01-09-2006, 08:26 PM
<b>உண்மையில் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கோரும் இந்தியாவிற்கும் மேலே குறிப்பிட்ட கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் கட்டுரையல் குறிப்பிட்ட நிலைப்பாடு மிகவும் வேதனையான விடயம் தான். முன்பு இலங்கையிலும் இந்நிலை இருந்திருக்கின்றது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டது போல் கையால் என்பது நான் அறியவில்லை. இன்று அப்படியான பல இடங்களில் மாற்றம் நடைபெற்றும் ஆந்திராவில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டது அங்குள்ள அரசியல் வாதிகளால்த் தானென நான் நினைக்கின்றேன். இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஆந்திராவில் இப்படியான நிலையும் இருந்ததற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் வெட்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் ஆந்திராவில் காணப்படும் அதிமிஞ்சிய சாதிப்பாகுபாடுகளே. கட்டுரை ஆசிரியர் அங்குள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து தயைங்கத்தால் இந்தியாவைக் கேவலப்படுத்த முயற்சித்திருப்பது தனக்குத்தானே துப்பியது போலாகிவிடுகின்றது.</b>

