01-17-2006, 04:20 AM
மாட்டுப்பொங்கல் முடிந்தும் மதனைக் காணவில்லையே என்று அனைவரையும் சிலநாள் ஏங்கவைத்து, அவரவர் சந்தேகங்களையும் தினம்தினம் ஓங்கவைத்து, அவசரமாக வந்து தனது கருத்துக்களை முன்வைத்துச் சென்றுவிட்டார் மதன். "பொறுத்தார் புூமியாள்வார்" என்பதைப்போல் தனது கருத்துக்களை ஆதாரங்களுடன் வைத்துள்ளார். இவற்றை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா?
எதிரணியினர் வாதாடவேண்டும் என்பதற்காக வாதாடுகின்றார்கள் என்றார். இரு அணியினர் வாதாடும்போது இது இயல்புதானே? எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே! இப்படி நான் கூறவில்லை, இக்கருத்துப்பட மதன் கூறுகின்றார். எதிரணியினரின் பதில் என்னதான் என்று பார்ப்போம்.
அஜீவனின் வாதத்திறமையைப் பார்த்து தான் வியந்துபோய்விட்டதாகக் கூறியது உண்மைதான். வியந்ததற்கான காரணத்தை விளக்கிய மதனின் வாதத்தை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்.
துணிவிலகிய காட்சிகளைப்பற்றி காரசாரமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. மதன் ஒரு பத்திரிகையையும், தொலைக்காட்சிகளையும், கனடா நாட்டையும் உதாரணம் காட்டினார். எதிரணியினர் இதனையும் ஏற்றுக்கொள்வார்களா?
மணவாழ்க்கை நீடிக்கவேண்டுமென்றால் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக அவசியம். பெற்றோருக்காகவும், மற்றோருக்காகவும் திருமணம் செய்து கடமைக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் பலரையும், திருமணத்தின் பின்னர் ஒன்றாக வாழமுடியாமல் விவாகரத்தில் முடிகின்ற எத்தனையே குடும்பங்களையும் நம் தமிழ்ச்சமுதாயத்தில் காண்கிறோம். தமது வாழ்க்கைத்துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இன்றைய இளைஞர்களில் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமணத்தின் முன்னர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இணையம் நல்லதொரு ஊடகம் என்றார் மதன். கணினி வழியாக காதலராகிய கதையினைக்கொண்ட "காதலர் தினம்" என்கின்ற திரைப்படம் என் நினைவிற்கு வருகின்றது. காலம் மாறிவிட்டது, காதலிப்பதற்கு கணினியைப் பாவிப்பதில் தவறு என்ன இருக்கின்றது? இதற்கு எதிரணியினரின் பதில் என்னவாக இருக்கும்?
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய நன்மைதரும் சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டினார். தமிழ்ப்படப்பாடல்களையும், ஆங்கிலப்பாடல்களையும் தரைவிறக்கம் செய்வதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலவசமாகக் கிடைக்காதா? என்றவர் உடனேயே இலவசமாகக் கிடைக்கின்றது என்கிறார் என்பதையும் எளிதாகச் சுட்டிக்காட்டினார் மதன்.
வலைப்பதிவுகள் பற்றியும், பொது எழுத்துரு பற்றியும் சிறு விளக்கமும் தந்தார்.
மதனின் வாதத்திறமையைப் பார்த்துவிட்டுத்தான் வர்ணன் தான் எழுதிய கருத்தையே இடம்மாறி வைத்துவிட்டாரோ?
காலந்தாழ்த்தி களத்திலே வந்து தன் கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறார் மதன். இது அவரின் அனுபவமோ அல்லது அலசி ஆராயும் திறனோ தெரியவில்லை. ஒருவேளை பொங்கல் கொடுத்து புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.
ஒவ்வொருவரும் அவரவர் வாதங்களை முன்வைக்கும்போது தம் திறமைக்கேற்ப சிறப்பாகவே செய்கின்றார்கள். இருபக்க வாதங்களையும் பார்க்கும்போது இரு அணியினருக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகமிகக்குறைவாக உள்ளதாகவே படுகிறது.
