Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு!
#1
<b>மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! </b>


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு வாழைச்சேனை - ஏறாவூர் மிச்சநகர் போன்ற கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பராக்கிரமபாகு சமுத்திரத்தின் கதவுகள் பத்தும் திறந்து விடப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு - மன்னம்பிட்டிப் பாலத்திற்குச் சமீபமாக நீர் பாய்வதால் மட்டக்களப்பு - திருமலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! - by மேகநாதன் - 01-14-2006, 09:28 AM
[No subject] - by மேகநாதன் - 01-14-2006, 09:32 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 08:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 10:04 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)