06-22-2003, 09:28 PM
ஓ யாழ் சமுதாயமே...
தலைப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் தேவை கருதியும் இந்த கட்டுரையை உரு மாற்றி இங்கு இடுகிறேன்
வீரகேசரியிலிருந்து
யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்களை அவதானிக்கின்ற போது இங்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் பெரிதும் உணரப்பட்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மோசமடைந்துவரும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்திருக்கின்றது.
குறுகிய காலத்திற்குள் குடாநாட்டில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல் சம்பவங்கள் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள், உள்ளிட்ட பல சட்டவிரோத சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் கிலேசமுறச் செய்திருக்கின்றன.
திடீரென அதிகரித்திருக்கும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம்,ஒழுங்குக்குப் பொறுப்பான பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்? இவை போதிய நடவடிக்கைகள் தானா என்றெல்லாம் விவாதிப்பதை விட இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதற்கான தூண்டுதலும் துணிச்சலும் திடீரென எவ்வாறு உருவானது என்று ஆராயப்படல்வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் தனியே சட்டத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. சட்டரீதியான அணுகுமுறைகளும் அதனூடான தண்டனை வழங்கல்களும் இத்தகைய காரியங்களைத் தடுத்து நிறுத்திவிடப்போவதில்லை.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மர்மமான கொலைச்சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றதுடன் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு சமூக வன்முறைகள் வளர்ந்துவிட்டதா என விசனத்தை ஏற்படுத்தி நிற்கிறது. அண்மையில் நல்லூரில் அண்ணனை அலவாங்கால் அடித்துக் கொன்ற தம்பி என்ற செய்தி மேலும் இந்த நிலையை வலுப்படுத்தியிருக்கிறது.
இதைவிட கைதடி சைவச் சிறார் இல்லத்திலும், உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள தான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
கைதடி சைவச் சிறார் இல்லத்தில் இருந்த மாணவிகள் சிலர் அங்குள்ள காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் , நிர்வாகிகளால் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றன.
இந்த வழக்கு சமூகத்தின் பிரமுகர்களாக உலவும் பலரையும் நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி மக்கள் மத்தியில் இருந்து அகன்று போவதற்கு முன்னரே உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் விடுதியில் இரு சிறுமிகள் காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகத்துக் குட்படுத்தப்பட்டதாக வழக்கு பதிவாகியிருக்கின்றது.
இத்தகைய சம்பவங்களும், வழக்குகள் மீண்டும் குடாநாட்டில் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைப்போன்றே ஏனைய பல சமூகவிரோத சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. அதிகாரபலத்தை வைத்துக்கொண்டு சாதாரண மக்களை ஆட்டிப்படைக்கும் சிலர் ஊழல், மோசடி போன்றவற்றை மிகத் தாராளமாகவே மேற்கொண்டிருக்கிறார்கள்.
யாழ்.நகரில் உள்ள மிகவும் பிரபலம் பெற்ற முன்னணிப் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தில் பெருமளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதான குற்றச்சாட்டுக்களும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டம் 1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் கூட்டப்படவில்லை என்றும் இச்சங்க நிர்வாகிகளால் கேள்விப்பத்திரம் கோராமல் கட்டடம் ஒன்று சுமார் ஒன்றரை கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டதில் பெரும் முறைகேடுகள் இடம் பெற்று பணிகள் இடைநடுவில் நிற்பதாகவும் பழைய மாணவர்களும், மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாப்பு விதிகளுக்கு அமைவாக சங்கத்தின் கூட்டத்தை நடத்துமாறு இம்மாத முற்பகுதியில் 75 பழைய மாணவர்கள் கையெழுத்திட்டு கடிதம் சமர்ப்பித்தபோதும் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தைக் கூட்டினால் கணக்குகளை சமர்ப்பிக்கவேண்டும் என்பதால் தான் இவ்வாறு கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் இதில் முக்கிய ஊடகப் புள்ளி ஒருவரே சூத்திரதாரியாக இருப்பதாகவும் மாணவர்கள், பழைய மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடி முறைகேடு குற்றச்சாட்டுக்கள் பல்வேறு பொது நிறுவனங்கள் பாடசாலைகளில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இத்தகைய குற்றச் செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அச்சமின்றி இருப்பதே ஆகும்.
குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு வலுவிழந்து பல வருடங்களாகிவிட்டன. நீதித்துறை தனது இறுக்கமான பிடியைப் பேண முற்பட்டாலும் அதற்கேற்றவாறு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் நடந்து கொள்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது.
