![]() |
|
அய் நா சபையில் உரிமை கோரும் இந்தியா இதையும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: அய் நா சபையில் உரிமை கோரும் இந்தியா இதையும் (/showthread.php?tid=1528) |
அய் நா சபையில் உரிமை கோரும் இந்தியா இதையும் - sathiri - 01-08-2006 http://www.keetru.com/dalithmurasu/dec05/wilson.html Re: அய் நா சபையில் உரிமை கோரும் இந்தியா இதையும் - sinnappu - 01-09-2006 sathiri Wrote:http://www.keetru.com/dalithmurasu/dec05/wilson.html
- kuruvikal - 01-09-2006 இப்ப இதில அவசரமா விவாதிக்க வேண்டியது எப்ப தமிழில இருந்து "ஐ" ன்னாவைத் தூக்கிட்டு அந்த இடத்துக்கு "அய்" போட்டவங்கள்...! :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 01-09-2006 வில்சன் உண்மையில் ஒரு பெரிய மனிதர் தான்,,,. சாட்றி இந்தியாவின் என்னொரு பக்கத்தை திறந்து காட்டியமைக்கு நன்றிகள்...
- iruvizhi - 01-09-2006 <b>மனிதன் எவ்வளவு ஈவிரக்கமற்ற அரக்கன் என்பதை அந்த தாயின் துயர் எடுத்தியம்புகின்றன. </b> <b>வக்கிரமனிதன் தன்னலம் கருதும் கயவன். மானமுள்ளவன் மனிதனை இப்படி வதைப்பானோ???????? </b>
- kuruvikal - 01-09-2006 iruvizhi Wrote:<b>மனிதன் எவ்வளவு ஈவிரக்கமற்ற அரக்கன் என்பதை அந்த தாயின் துயர் எடுத்தியம்புகின்றன. </b> இலங்கையில் சில பிந்தங்கிய கிராமிய வைத்தியசாலைகளில் இன்னும் இப்படி மலசலகூடம் சுத்திகரிக்கப்படுவதாக பத்திரிகை ஒன்றில் படிக்கக் கிடைத்தது. யாழ் குடாநாட்டில் கூட இப்படியான நடைமுறைகள் இருந்துள்ளன. குறிப்பாக கிராமிய வைத்தியசாலைகளில்..! இப்போ அவை மாற்றம் கண்டிருக்கும் என்று நம்புவோமாக..! யாழ் போதனா வைத்தியசாலை கூட 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிந்தங்கிய நிலையில் தான் இன்னும் இருக்கிறது...! இந்தியாவின் கொடுமைகள் வெளியில் சொல்லப்படுகின்றன... எங்கள் ஊர்க் கொடுமைகள் வெளியில் வருவதில்லை..மூடி மறைக்கப்படுகின்றன..! அதுதான் மகா கொடுமை..!
- தூயவன் - 01-09-2006 ரெம்பக் கொடுமை. - Mathuran - 01-09-2006 kuruvikal Wrote:iruvizhi Wrote:<b>மனிதன் எவ்வளவு ஈவிரக்கமற்ற அரக்கன் என்பதை அந்த தாயின் துயர் எடுத்தியம்புகின்றன. </b> குருவிகளே இது எங்க யாருக்கு நடந்தாலும் மோசமான செயல்தான். டண் சொவதுபோல வில்சன் மிகவும் துணிச்சலானவர்தான். - Vasampu - 01-09-2006 <b>உண்மையில் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கோரும் இந்தியாவிற்கும் மேலே குறிப்பிட்ட கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் கட்டுரையல் குறிப்பிட்ட நிலைப்பாடு மிகவும் வேதனையான விடயம் தான். முன்பு இலங்கையிலும் இந்நிலை இருந்திருக்கின்றது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டது போல் கையால் என்பது நான் அறியவில்லை. இன்று அப்படியான பல இடங்களில் மாற்றம் நடைபெற்றும் ஆந்திராவில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டது அங்குள்ள அரசியல் வாதிகளால்த் தானென நான் நினைக்கின்றேன். இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஆந்திராவில் இப்படியான நிலையும் இருந்ததற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் வெட்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் ஆந்திராவில் காணப்படும் அதிமிஞ்சிய சாதிப்பாகுபாடுகளே. கட்டுரை ஆசிரியர் அங்குள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து தயைங்கத்தால் இந்தியாவைக் கேவலப்படுத்த முயற்சித்திருப்பது தனக்குத்தானே துப்பியது போலாகிவிடுகின்றது.