Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை
#4
<b><span style='color:red'>வன்முறைகள் குறித்து கோபி அனான் கவலை:

சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் உடனடியாக நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் வலியுறுத்தியுள்ளார்.


சிறிலங்காவில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் யுத்த அச்சம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் -

படுமோசமான நிலைமையை அடைந்துள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக தான் மிகுந்த கவலையடைவதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புக் குழு அலுவலகம் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறித்து தான் வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

"நாட்டு மக்களுக்கு ஒரு புதிய சகாப்தத்துக்கான நம்பிக்கையையும் கடந்த நான்கு வருடகாலமாக கணிசமான பலா பலன்களையும் அளித்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. மீண்டும் தொடங்கியுள்ள இந்த வன்முறைகள் திரும்பவும் பொதுமக்களுக்கு கடுமையாக அனுபவங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளது.

"மீண்டும் யுத்தத்துக்கு திரும்புவது இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

"ஆகவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்து,அதன்மூலம் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பும் மரியாதையும் அளித்து நேரடி சமாதானப்பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்." - என்று அவர் கோரியுள்ளார்.</span>

[b]<i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 12:07 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 01:23 PM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 02:12 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 06:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)