01-17-2006, 10:02 PM
நன்றி , நன்றி மண்டபம் நிறைந்த உங்கள் கர கோசத்திற்கு மிக்க நன்றி........
மைக் டெஸ்டிங் வன்,டூ,திறி ...தம்பி கொன்சம் சத்தத்தைக் கூட்டும்.....ம் இப்ப ஒகே..
என் உயிரினும் மேலானா உடன் பிறப்புக்களே,என் இரத்தத்தின் இரத்தங்களே,உங்கள் ஆரவாரமான வரவேற்பைக் கண்டு உளம் மகிழ்ந்தோம் ,
முதற்கண் என் வணக்கத்தை இந்த மேடையிலே நடு நாயகமாக வீற்றிருக்கின்ற பெருங்குடி மகன் நடு நிலமையின் உறைவிடம் ஐயா செல்வமுத்து அவர்களுக்கும்,
பட்டாடை பளபளக்க ,கழுத்திலே பொன் நகை அலங்கரிக்க உதட்டிலே புன் நகை தவழ வீற்றிருக்கின்ற மூத்த உறுப்பினர் ,சிந்தனைச் செல்வி இனிய தமிழினி அவர்களுக்கும் செலுத்திக் கொள்கிறேன்.
அத்தோடு இந்த நிகழ்வை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் செயல் வீராங்கனை ரசிகை அவர்களுக்கும்,இந்த வாய்ப்புக்கு களம் அமைத்துக் கொடுத்த விற்பனர் மோகன் அவர்களுக்கும் எனது பாராடுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது தானைத் தலைவர் சொல்லின் செல்வர் சோழியன் அவர்கள் இந்த வெற்றி அணிக்கு
வழங்கிய ஆரம்ப உரையிலே விழுந்த அடியில் புத்தி பேதலித்து எமது எதிர் அணியினர் பட்டி மன்றத் தலைப்பயே மறந்து விட்டார்கள் போல் உள்ளது.
ஐயாமாரே ,அம்மாமாரே இந்தப் பட்டி மன்றத்தின் தலைப்புத் தான் என்ன?
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளயோர் இணய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா?அல்லது சீரைந்துபோகிறார்களா? என்பதுவே.ஆனால் எதிரணித் தலைவர் முதற்கொண்டு ,மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் மண்டையைக் குடைந்து கருத்து எழுதிய அம்மன் பக்தன் மதன் வரை இணயத்தின் பயன்களைப் பற்றியே கதை அளந்து கொண்டு இருகின்றனர்.இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு இணயத்தினால் ஏற்படும் பயன்களா என்ன?இதைச் சொல்லவா இந்தப் பட்டி மன்றம்.அட இதை ஒரு மூன்று வயசு குழந்தை கூடச் சொல்லுமே.
இங்கே முக்கியமாக விவாதிக்கப் படும் பொருள் தான் என்ன?இணயம் தமிழ் புலம் பெயர் இழயோரைச் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே?அங்கே ஒருவர் சொல்லுகிறார் அட இழஞ்சர் சீரழிய இணயமா வேணும் எண்டு.அட சீரழிய ஆயிரம் முறை இருக்கு.இணயம் மட்டும் தான் சீரழிக்கிறது என்பது அல்லவே பட்டி மன்றத்தின் விவாதப் பொருள்.இணையம் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே விவாதப் பொருள்.
அப்படியாயின் இந்த இணயம் எப்படியானது?ஒருவரின் அந்தரங்கமான படுக்கை அறைக்குள் இந்த உலகத்தையே கொண்டு வருகிறது.ஒரு நான்கு சுவர்களுக்குள் முழு உலகத்தயே சந்தமிடாமல் ஒரு சில சொடுக்கு கழுக்குள் கொண்டு வருகிறது.உலகத்தின் ஒரு கோடியில் வக்கிர உணர்வுடயோரினால் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி பல்லாயிரம் மைல் களுக்கப்பால் இருக்கும் ஒரு வரின் வீட்டிற்குள்ளே கொட்டுகிறது.அட அதில நல்ல விசயங்களும் வருகுது தானே நீங்கள் ஏன் குப்பயக் கிளறு றீங்க எண்டு கினம். அட இங்க நாங்கள் விவாதிக்கிறது இழயோர் பற்றி, எனக்கு குப்பயாத் தெரியிறது அவைக்கு வேற மாதிரித் தெரியுது.ஒருத்தரும் தெரின்ச்சு கொண்டு சீரழியிறேல்ல ,தெரியாமத் தான் சீரழியிறவை.அப்ப நீங்கள் பெரியாக்கள் நல் வழிப் படுத்தலாமே எண்டு சொல்லுகினம்.அங்க தானே பிரச்சினை இருக்கு.இவை குப்பயக் கிளறுகினம் எண்டு என்னண்டு தெரியும்?அது தான் சத்தம் போடாம குப்பய இறக்க வழி இருக்குதே அதத் தானே இந்த இணயம் செய்யுது.இணயம் என்ற தொழில் நுட்பம் எவ்வாறு எமது இளயவரை இலகுவான வழியில் சீரழிக்கிறது என்பது தானே இங்கே கவனதில் எடுக்கப் பட வேண்டிய விடயம்.