</b> - Mathuran - 01-09-2006 திரு வசம்பு அவர்களே! இந்தியா போன்ற நாடுகளின் வளர்ர்ச்சியில் எனக்கும் மிகுந்த பிருப்பம் இருக்கின்றது. காரணம் அங்கு பல வறிய நிலையில் வாடும் மனிதர்கள் படு துயரங்களை பார்க்கும்போது ஏனோ எமது மனமும் துடிக்கின்றது. நீங்கள் சொல்லவது போல் கரங்களால் சுத்தம் செய்யும் முறை( அதாவது கட்டுரையாளர் குறிப்பிடுவதைபோன்ற முறை) நீங்கள் அறிந்தவரையில் இல்லை என குறிப்பிடுவதை எவ்வாறு என்னால் ஏற்றுகொள்ள முடியும்? அதுதான் கட்டுரையாளர் படங்களோடு அறியத்தருகின்றாரே. நீங்கள் அறிந்த வரை என்றால். இந்தியாவில் தலித்துக்கள் அனைத்து மானிலங்களிலும் இருக்கின்றார்கள். எல்லா ஊர்களுக்கும் நிச்சயமாக நீங்கள் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள் என்று ஓரளவுக்கு என்னால் உறுதி படக் கூறமுடியும். ஐனவில் அங்கத்துவம் இந்தியா கோருவது அவர்களின் பிரச்சினை. ஆனால் களிவுகளை சுத்தம்செய்யும் கருவிகள் இல்லாததால்த்தான் இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னிலமை நீடிக்கின்றது என்னும் வாதத்தை தயவுசெய்து நிஞாயப்படுத்தாதீர்கள். தொழில் நுட்ப புரட்சியில் ஏனைய நாடுகளுக்கு இணையாக வழர்ந்து வரும் நாடு, களிவுகளை சுத்திகரிக்கும் கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால். எந்த நாடுக்காறன் இந்தியா தொழில்நுட்ப வழர்ச்சியில் புரட்சி புரிகின்றதென்பதை ஒத்துக்கொள்வான். மேலும் எழுதலாம் வேண்டாம். மனிதர்கள் இவ்வாறு சீரழிவது மனதை வாட்டுகின்றது. அவ்வளவுதான். - Vasampu - 01-09-2006 <b>நன்றி மதுரன் உங்கள் கருத்திற்கு</b> உங்களுடன் வாதததிற்காக இதை நான் எழுதவரவில்லை. ஆனால் நீங்கள் நான் எழுதியதை மேலோட்டமாக வாசித்தவிட்டு என்னோடு வாதத்திற்கு வருகின்றீர்கள். கையால் செய்ததை நான் அறியவில்லை என குறிப்பிட்டது இலங்கையில்.. அதனை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். கட்டுரையாளர் படத்துடன் விளக்கிய பின்னும் அதை நான் மறுப்பேனா?? ஆனால் களிவுகளை சுத்தம்செய்யும் கருவிகள் இல்லாததால்த்தான் இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னிலமை நீடிக்கின்றது அதே போல் இந்தியா ஐ.நா சபையின் பாதுகாப்புசபையில் நிரந்தர அங்கத்துவம் கோருவதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உப்படிப் பார்த்தால் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளிலும் மிகவும் மோசமான நிலையில் மக்கள் வாழுகின்றார்கள். மறுபுறத்தில் ராக்கட் தொழில்நுட்பத்திலும் ஐ.நா சபையில் அவை அங்கம் வகிப்பதிலும் அவை முன்னிலைப்படுத்தவில்லையா?? ஒருபோதும் நான் தவறை நியாயப்படுத்த வரவில்லை உங்களைப் போல் அவர்களின் வாழ்க்கை முறை என்னையும் பாதித்ததால்த் தான் நானும் எனது கருத்தையும் எழுதி கட்டுரையாளரின் தவறையும் சுட்டிக் காட்டினேன். - Luckyluke - 01-12-2006 ஐ நா சபையில் இந்தியா உரிமை கோருவது என்பது அதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டே... இந்தியா வளரவேயில்லை என்று யாராவது கூற முடியுமா? இதுபோன்ற அவலங்கள் எல்லா நாட்டிலும் உண்டு... அவை போக்கப்பட வேண்டும்.... - rajathiraja - 01-12-2006 நன்றி வாசம்பு !! இதுபோன்ற அவலங்கள் எல்லா நாட்டிலும் உண்டு. இந்தியாவிலும் உண்டு. இது தவறு தான். கண்டிபாக விரைவில் நீங்கி விடும். இதற்க்கும் இந்தியா ஐ நா சபையில் இந்தியா நிறந்தற இடம் கேட்பதற்க்கும் என்ன சம்பந்தம்? |