01-05-2004, 04:40 PM
நானும் நன்பர்களும் கடற்கரையில் நடந்;துகொண்டிருந்தோம். மூவருக்கும் எதோவகையில் கஸ்டங்கள் இருந்தது. என் ஒரு நன்பன் மட்டும் இந்த மாத வாடகைக்கு என்ன செய்வது என்று திரும்ப திரும்ப கவலைப்பட்டுக்கொண்டிருந்தான். எனக்கு அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. எனது இன்னொரு நன்பன் அவனுக்கு ஆறுதலாக இருக்குமே என்று ஒரு கதைசொன்னான்.
ஒரு தடவை முல்லாவும் மனைவியும் கடல்பிரயாணம் செய்தார்கள். வழியில் பெரும்புயலில் கப்பல் மாட்டிக்கொண்டது. கப்பல் அப்படியும் இப்படியும் ஆடியது. முல்லாவின் மனைவி மிகவும் பயந்துபோய்விட்டார். ஆனால் முல்லா அஞ்சாது இருந்தார். முல்லாவின் மனைவி அவரிடம் இப்படி புயல் அடிக்கிறது எப்போது கப்பல் கவிழும் என்று அச்சமாக இருக்கிறது நீங்கள் எந்த கவலையும் இன்றி இருக்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு முல்லா "எல்லாம் ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கைதான்" என்றார். முல்லாவின் மனைவி "இவ்வளவு அபாயகரமான சூழ்நிலையிலும் என்ன கடவுள் நம்பிக்கையோ?" என்று சலித்துக்கொண்டார். முல்லா திடீரென்று தன்இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து அவளை நோக்கி அச்சமுறும் வகையில் சுழற்றினார். பின் மனைவியைப்பார்த்து பயந்து விட்டாயா எனக்கேட்டார். மனைவி சிரித்துக்கொண்டு நான் ஏன் பயப்பிடப்போகிறேன் நீங்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்றார். நீங்கள் எப்படி என்னை கொல்ல முயல்வீர்கள் என்றாள். அதற்;கு முல்லா "புரிந்ததா இப்போது நான் சொன்னது. கத்தியை வைத்திருந்தது உன்மேல் அன்புகொண்ட கணவன் அதனால் நீ பயப்பிடவில்லை அதுபொலத்தான் புயலை வரவைத்து விளையாடுவது ஆண்டவன் அப்படியிருக்க நான் ஏன் பயப்பிடப்போகிறேன்" என்;றார்.
ஆகவே நாம் ஏன் கஸ்டங்களைக்கண்டு பயப்பிடவேண்டும் என என்நன்பன் ஆறுதல் சொன்னான்.
ஒரு தடவை முல்லாவும் மனைவியும் கடல்பிரயாணம் செய்தார்கள். வழியில் பெரும்புயலில் கப்பல் மாட்டிக்கொண்டது. கப்பல் அப்படியும் இப்படியும் ஆடியது. முல்லாவின் மனைவி மிகவும் பயந்துபோய்விட்டார். ஆனால் முல்லா அஞ்சாது இருந்தார். முல்லாவின் மனைவி அவரிடம் இப்படி புயல் அடிக்கிறது எப்போது கப்பல் கவிழும் என்று அச்சமாக இருக்கிறது நீங்கள் எந்த கவலையும் இன்றி இருக்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு முல்லா "எல்லாம் ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கைதான்" என்றார். முல்லாவின் மனைவி "இவ்வளவு அபாயகரமான சூழ்நிலையிலும் என்ன கடவுள் நம்பிக்கையோ?" என்று சலித்துக்கொண்டார். முல்லா திடீரென்று தன்இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து அவளை நோக்கி அச்சமுறும் வகையில் சுழற்றினார். பின் மனைவியைப்பார்த்து பயந்து விட்டாயா எனக்கேட்டார். மனைவி சிரித்துக்கொண்டு நான் ஏன் பயப்பிடப்போகிறேன் நீங்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்றார். நீங்கள் எப்படி என்னை கொல்ல முயல்வீர்கள் என்றாள். அதற்;கு முல்லா "புரிந்ததா இப்போது நான் சொன்னது. கத்தியை வைத்திருந்தது உன்மேல் அன்புகொண்ட கணவன் அதனால் நீ பயப்பிடவில்லை அதுபொலத்தான் புயலை வரவைத்து விளையாடுவது ஆண்டவன் அப்படியிருக்க நான் ஏன் பயப்பிடப்போகிறேன்" என்;றார்.
ஆகவே நாம் ஏன் கஸ்டங்களைக்கண்டு பயப்பிடவேண்டும் என என்நன்பன் ஆறுதல் சொன்னான்.