ஆகவே ஆயிரம் பயன்கள் இருக்கலாம் இணயத்திற்கு .அவற்றை இங்கே பட்டியல் இடுவதால் எது வித பயனும் இல்லை ஏனெனில் அது விவாதப் பொருள் அல்ல.இணயம் சீரழிக்கிறது.அது சீரழிப்பதற்கான வழியை இலகுவாக்கிறது.
இதனால் சீரழிபவர்களின் கண்ணீர் கதையை நாம் நாளாந்தம் பதிரிகைகளில் வாசிக்கிறோம், காதலர் போல் நடித்து ஏமாற்றி விடப்பட்ட இளயவர் ஆயிரம்.கடத்தப் பட்டு வன்புணர்ந்து ஈற்றில் கொல்லப் பட்டோர் ஆயிரம்.இவர்களின் குடும்பங்கள் பட்ட துன்பம் சொல்லி மாழாது.இவற்றை அறிந்தும் இங்கே இணயத்தின் சீர்கேட்டை மறந்து அல்லது மறைத்து ,இணயத்தின் நன்மைகளைப் பட்டியல் இடும் எமது எதிரணியினரை என்ன வென்று அழைப்பது.
ஆகவே நடுவர் அவர்களே இங்கே எதிரணியினர் இன்னும் விவாதத்தை தொடங்கக் கூட வில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இனி வருபவர்களும் அரைத்த மாவையே அரைப்பார்கள் போல் உள்ளது.இணயத்தால் இளயவர் சீரழிகின்றனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை,உண்மை என்று ஆணித்திரமாகக் கூறிக் கொண்டு ,எனக்குப் பின்னால் வரும் எமது அணியினருக்கு நேரத்தை வழங்கும் நோக்கில் எனது இந்த வாதத்தை முடிக்கிறேன். எதிர் அணியினர் இனியாவது விவாததிற்கான பொருளை விளங்கி தமது வாதங்களை முன் வைப்பார்கள் என்று நம்புகின்றேன்.அவர்கள் தமது வாததிற்குத் தேவயான வார்த்தைகளைத் தேடி அலைந்து இந்தப்பார்வை ஆளர்களின் பொன்னான மணித்துளிகளை வீணாக்காமல் , அவர்களின் பொறுமையைச் சோதிக்காமல் விரைந்து வந்து தமது வாதத்தை வைப்பார்கள் என்று எண்ணி அமர்கிறேன் ,
நன்றி,
வணக்கம்.
மைக் டெஸ்டிங் வன்,டூ,திறி ...தம்பி கொன்சம் சத்தத்தைக் கூட்டும்.....ம் இப்ப ஒகே..
என் உயிரினும் மேலானா உடன் பிறப்புக்களே,என் இரத்தத்தின் இரத்தங்களே,உங்கள் ஆரவாரமான வரவேற்பைக் கண்டு உளம் மகிழ்ந்தோம் ,
முதற்கண் என் வணக்கத்தை இந்த மேடையிலே நடு நாயகமாக வீற்றிருக்கின்ற பெருங்குடி மகன் நடு நிலமையின் உறைவிடம் ஐயா செல்வமுத்து அவர்களுக்கும்,
பட்டாடை பளபளக்க ,கழுத்திலே பொன் நகை அலங்கரிக்க உதட்டிலே புன் நகை தவழ வீற்றிருக்கின்ற மூத்த உறுப்பினர் ,சிந்தனைச் செல்வி இனிய தமிழினி அவர்களுக்கும் செலுத்திக் கொள்கிறேன்.
அத்தோடு இந்த நிகழ்வை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் செயல் வீராங்கனை ரசிகை அவர்களுக்கும்,இந்த வாய்ப்புக்கு களம் அமைத்துக் கொடுத்த விற்பனர் மோகன் அவர்களுக்கும் எனது பாராடுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது தானைத் தலைவர் சொல்லின் செல்வர் சோழியன் அவர்கள் இந்த வெற்றி அணிக்கு
வழங்கிய ஆரம்ப உரையிலே விழுந்த அடியில் புத்தி பேதலித்து எமது எதிர் அணியினர் பட்டி மன்றத் தலைப்பயே மறந்து விட்டார்கள் போல் உள்ளது.
ஐயாமாரே ,அம்மாமாரே இந்தப் பட்டி மன்றத்தின் தலைப்புத் தான் என்ன?
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளயோர் இணய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா?அல்லது சீரைந்துபோகிறார்களா? என்பதுவே.ஆனால் எதிரணித் தலைவர் முதற்கொண்டு ,மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் மண்டையைக் குடைந்து கருத்து எழுதிய அம்மன் பக்தன் மதன் வரை இணயத்தின் பயன்களைப் பற்றியே கதை அளந்து கொண்டு இருகின்றனர்.இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு இணயத்தினால் ஏற்படும் பயன்களா என்ன?இதைச் சொல்லவா இந்தப் பட்டி மன்றம்.அட இதை ஒரு மூன்று வயசு குழந்தை கூடச் சொல்லுமே.
