01-16-2006, 09:19 PM
<b>வெள்ளத்தால் பாதிப்புற்ற சித்தாண்டி மக்களுக்கு நிவாரணமில்லை!
மட்டக்களப்பு சித்தாண்டியில் தொடர்மழை மற்றும் குளங்கள் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாளாகியும் இன்னும் எதுவித உதவிகளும் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த தினங்களாக பெய்த அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வயல் பகுதி மற்றும் சித்தாண்டி 4ம் குறிச்சி பகுதி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டு மூன்று நாளாகியும் இதுவரையில் அவர்களுக்கான உலர் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் எவராலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்கள் தமக்கு பொருள் கஸ்டமாகவுள்ளதாகவும், வீடுகளுக்குள் உயர் பரண்களை அமைத்து தங்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏதாவது பொது இடங்களில் இடம் பெயர்ந்தால் மாத்திரம் நிவாரணம் பெறமுடியும் என அப்பகுதி பிரதேச செயலாளர்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
<i>[b]தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
மட்டக்களப்பு சித்தாண்டியில் தொடர்மழை மற்றும் குளங்கள் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாளாகியும் இன்னும் எதுவித உதவிகளும் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த தினங்களாக பெய்த அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வயல் பகுதி மற்றும் சித்தாண்டி 4ம் குறிச்சி பகுதி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டு மூன்று நாளாகியும் இதுவரையில் அவர்களுக்கான உலர் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் எவராலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்கள் தமக்கு பொருள் கஸ்டமாகவுள்ளதாகவும், வீடுகளுக்குள் உயர் பரண்களை அமைத்து தங்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏதாவது பொது இடங்களில் இடம் பெயர்ந்தால் மாத்திரம் நிவாரணம் பெறமுடியும் என அப்பகுதி பிரதேச செயலாளர்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
<i>[b]தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

