01-17-2006, 12:04 PM
<b>பேச்சுக்களை ஆரம்பிக்க உலக வங்கி வலியுறுத்து! </b>
வன்முறைகளை உடனடியாக நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி கொழும்புக்கான உலக வங்கி இயக்குநர் பீற்றர் ஹெரோல்ட் சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் கோரியுள்ளார்.
மோசமடைந்து செல்லும் தற்போதைய நிலைமையில் எட்டப்படாத உடனடி முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் விழுந்த ஆழமான வடுவாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய பன்னாட்டு அமைப்புக்கள் போலவே தானும் இருதரப்பையும் வன்முறைகளை கைவிட்டுவிட்டு கூடிய விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி வலியுறுத்துவதாக கூறியுள்ள உலக வங்கி இயக்குநர், தனது எதிர்பார்ப்பு தொடர்பில் சாதகமான திருப்புமுனைக்காக நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் வருகையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான எமது அமைப்பின் உதவி, கடந்த 20 ஆண்டுகளாகவே அமைதி நிலையின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே, அரசும் விடுதலைப் புலிகளும் இயலுமான விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
வன்முறைகளை உடனடியாக நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி கொழும்புக்கான உலக வங்கி இயக்குநர் பீற்றர் ஹெரோல்ட் சிறிலங்கா அரசையும் விடுதலைப் புலிகளையும் கோரியுள்ளார்.
மோசமடைந்து செல்லும் தற்போதைய நிலைமையில் எட்டப்படாத உடனடி முன்னேற்றம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் விழுந்த ஆழமான வடுவாகவே அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய பன்னாட்டு அமைப்புக்கள் போலவே தானும் இருதரப்பையும் வன்முறைகளை கைவிட்டுவிட்டு கூடிய விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி வலியுறுத்துவதாக கூறியுள்ள உலக வங்கி இயக்குநர், தனது எதிர்பார்ப்பு தொடர்பில் சாதகமான திருப்புமுனைக்காக நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் வருகையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான எமது அமைப்பின் உதவி, கடந்த 20 ஆண்டுகளாகவே அமைதி நிலையின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே, அரசும் விடுதலைப் புலிகளும் இயலுமான விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்வரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