இங்கே முக்கியமாக விவாதிக்கப் படும் பொருள் தான் என்ன?இணயம் தமிழ் புலம் பெயர் இழயோரைச் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே?அங்கே ஒருவர் சொல்லுகிறார் அட இழஞ்சர் சீரழிய இணயமா வேணும் எண்டு.அட சீரழிய ஆயிரம் முறை இருக்கு.இணயம் மட்டும் தான் சீரழிக்கிறது என்பது அல்லவே பட்டி மன்றத்தின் விவாதப் பொருள்.இணையம் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே விவாதப் பொருள்.
அப்படியாயின் இந்த இணயம் எப்படியானது?ஒருவரின் அந்தரங்கமான படுக்கை அறைக்குள் இந்த உலகத்தையே கொண்டு வருகிறது.ஒரு நான்கு சுவர்களுக்குள் முழு உலகத்தயே சந்தமிடாமல் ஒரு சில சொடுக்கு கழுக்குள் கொண்டு வருகிறது.உலகத்தின் ஒரு கோடியில் வக்கிர உணர்வுடயோரினால் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி பல்லாயிரம் மைல் களுக்கப்பால் இருக்கும் ஒரு வரின் வீட்டிற்குள்ளே கொட்டுகிறது.அட அதில நல்ல விசயங்களும் வருகுது தானே நீங்கள் ஏன் குப்பயக் கிளறு றீங்க எண்டு கினம். அட இங்க நாங்கள் விவாதிக்கிறது இழயோர் பற்றி, எனக்கு குப்பயாத் தெரியிறது அவைக்கு வேற மாதிரித் தெரியுது.ஒருத்தரும் தெரின்ச்சு கொண்டு சீரழியிறேல்ல ,தெரியாமத் தான் சீரழியிறவை.அப்ப நீங்கள் பெரியாக்கள் நல் வழிப் படுத்தலாமே எண்டு சொல்லுகினம்.அங்க தானே பிரச்சினை இருக்கு.இவை குப்பயக் கிளறுகினம் எண்டு என்னண்டு தெரியும்?அது தான் சத்தம் போடாம குப்பய இறக்க வழி இருக்குதே அதத் தானே இந்த இணயம் செய்யுது.இணயம் என்ற தொழில் நுட்பம் எவ்வாறு எமது இளயவரை இலகுவான வழியில் சீரழிக்கிறது என்பது தானே இங்கே கவனதில் எடுக்கப் பட வேண்டிய விடயம்.
ஆகவே ஆயிரம் பயன்கள் இருக்கலாம் இணயத்திற்கு .அவற்றை இங்கே பட்டியல் இடுவதால் எது வித பயனும் இல்லை ஏனெனில் அது விவாதப் பொருள் அல்ல.இணயம் சீரழிக்கிறது.அது சீரழிப்பதற்கான வழியை இலகுவாக்கிறது.
இதனால் சீரழிபவர்களின் கண்ணீர் கதையை நாம் நாளாந்தம் பதிரிகைகளில் வாசிக்கிறோம், காதலர் போல் நடித்து ஏமாற்றி விடப்பட்ட இளயவர் ஆயிரம்.கடத்தப் பட்டு வன்புணர்ந்து ஈற்றில் கொல்லப் பட்டோர் ஆயிரம்.இவர்களின் குடும்பங்கள் பட்ட துன்பம் சொல்லி மாழாது.இவற்றை அறிந்தும் இங்கே இணயத்தின் சீர்கேட்டை மறந்து அல்லது மறைத்து ,இணயத்தின் நன்மைகளைப் பட்டியல் இடும் எமது எதிரணியினரை என்ன வென்று அழைப்பது.
ஆகவே நடுவர் அவர்களே இங்கே எதிரணியினர் இன்னும் விவாதத்தை தொடங்கக் கூட வில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இனி வருபவர்களும் அரைத்த மாவையே அரைப்பார்கள் போல் உள்ளது.இணயத்தால் இளயவர் சீரழிகின்றனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை,உண்மை என்று ஆணித்திரமாகக் கூறிக் கொண்டு ,எனக்குப் பின்னால் வரும் எமது அணியினருக்கு நேரத்தை வழங்கும் நோக்கில் எனது இந்த வாதத்தை முடிக்கிறேன். எதிர் அணியினர் இனியாவது விவாததிற்கான பொருளை விளங்கி தமது வாதங்களை முன் வைப்பார்கள் என்று நம்புகின்றேன்.அவர்கள் தமது வாததிற்குத் தேவயான வார்த்தைகளைத் தேடி அலைந்து இந்தப்பார்வை ஆளர்களின் பொன்னான மணித்துளிகளை வீணாக்காமல் , அவர்களின் பொறுமையைச் சோதிக்காமல் விரைந்து வந்து தமது வாதத்தை வைப்பார்கள் என்று எண்ணி அமர்கிறேன் ,
நன்றி,
வணக்கம்.

