Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கலோ பொங்கல்!
#1
<b>ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன்
மேதினிதழைக்க வேர்வை சிந்தி-
ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ
பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>


<b>மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட -
வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள-
பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு!
சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி-
சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>ஊர்மனையாவிலும் பால் சொரிந்து - உறைந்த
இருளில் கிடந்தவர் வாயிலெங்கும் அகல்விளக்கேற்றி
சேதிகள் இனியாவும் நல்லதென்றே வரும் இந்த செந்தமிழர்நாள் முதல் ஒருவாழ்வு வரும்... என்று

கதிரவனிடம் எமக்கு சொல்ல சொல்லு!
கவலை தரவேண்டாமினியும் என்று அவன் காதில் சொல்லு!
தாயகத்தின் கண்ணீர் நிறுத்தச்சொல்லி ததிங்கிணத்தோம்-என்று
பாடு பாடு குயிலே பொங்கலோ பொங்கல்!!</b>

-வர்ணன் -
-!
!
Reply


Messages In This Thread
பொங்கலோ பொங்கல்! - by வர்ணன் - 01-14-2006, 10:29 PM
[No subject] - by Rasikai - 01-16-2006, 09:29 PM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 10:39 PM
[No subject] - by தூயா - 01-18-2006, 01:13 AM
[No subject] - by RaMa - 01-18-2006, 05:36 AM
[No subject] - by sWEEtmICHe - 01-22-2006, 01:13 PM
[No subject] - by ப்ரியசகி - 01-22-2006, 01:35 PM
[No subject] - by கீதா - 01-22-2006, 01:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)