல்கிறார். பிள்ளை என்ன செய்யிது என்று தெரிஞ்சால் பெரியவர்கள் நல்வழிப்படுத்தலாம் கண்டிக்கலாம். பிள்ளை என்ன செய்கிறது என்றே தெரியாத நிலையில் எப்படி கண்டிப்பது நல்வழிப்படுத்துவது என்று கேட்கிறார் புளுகர் என்ன சொல்கிறீர்கள். பார்ப்போம் எதிரணியினர் கருத்தென்ன??
தொடர்ந்து பேசுகையில் இணையத்தின் பயன்கள் ஆயிரம் இருக்கலாம் அவற்றை பேசிப்பயனில்லை. சீரழிவையும் இணையம் கொடுக்கிறது சீரழிவிற்கு வழி வகுக்கிறது அப்படி என்று கூறிச் செல்கிறார். அத்தோடு இந்த இணைய சீரழிவினால் இளையோர் மற்றும் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் கூறிச்செல்கிறார். பொருட்கள் இழக்கப்படுகின்றன.. பெண்கள் கடத்தப்படுகிறார்கள்... வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள் இப்படியான சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன அப்படி என்று கூறிச்செல்கிறார். புளுகர் கூறிய இந்த சீரழிவுகள் எல்லாம் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு பொருந்துகிறாதா இதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?? எங்கே நன்மையடைகிறார்கள் என்ற அணியினர் இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புலம் பெயர்வாழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் இதுவே உண்மை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைத்துச் செல்கிறார். செல்கையில் இன்னொன்றையும் கூறிச்செல்கிறார். எதிரணியினர் இன்னும் விவாதத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று சொல்கிறார். அப்படியா..?? எங்கே பொங்கியெழும் எதிரணியினரின் கருத்து வெள்ளம் புளுகரின் இந்த கூற்றை அடித்துச் செல்கிறதா இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம். அளவாக தனது கருத்தை வைத்துச்சென்ற புளுகர் பொன்னையாவைத் தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

