01-14-2006, 09:32 AM
[size=18]<b>மட்டு. படுவான்கரையிலும் வெள்ளம்! </b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேற்று ஊரக மேம்பாட்டு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் க.அரிகரன், மாவட்ட மேம்பாட்டுச் செயலாளர் அ.துரைசிங்கம் மற்றும் பிரதேச மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் ஆகியோர் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்திருக்கும் மக்களை பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்ட அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்,
இம்மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேற்று ஊரக மேம்பாட்டு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் க.அரிகரன், மாவட்ட மேம்பாட்டுச் செயலாளர் அ.துரைசிங்கம் மற்றும் பிரதேச மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் ஆகியோர் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்திருக்கும் மக்களை பார்வையிட்டுள்ளதோடு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்ட அரச அதிபருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்,
இம்மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

