01-12-2004, 12:13 PM
<b>ஒத்துழைப்பு ஒப்பந்தமா? இராணுவ ஒப்பந்தமா?</b>
நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பாக ஜனாதிபதிக்கும் அரசின் தலைவர் பிரதமருக்கும் இடையிலான இழுபறி நீடிக்கின்றது. நாட்டின் மிக முக்கிய தேசியப் பிரச்சினையான இனப்பூசலுக்கு அமைதித்தீர்வு காணும் முயற்சிகளை பிரதமர் தொடர்வதா அல்லது ஜனாதிபதி பொறுப்பேற்றபதா என்ற சர்ச்சையும் கூட நீடிக்கின்றது.
இப்படி சிங்களப் பேரினவாதிகள் அதிகாரம் தொடர்பாகவும் அமைதி முயற்சிகள் சம்பந்தமாகவும் தங்களுக்குள் இழுபறிப்பட்டுஇ சர்ச்சை செய்து கொண்டிருந்தாலும் வேறு ஒரு விடயம் மட்டும் இருதரப்பு இணக்கத்துடன் ஏகமனதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்த இணக்கம் ஒன்றுக்கு வருவது தொடர்பான ஏற்பாடுகள் பற்றிய விடயமே அது.
உத்தேசிக்கப்பட்டிருப்பது இராணுவ ஒப்பந்தமா அல்லது இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வெறும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமே அது என்று வெளியில் பூசி மெழுகும் முயற்சியில் இரண்டு நாட்டுப் பிரமுகர்களும்இ அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது வேறுவிடயம். கடந்த ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைஇ இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோதே இந்த ஒப்பந்தம் குறித்து முதன் முதலில் தகவல் வெளியிடப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு தற்போது இந்தியா வழங்கும் இராணுவப் பயிற்சிகள்இ ஆயுத தளபாட விநியோகங்கள் ஆகியவை குறித்துத் தமக்குள் கலந்துரையாடிய இரு நாட்டுப் பிரதமர்களும்இ விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நோக்கில் இரு தரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பது என முடிவு செய்தனர். -என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த டிசெம்பர் முற்பகுதியில் இராணுவத் தளபதியும் இலங்கைப் படைகளின் சிரேஷ்ட அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பூர்வாங்கப் பேச்சுக்களை ஆரம்பித்தார். அதன் பின்னர் நாடு திரும்பிய அவர்இ இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று அறிவித்தார். உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல்இ பாக்கு நீரிணையில் இந்தியக் கடற்படை கரையோரக் காவல்;படை மற்றும் இலங்கைக் கடற்படை ஆகியன கூட்டு ரோந்தில் ஈடுபடல்இ இலங்கைப்படையினருக்கு இந்தியாவில் உயர் இராணுவப் பயிற்சிகளை வழங்கல்இ யுத்ததளபாடங்களையும்இ ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை இரு தரப்புக்கும் இடையில் முனைப்பாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றியிருப்பதாக அவர் அறிவித்தார்.
இப்போது பன்னிரண்டாவது சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிகாஇ அங்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் ஏனைய மூத்த இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அப்போது இந்தப்பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினார்கள் என்று அறியவருகிறது. இதனையடுத்து உத்தேச ஒப்பந்த ஏற்பாடுகளை இறுதியாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக்குழு ஒன்றை நாளை மறுதினம் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கிறார் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் சிறில் ஹேரத் தலைமையில் செல்லும் இக்குழுவில் லெப்டின்ட் ஜெனரல் பலகல்லவும் மற்றும் சட்டத் தரணி ஒருவரும் இடம்பெறுகின்றனர் எனத் தெரிகின்றது. ஆனால்இ இத்தகைய விடயங்களில் பேச்சு நடத்தும் குழுவில் வழமையாக இடம்பெறும் - வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் - பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அலுவலகங்களும் ஐ.தே.முன்னணி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் என்னவோ அவற்றைச் சேர்த்த பிரதிநிதிகளை ஒதுக்கிவிட்டு தமது குழுவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனாதிபதி.
ஐ.தே.முன்னணி - பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவை இரண்டுக்கும் இடையிலான பிரச்சினைகள் இழுபறிப்பட்டு தொடர்ந்தாலும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான இராணுவ வல்லமையைக் கட்டி எழுப்பும் சிங்களப் பேரினவாதத்தின் முயற்சி மட்டும் தங்கு தடையின்றித் தொடரும் என்பதை நிரூபிக்கும் மற்றொரு செயல்பாடு இது. ஈழத்தழிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தோடும் வலுமிக்க சக்தியோடும் திகழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை உடைப்பதற்கு இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பேரினவாதமும் கூட்டுச் சேர்வதையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது.
