Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம்
#1
[size=18][b]லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் செய்யப்பட்டது


இன்று காலை 7மணியளவில் பரந்தன் சந்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல். குட்டிசிறீ அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் ஏற்றிவைத்தார்.தமிழீழத் தேசியக் கொடியினை குட்சிறீ படையணியின் சிறப்புத்தளபதி கோபால் அவர்கள் ஏற்றிவைத்தார்.இந்த நினைவுத்தூபியினை வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.
;.இந்நிகழ்வில் சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர். க.வே பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் தமிழர் சேனையின் பல வெற்றிகளுக்க இவ் மோட்டார் படையணியின் பங்கு மிக முக்கியமானது.இவ் நினைவுத் தூபி நினைவுநாள் மிகமுக்கிமானதென்றும் இதே நாளில் தான் நாங்கள் கேணல் கிட்டுவினை இழந்தோம்.1983 ம் ஆண்ட யாழில் இராணுவத்தின் மோட்டார் தாக்குதலுக்கு உட்பட்ட நாம் அந்த வேளையில் தான் குட்சிறீ மோட்டார் தொடர்பான ஓர் வெற்றிளைக் கண்டு பிடித்தார் குட்சிறீயின் பின்னர் தலைவர் அவர்கள் 1990 மார்கழி மாதம் 01ம் திகதி மோட்டார் படையணியினை உருவாக்கினார்.இந்தப் படையணியின் தீச்சுவாலைக்கு எதிரான சாதனைகள் சிங்கள இராணுவம் மட்டுமன்றி உலகமே அறிந்தவை இனியும் இப்படையணியின் வெற்றியை உலகம் அறியத்தான் போகிறது

தகவல் மூலம்- சங்கதி
"
"
Reply


Messages In This Thread
லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் - by மேகநாதன் - 01-16-2006, 07:07 AM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 05:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)