இனி வரவிருப்பவர்களில் குருக்காலபோவான் குறுக்கால போவாரோ? அல்லது நாரதர் கலகம் நன்மையில் முடியுமோ? அல்லது புளுகர்பொன்னையா புளுகித்தள்ளுவாரோ? அல்லது காக்கைவன்னியன் காட்டிக்கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிரணியினர் வாதாடவேண்டும் என்பதற்காக வாதாடுகின்றார்கள் என்றார். இரு அணியினர் வாதாடும்போது இது இயல்புதானே? எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே! இப்படி நான் கூறவில்லை, இக்கருத்துப்பட மதன் கூறுகின்றார். எதிரணியினரின் பதில் என்னதான் என்று பார்ப்போம்.
அஜீவனின் வாதத்திறமையைப் பார்த்து தான் வியந்துபோய்விட்டதாகக் கூறியது உண்மைதான். வியந்ததற்கான காரணத்தை விளக்கிய மதனின் வாதத்தை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்.
துணிவிலகிய காட்சிகளைப்பற்றி காரசாரமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. மதன் ஒரு பத்திரிகையையும், தொலைக்காட்சிகளையும், கனடா நாட்டையும் உதாரணம் காட்டினார். எதிரணியினர் இதனையும் ஏற்றுக்கொள்வார்களா?
மணவாழ்க்கை நீடிக்கவேண்டுமென்றால் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக அவசியம். பெற்றோருக்காகவும், மற்றோருக்காகவும் திருமணம் செய்து கடமைக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் பலரையும், திருமணத்தின் பின்னர் ஒன்றாக வாழமுடியாமல் விவாகரத்தில் முடிகின்ற எத்தனையே குடும்பங்களையும் நம் தமிழ்ச்சமுதாயத்தில் காண்கிறோம். தமது வாழ்க்கைத்துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இன்றைய இளைஞர்களில் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமணத்தின் முன்னர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இணையம் நல்லதொரு ஊடகம் என்றார் மதன். கணினி வழியாக காதலராகிய கதையினைக்கொண்ட "காதலர் தினம்" என்கின்ற திரைப்படம் என் நினைவிற்கு வருகின்றது. காலம் மாறிவிட்டது, காதலிப்பதற்கு கணினியைப் பாவிப்பதில் தவறு என்ன இருக்கின்றது? இதற்கு எதிரணியினரின் பதில் என்னவாக இருக்கும்?
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய நன்மைதரும் சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டினார். தமிழ்ப்படப்பாடல்களையும், ஆங்கிலப்பாடல்களையும் தரைவிறக்கம் செய்வதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலவசமாகக் கிடைக்காதா? என்றவர் உடனேயே இலவசமாகக் கிடைக்கின்றது என்கிறார் என்பதையும் எளிதாகச் சுட்டிக்காட்டினார் மதன்.
வலைப்பதிவுகள் பற்றியும், பொது எழுத்துரு பற்றியும் சிறு விளக்கமும் தந்தார்.
மதனின் வாதத்திறமையைப் பார்த்துவிட்டுத்தான் வர்ணன் தான் எழுதிய கருத்தையே இடம்மாறி வைத்துவிட்டாரோ?
காலந்தாழ்த்தி களத்திலே வந்து தன் கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறார் மதன். இது அவரின் அனுபவமோ அல்லது அலசி ஆராயும் திறனோ தெரியவில்லை. ஒருவேளை பொங்கல் கொடுத்து புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.
ஒவ்வொருவரும் அவரவர் வாதங்களை முன்வைக்கும்போது தம் திறமைக்கேற்ப சிறப்பாகவே செய்கின்றார்கள். இருபக்க வாதங்களையும் பார்க்கும்போது இரு அணியினருக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகமிகக்குறைவாக உள்ளதாகவே படுகிறது.
இனி வரவிருப்பவர்களில் குருக்காலபோவான் குறுக்கால போவாரோ? அல்லது நாரதர் கலகம் நன்மையில் முடியுமோ? அல்லது புளுகர்பொன்னையா புளுகித்தள்ளுவாரோ? அல்லது காக்கைவன்னியன் காட்டிக்கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

