01-11-2004, 05:03 PM
ஒரு தடவை ஒரு மாமிசம் விற்பவன் வயதான ஒரு பசுவை வாங்கி வெட்டுவதற்காக இழுத்து வந்;துகொண்டிருந்தான். அது வரமறுக்கவே அதை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்தான். மதியமாகிவிட களைப்படைந்த அவன் பசுவை ஓரிடத்தில் கட்டிவிட்டு அருகே எங்;கும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா என தேடிச்சென்றான். ஓரு வீட்டில் அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு வந்த இவனையும் அழைத்து திருப்தியாக சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பசி மற்றும் களைப்பு நீங்கியதால் புது பலத்துடன் மீண்டும் பசுவை அடித்து கொடுமைசெய்;து மாமிசம் வெட்டும் இடத்திற்கு இழுத்;துச்சென்றான். அங்கே அதைகொன்று மாமிசத்தை விற்றான். பசுவைக்கொன்ற பாவத்தில் பாதி அவனுக்கும் மீதி அவன் குறிக்கோள் என்ன என்பது எதுவும் அறியாது சாப்பாடு போட்டு அவன் மீண்டும் புதுப்பலத்துடன் பசுவை இழுத்துச்சென்று கொல்ல உதவிய அந்த நல்;லவர்களுக்கு போய்ச்சேர்ந்தது. ஆகவே நாம் நல்லது செய்தாலும் அது சரியானவர்களுக்கு போய்ச்சேர்கிறதா என அறிந்தே செய்;யவேண்டும். இல்லையேல் நமக்கு புண்ணியத்திற்கு பதிலாக பாவமே வந்து சேரும்.