:roll:
நன்றி: உதயன்
நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பாக ஜனாதிபதிக்கும் அரசின் தலைவர் பிரதமருக்கும் இடையிலான இழுபறி நீடிக்கின்றது. நாட்டின் மிக முக்கிய தேசியப் பிரச்சினையான இனப்பூசலுக்கு அமைதித்தீர்வு காணும் முயற்சிகளை பிரதமர் தொடர்வதா அல்லது ஜனாதிபதி பொறுப்பேற்றபதா என்ற சர்ச்சையும் கூட நீடிக்கின்றது.
இப்படி சிங்களப் பேரினவாதிகள் அதிகாரம் தொடர்பாகவும் அமைதி முயற்சிகள் சம்பந்தமாகவும் தங்களுக்குள் இழுபறிப்பட்டுஇ சர்ச்சை செய்து கொண்டிருந்தாலும் வேறு ஒரு விடயம் மட்டும் இருதரப்பு இணக்கத்துடன் ஏகமனதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்த இணக்கம் ஒன்றுக்கு வருவது தொடர்பான ஏற்பாடுகள் பற்றிய விடயமே அது.
உத்தேசிக்கப்பட்டிருப்பது இராணுவ ஒப்பந்தமா அல்லது இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வெறும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தமே அது என்று வெளியில் பூசி மெழுகும் முயற்சியில் இரண்டு நாட்டுப் பிரமுகர்களும்இ அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது வேறுவிடயம். கடந்த ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைஇ இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் சந்தித்துப் பேசியபோதே இந்த ஒப்பந்தம் குறித்து முதன் முதலில் தகவல் வெளியிடப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு தற்போது இந்தியா வழங்கும் இராணுவப் பயிற்சிகள்இ ஆயுத தளபாட விநியோகங்கள் ஆகியவை குறித்துத் தமக்குள் கலந்துரையாடிய இரு நாட்டுப் பிரதமர்களும்இ விரைவில் இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் நோக்கில் இரு தரப்புப் பேச்சுக்களை ஆரம்பிப்பது என முடிவு செய்தனர். -என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த டிசெம்பர் முற்பகுதியில் இராணுவத் தளபதியும் இலங்கைப் படைகளின் சிரேஷ்ட அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பூர்வாங்கப் பேச்சுக்களை ஆரம்பித்தார். அதன் பின்னர் நாடு திரும்பிய அவர்இ இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று அறிவித்தார். உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல்இ பாக்கு நீரிணையில் இந்தியக் கடற்படை கரையோரக் காவல்;படை மற்றும் இலங்கைக் கடற்படை ஆகியன கூட்டு ரோந்தில் ஈடுபடல்இ இலங்கைப்படையினருக்கு இந்தியாவில் உயர் இராணுவப் பயிற்சிகளை வழங்கல்இ யுத்ததளபாடங்களையும்இ ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை இரு தரப்புக்கும் இடையில் முனைப்பாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றியிருப்பதாக அவர் அறிவித்தார்.
இப்போது பன்னிரண்டாவது சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி சந்திரிகாஇ அங்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாயையும் ஏனைய மூத்த இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அப்போது இந்தப்பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினார்கள் என்று அறியவருகிறது. இதனையடுத்து உத்தேச ஒப்பந்த ஏற்பாடுகளை இறுதியாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக்குழு ஒன்றை நாளை மறுதினம் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கிறார் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் சிறில் ஹேரத் தலைமையில் செல்லும் இக்குழுவில் லெப்டின்ட் ஜெனரல் பலகல்லவும் மற்றும் சட்டத் தரணி ஒருவரும் இடம்பெறுகின்றனர் எனத் தெரிகின்றது. ஆனால்இ இத்தகைய விடயங்களில் பேச்சு நடத்தும் குழுவில் வழமையாக இடம்பெறும் - வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் - பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அலுவலகங்களும் ஐ.தே.முன்னணி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் என்னவோ அவற்றைச் சேர்த்த பிரதிநிதிகளை ஒதுக்கிவிட்டு தமது குழுவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனாதிபதி.
ஐ.தே.முன்னணி - பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவை இரண்டுக்கும் இடையிலான பிரச்சினைகள் இழுபறிப்பட்டு தொடர்ந்தாலும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான இராணுவ வல்லமையைக் கட்டி எழுப்பும் சிங்களப் பேரினவாதத்தின் முயற்சி மட்டும் தங்கு தடையின்றித் தொடரும் என்பதை நிரூபிக்கும் மற்றொரு செயல்பாடு இது. ஈழத்தழிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தோடும் வலுமிக்க சக்தியோடும் திகழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பலத்தை உடைப்பதற்கு இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பேரினவாதமும் கூட்டுச் சேர்வதையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது.
:roll:
நன்றி: உதயன்

