01-07-2004, 04:43 PM
இன்று ஆருத்தரா தரிசனம் சிவன் கோவிலில் நல்ல கூட்டம். எனது நன்பர்கள் எவரையும் காணவில்லை. அங்கே இருந்த தேவாரத்திருமூர்த்திகள் மண்டபத்தில் ஓரு பெரியவர் பிரசங்கம் செய்தபடியிருந்தார். அவர் சொன்ன ஒரு கருத்தை இன்று தருகின்றேன்.
மனிதர்களாகிய நாம் ஆண்டவனை நாடிச்செல்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காது சிற்றின்பத்தில திளைத்து முதுமை வந்தபோது மட்டும் அவனை நாடிகோவில் கோவிலாக யாத்திரை செய்கின்றோம். இது தவறு. முதலில் தெய்வஅருள்பெற்று பின் குடும்பவாழ்வில் ஈடுபடுவோமானால் மனம் அமைதியுடன் இருக்கும். எந்தகஸ்டத்திலும் மனம் குழப்பமடையாது. உதாரணத்திற்கு புதிதாக ஒரு ஊருக்கு திருவிழாவிற்;காக வருகின்றோம் வந்ததும் எதைப்பற்றியும் சிந்திக்காது கடைத்தெரு மற்றும் கேளிக்கை இடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்கிறோம். இரவு ஆகிவிடுகிறது. அப்போது தான் இரவு எங்கு தங்குவது என்று எண்ணம் வருகிறது. அவசரம் அவசரமாக தங்கும் விடுதிகளை தேடிச்செல்கின்றோம். இரவு ஆகிவிட்டாதால் வழிகூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர் வேறு வாட்டுகிறது. விடுதிகள் எல்லாம் நிரம்பிவிட்டது என்றசெய்திகேட்டு என்ன செய்வது என்று கலங்குகின்றோம். இதுவே நாம் வந்தவுடனேயே ஒரு விடுதியைப்பார்த்து சிறிது இளைப்பாறி எடுத்துவந்த ஆடைகள்கொண்ட பையைவைத்துவிட்டு எதையும் சுமந்துசங்கடப்படாது ஊரைச்சுற்றிப்பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். நிம்மதியாக இருந்திருக்கும் அல்லவா?. ஆகவே தெய்வத்தைத்தேடி கடைசி நேரத்தில் அலைவதைவிடுத்து இளமையிலேயே அவன் அருளைப்பெற்றுவிட முயற்சி செய்யவேண்டும்.
மனிதர்களாகிய நாம் ஆண்டவனை நாடிச்செல்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காது சிற்றின்பத்தில திளைத்து முதுமை வந்தபோது மட்டும் அவனை நாடிகோவில் கோவிலாக யாத்திரை செய்கின்றோம். இது தவறு. முதலில் தெய்வஅருள்பெற்று பின் குடும்பவாழ்வில் ஈடுபடுவோமானால் மனம் அமைதியுடன் இருக்கும். எந்தகஸ்டத்திலும் மனம் குழப்பமடையாது. உதாரணத்திற்கு புதிதாக ஒரு ஊருக்கு திருவிழாவிற்;காக வருகின்றோம் வந்ததும் எதைப்பற்றியும் சிந்திக்காது கடைத்தெரு மற்றும் கேளிக்கை இடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்கிறோம். இரவு ஆகிவிடுகிறது. அப்போது தான் இரவு எங்கு தங்குவது என்று எண்ணம் வருகிறது. அவசரம் அவசரமாக தங்கும் விடுதிகளை தேடிச்செல்கின்றோம். இரவு ஆகிவிட்டாதால் வழிகூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர் வேறு வாட்டுகிறது. விடுதிகள் எல்லாம் நிரம்பிவிட்டது என்றசெய்திகேட்டு என்ன செய்வது என்று கலங்குகின்றோம். இதுவே நாம் வந்தவுடனேயே ஒரு விடுதியைப்பார்த்து சிறிது இளைப்பாறி எடுத்துவந்த ஆடைகள்கொண்ட பையைவைத்துவிட்டு எதையும் சுமந்துசங்கடப்படாது ஊரைச்சுற்றிப்பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். நிம்மதியாக இருந்திருக்கும் அல்லவா?. ஆகவே தெய்வத்தைத்தேடி கடைசி நேரத்தில் அலைவதைவிடுத்து இளமையிலேயே அவன் அருளைப்பெற்றுவிட முயற்சி செய்யவேண்டும்.