பொலிஸாரின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து பரவலான புகார்களும் கிளம்பியிருக்கின்றன. இதைவிட சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் அதை மீறும் சம்பவங்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சட்டத்தின் ஆட்சியை நிறுவ முற்படும்போது அதைப் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஏற்படுத்துவதுதான் அவசியமானதாகும். இந்த விடயம் இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சாதாரணமாக, போக்குவரத்து விதிகளை மீறியதான குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அதற்கான குற்றப்பணத்தைச் செலுத்துவதற்கு பல நாட்களாக அலைய வைக்கப்படுகின்றார். அந்த இடத்தில் குற்றத்துக்காக பொலிஸார் ஒரு துண்டு வழங்குகின்றனர்.
அதைப் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பற்றுச்சீட்டு பெற்றே குற்றப்பணத்தை தபாலகத்தில் செலுத்தவேண்டும். ஆனால் பொலிஸ் நிலையத்தில் பற்றுச்சீட்டுப் புத்தகம் இல்லை எனக்கூறப்பட்டு பெருமளவு பொதுமக்கள் யாழ்.பொலிஸாரால் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சட்டதத்தைப் பேணும் பொலிஸார் அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளைப் பேணவேண்டியவர்கள் இல்லையா? இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.
முறையான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாமையே இன்றைய இந்த நிலைமைக்குக்காரணம் என்பதுபலராலும் உணரப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் தனித்துனத்துவத்தைப் பேணக்கூடிய வகையில் நீதி, நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்படுவதன் மூலமே இத்தகைய சமூக வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் புலிகளின் நிர்வாகத்தின் போது இத்தகைய சம்பவங்கள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போதும் புலிகள் குடாநாட்டில் இருக்கின்ற போதும் சட்டம், ஒழுங்கில் தலையீடு செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லாதிருப்பது தான் குற்றவாளிகளுக்கு பெரும் வாய்ப்பாகியிருக்கிறது.
இங்கு தான் விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையின் தேவைப்பாடும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிர்வாக அமைப்புத்தான் சமூக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்.
முகிலன்
http://www.virakesari.lk/20030622/mukilan.HTM
தலைப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் தேவை கருதியும் இந்த கட்டுரையை உரு மாற்றி இங்கு இடுகிறேன்
வீரகேசரியிலிருந்து
யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்களை அவதானிக்கின்ற போது இங்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் பெரிதும் உணரப்பட்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மோசமடைந்துவரும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்திருக்கின்றது.
குறுகிய காலத்திற்குள் குடாநாட்டில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல் சம்பவங்கள் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள், உள்ளிட்ட பல சட்டவிரோத சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் கிலேசமுறச் செய்திருக்கின்றன.
திடீரென அதிகரித்திருக்கும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம்,ஒழுங்குக்குப் பொறுப்பான பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்? இவை போதிய நடவடிக்கைகள் தானா என்றெல்லாம் விவாதிப்பதை விட இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதற்கான தூண்டுதலும் துணிச்சலும் திடீரென எவ்வாறு உருவானது என்று ஆராயப்படல்வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் தனியே சட்டத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. சட்டரீதியான அணுகுமுறைகளும் அதனூடான தண்டனை வழங்கல்களும் இத்தகைய காரியங்களைத் தடுத்து நிறுத்திவிடப்போவதில்லை.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மர்மமான கொலைச்சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றதுடன் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு சமூக வன்முறைகள் வளர்ந்துவிட்டதா என விசனத்தை ஏற்படுத்தி நிற்கிறது. அண்மையில் நல்லூரில் அண்ணனை அலவாங்கால் அடித்துக் கொன்ற தம்பி என்ற செய்தி மேலும் இந்த நிலையை வலுப்படுத்தியிருக்கிறது.
இதைவிட கைதடி சைவச் சிறார் இல்லத்திலும், உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள தான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.
கைதடி சைவச் சிறார் இல்லத்தில் இருந்த மாணவிகள் சிலர் அங்குள்ள காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் , நிர்வாகிகளால் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றன.
இந்த வழக்கு சமூகத்தின் பிரமுகர்களாக உலவும் பலரையும் நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி மக்கள் மத்தியில் இருந்து அகன்று போவதற்கு முன்னரே உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் விடுதியில் இரு சிறுமிகள் காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகத்துக் குட்படுத்தப்பட்டதாக வழக்கு பதிவாகியிருக்கின்றது.
