01-16-2006, 10:04 AM
<i><b>பெரு வெள்ளம் காரணமாக மன்னம்பிட்டி - மட்டக்களப்பு போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் வடிந்து வருகின்ற போதும், மட்டக்களப்பு - மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டள்ளது. பட்டிருப்பில் மண்டூர் படகுச்சேவை இயங்கா நிலையில் காணப்படுகிறது. வேற்றுச்சேனையில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
களுவாஞ்சிக்குடி, அரையம்பதி, காத்தான்குடி, கிரான், மட்டக்களப்பு, வவுணதீவு, ஆகிய பிரதேசங்களில் வெள் நீர் வடிந்து வருகின்றபோதும், அகதி முகாம்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை படுவான்கரை பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான வயல்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.
பொலனறுவை, மின்னேரியாகுளம், என்பன திறக்கப்பட்டதனால் வாகரை மற்றும் கதிரவெளி பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
பொலனறுவைப் பிரதேசத்தில் பராக்கிரமபாகு சமுத்திரத்தின் வான்கதவுகள் பத்தும் திறக்கப்பட்டதனால் இருநூறு குடும்பங்கள் இடம்பெயாந்துள்ளதுடன் 50 அயிரம் ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் மன்னம்பிட்டி பாலத்தின் மேலால் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
[i][b]தகவல் மூலம்- சங்கதி</b></i>
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் வடிந்து வருகின்ற போதும், மட்டக்களப்பு - மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டள்ளது. பட்டிருப்பில் மண்டூர் படகுச்சேவை இயங்கா நிலையில் காணப்படுகிறது. வேற்றுச்சேனையில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
களுவாஞ்சிக்குடி, அரையம்பதி, காத்தான்குடி, கிரான், மட்டக்களப்பு, வவுணதீவு, ஆகிய பிரதேசங்களில் வெள் நீர் வடிந்து வருகின்றபோதும், அகதி முகாம்களில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை படுவான்கரை பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான வயல்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.
பொலனறுவை, மின்னேரியாகுளம், என்பன திறக்கப்பட்டதனால் வாகரை மற்றும் கதிரவெளி பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
பொலனறுவைப் பிரதேசத்தில் பராக்கிரமபாகு சமுத்திரத்தின் வான்கதவுகள் பத்தும் திறக்கப்பட்டதனால் இருநூறு குடும்பங்கள் இடம்பெயாந்துள்ளதுடன் 50 அயிரம் ஏக்கர் வயல்நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் மன்னம்பிட்டி பாலத்தின் மேலால் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
[i][b]தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

