Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்ட கதை
#5
ஒரு ஊரில ஒரு குடியானவன் இருந்தான் அவன் பற்று நீங்கி கடவுளை அடையும் வழியில் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டான் அதற்காக நெடுநாளாய் முயன்றான் முடியவில்லை. மீண்டும் மீண்டும் உலகவாழ்வில் மாட்டிக்கொண்டு தவித்தான். ஒரு நாள் ஆற்றங்கரையில் அமர்ந்து தூண்டில் இட்டு மீன்பிடித்துக்கொண்டு இருந்தான். அப்போது அங்கே ஒரு புூனைக்குட்டி வந்தது. தான் பிடித்த ஒரு மீனை அதற்கு உணவாக தூக்கி வீசினான். புூனைக்குட்டியும் ஆசையுடன் கவ்விக்கொண்டது அது உண்பதற்கு உகந்த இடத்திற்கு எடுத்துசெல்ல எத்தணித்தது. அதற்குள் மரத்தில் இதைப்பார்த்துக்கொண்டிருந்த காகங்கள் பறந்து வந்துவிட்டன. அவை அந்த மீனைப்பறிக்க முயற்சித்தன. சுத்திச்சுத்தி பறந்தன. நேரம் ஆக ஆக நிறையக்காகங்கள் சேர்ந்துகொண்டன. புூனைக்குட்டி அங்கும் இங்கும் ஓடி மீனுடன் தப்ப நினைத்தது பாவம் அதனால் முடியவில்லை. காகங்கள்தான் தொந்தரவு செய்தன என்றால் எங்கிருந்தோ புதிதாய் வநதவேறுசில புூனைக்குட்டிகளும் இதில் சேர்நதுகொண்டன. இதையெல்லாம் வெகுநேரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த குடியானவன். திடீரென அந்தச்சின்னப் புூனைக்குட்டி மீனை போட்டுவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டது. வேகமாக வநத இன்னொரு புூனைக்குட்டி அதை எடுத்துக்கொண்டது. இப்போது காகங்கள் அந்த புதிய புூனைக்குட்டியைசுற்றி பறக்க ஆரம்பித்தன. மற்றப்புூனைக்குட்டியும் அதைபின்தொடர்ந்து ஓடியது. மீனை கீழே போட்ட புூனைக்குட்டியை எவையும் ஒன்றும் செய்யவில்லை. அது அமைதியாக இருந்தது. குடியானவன் திடீரென எழுந்து ஓடிவந்தான் அந்தப்புூனைக்குட்டியை எடுத்து நீ தான் என் குரு என்று அணைத்துக்கொண்டான். இத்தனைநாள் என்னைச சுற்றி சுற்றி வரும் பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாது தவித்தேன் எவ்வளவு அழகாக அதைப்புரியவைத்துவிட்டாய் என்றுமகிழ்ந்தான். அன்றே ஆசைகளைத்துறந்து துறவு வாழ்வைமேற்கொண்டான். பின்னாளில் பெரிய ஞானியானான்.
Reply


Messages In This Thread
கேட்ட கதை - by aathipan - 01-05-2004, 04:40 PM
[No subject] - by Tharavai - 01-05-2004, 09:30 PM
[No subject] - by aathipan - 01-06-2004, 07:04 PM
[No subject] - by aathipan - 01-07-2004, 04:43 PM
[No subject] - by aathipan - 01-08-2004, 06:28 PM
[No subject] - by aathipan - 01-11-2004, 05:03 PM
[No subject] - by aathipan - 01-12-2004, 05:48 PM
[No subject] - by aathipan - 01-12-2004, 06:00 PM
[No subject] - by aathipan - 01-13-2004, 05:42 PM
[No subject] - by sOliyAn - 01-13-2004, 06:21 PM
[No subject] - by aathipan - 01-14-2004, 06:18 PM
[No subject] - by yarl - 01-14-2004, 06:49 PM
[No subject] - by aathipan - 01-14-2004, 07:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)