இத்தகைய சம்பவங்களும், வழக்குகள் மீண்டும் குடாநாட்டில் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைப்போன்றே ஏனைய பல சமூகவிரோத சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. அதிகாரபலத்தை வைத்துக்கொண்டு சாதாரண மக்களை ஆட்டிப்படைக்கும் சிலர் ஊழல், மோசடி போன்றவற்றை மிகத் தாராளமாகவே மேற்கொண்டிருக்கிறார்கள்.
யாழ்.நகரில் உள்ள மிகவும் பிரபலம் பெற்ற முன்னணிப் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தில் பெருமளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதான குற்றச்சாட்டுக்களும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டம் 1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் கூட்டப்படவில்லை என்றும் இச்சங்க நிர்வாகிகளால் கேள்விப்பத்திரம் கோராமல் கட்டடம் ஒன்று சுமார் ஒன்றரை கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டதில் பெரும் முறைகேடுகள் இடம் பெற்று பணிகள் இடைநடுவில் நிற்பதாகவும் பழைய மாணவர்களும், மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாப்பு விதிகளுக்கு அமைவாக சங்கத்தின் கூட்டத்தை நடத்துமாறு இம்மாத முற்பகுதியில் 75 பழைய மாணவர்கள் கையெழுத்திட்டு கடிதம் சமர்ப்பித்தபோதும் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தைக் கூட்டினால் கணக்குகளை சமர்ப்பிக்கவேண்டும் என்பதால் தான் இவ்வாறு கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் இதில் முக்கிய ஊடகப் புள்ளி ஒருவரே சூத்திரதாரியாக இருப்பதாகவும் மாணவர்கள், பழைய மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடி முறைகேடு குற்றச்சாட்டுக்கள் பல்வேறு பொது நிறுவனங்கள் பாடசாலைகளில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இத்தகைய குற்றச் செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அச்சமின்றி இருப்பதே ஆகும்.
குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு வலுவிழந்து பல வருடங்களாகிவிட்டன. நீதித்துறை தனது இறுக்கமான பிடியைப் பேண முற்பட்டாலும் அதற்கேற்றவாறு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் நடந்து கொள்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது.
பொலிஸாரின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து பரவலான புகார்களும் கிளம்பியிருக்கின்றன. இதைவிட சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் அதை மீறும் சம்பவங்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சட்டத்தின் ஆட்சியை நிறுவ முற்படும்போது அதைப் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஏற்படுத்துவதுதான் அவசியமானதாகும். இந்த விடயம் இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சாதாரணமாக, போக்குவரத்து விதிகளை மீறியதான குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அதற்கான குற்றப்பணத்தைச் செலுத்துவதற்கு பல நாட்களாக அலைய வைக்கப்படுகின்றார். அந்த இடத்தில் குற்றத்துக்காக பொலிஸார் ஒரு துண்டு வழங்குகின்றனர்.
அதைப் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பற்றுச்சீட்டு பெற்றே குற்றப்பணத்தை தபாலகத்தில் செலுத்தவேண்டும். ஆனால் பொலிஸ் நிலையத்தில் பற்றுச்சீட்டுப் புத்தகம் இல்லை எனக்கூறப்பட்டு பெருமளவு பொதுமக்கள் யாழ்.பொலிஸாரால் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
சட்டதத்தைப் பேணும் பொலிஸார் அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளைப் பேணவேண்டியவர்கள் இல்லையா? இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன.
முறையான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாமையே இன்றைய இந்த நிலைமைக்குக்காரணம் என்பதுபலராலும் உணரப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் தனித்துனத்துவத்தைப் பேணக்கூடிய வகையில் நீதி, நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்படுவதன் மூலமே இத்தகைய சமூக வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் புலிகளின் நிர்வாகத்தின் போது இத்தகைய சம்பவங்கள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போதும் புலிகள் குடாநாட்டில் இருக்கின்ற போதும் சட்டம், ஒழுங்கில் தலையீடு செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லாதிருப்பது தான் குற்றவாளிகளுக்கு பெரும் வாய்ப்பாகியிருக்கிறது.
இங்கு தான் விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையின் தேவைப்பாடும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிர்வாக அமைப்புத்தான் சமூக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்.
முகிலன்
http://www.virakesari.lk/20030622/mukilan.HTM
