Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கேஸ்வரன் ஆர் எஸ் மனோகர் காலமானார்
#6
Quote:திரைக் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தாலும்
நாடகக் காவலராக இவர் ஆற்றிய பணி மறக்க முடியாதவை.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு
அன்னாரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்கள் உரித்தாகட்டும்............
<b>நாடகக் காவலராக அவர் நாமம் நிலைக்கட்டும்.</b>

<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/manohar-350.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் பட உலகின் பழம்பெரும் வில்லன் நடிகரும், மிகப் பிரபலமான நாடக நடிகருமான
ஆர்.எஸ்.மனோகர் இறக்கும் போது அவருக்கு வயது 81.

வெகு நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகர் சுய நினைவை இழந்தார்.

இந் நிலையில் அவரது உடல் நிலை இன்று அதிகாலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார்.

மனோகரின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு நடிகர்நடிகைகள் நாடக கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளை காலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

<b>ஜெ. இரங்கல்:</b>

மனோகரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.மனோகர் நடிப்பாற்றல் மிக்கவர். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்டமான சரித்திர மற்றும் புராண நாடகங்களை அளித்தவர்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 8000க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. மனோகரின் மறைவு திரைத்துறைக்கு இழப்பு என்றால் நாடகத் துறைக்கு பேரிழப்பாகும். மனோகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனோகர் அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நாடகக் காவலர் என்று அழைக்கப்படும் மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை 1000 முறைக்கும் மேல் அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். அதேபோல சாணக்கியன் சபதம், விஸ்வாமித்திரர் ஆகிய நாடகங்களையும் 700க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றி சாதனை படைத்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்த பெருமையைப் பெற்றவர். வில்லன், குணச்சித்திர வேடம் என பல வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது ஆகியவற்றைப் பெற்றவர் மனோகர்.
நன்றி: தட்ஸ்தமிழ்.
Reply


Messages In This Thread
[No subject] - by Eswar - 01-10-2006, 11:00 PM
[No subject] - by Rasikai - 01-10-2006, 11:03 PM
[No subject] - by RaMa - 01-11-2006, 05:03 AM
[No subject] - by aathipan - 01-11-2006, 07:15 AM
[No subject] - by AJeevan - 01-11-2006, 11:48 AM
[No subject] - by Luckyluke - 01-11-2006, 02:00 PM
[No subject] - by Mathan - 01-11-2006, 09:00 PM
[No subject] - by கந்தப்பு - 01-11-2006, 11:23 PM
[No subject] - by AJeevan - 01-11-2006, 11:59 PM
[No subject] - by Aravinthan - 01-12-2006, 01:41 AM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 06:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)