01-07-2006, 12:56 AM
<span style='font-size:22pt;line-height:100%'>பட்டிமன்றத்தின் நடுவர்களாக,
தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து மற்றும் தமிழினிக்கும்
பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த இரசிகைக்கும்
இங்கு பங்கு பற்ற இடம் தந்த யாழ் களத்துக்கும்
எதிரணித் தலைவராக இருக்கும் சோழியனுக்கும்
அவரது குழுவினருக்கும்
<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள்
இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள்</b>
என்ற எமது அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைஞனுக்கும்
எமது பக்க சார்பாக பேசும் நண்பர்களுக்கும்
இவற்றை ரசித்து சுவைக்கும் வாசக நண்பர்களுக்கும்
என் இனிய வணக்கம்.
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி!
இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும்,
அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...
இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி
நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம்
என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...
வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை..
அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.
அது போலவே நல்லவைகளை விட
தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன.
எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும்
ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே
பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே?
அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
எனவே
ஒரு சிறு கதையோடு இந்த பட்டி மன்றத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன்.
உங்கள் அனுமதி நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு சிறப்பு மிக்க நாடகமொன்றைக் காண இரண்டு நண்பர்கள் திரையரங்கு ஒன்றுக்கு சென்றார்களாம்.
அந்த நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்த அழகான கதாநாயக நடிகையின்
கடைசி அத்தியாயமான அவள் இறக்கும் காட்சி வந்த போது
அரங்கமே நிசப்தத்தின் உச்சத்தை அடைந்து காணப்பட்டதாம்.
நாடகத்தில் அமிழ்ந்து போயிருந்த இரு நண்பர்களில் ஒருவர்
விழித்த கண் வாங்காது மேடையை பார்த்து விறைத்து நின்று கொண்டிருந்த அடுத்த நண்பரிடம் கேட்டாராம்.
\"நடிப்பு எப்படி என்று?\"
அதற்கு கண் வாங்காது மேடையை பார்த்து கொண்டிருந்த நண்பர் சொன்னாராம்
\"இன்னும் கொஞ்சம் துணி விலகாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\" என்று..........
இது போலத்தான் நம் எதிரணியில் பலர்
நல்லவற்றை நுகரத் தெரியாது.
தவறான வழிகளில் போய் மூக்குடைபட்டு வந்து
இங்கே தமது அவலங்களைக் கொட்டுகிறார்கள்.
இது போன்ற அனுபவங்கள் எமது அணியினருக்கு கிடைத்ததில்லை.
காரணம் இதற்கான தேவை எமக்கில்லை என்பதை ஆரம்பம் முதலே விளக்கி வந்திருக்கிறார்கள்.
இனியாவது அப்படியான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். :?:
காரணம் இந்த பட்டி மன்றம் நிச்சயம் இவர்களை நல் வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை
எமது அணியினருக்கு உண்டு.
எனவே வெட்டிப் பேசுவதை தவிர்த்து,
.....................
எதிரணி நண்பர்கள் தெரியாமல் இருக்கும் சில விடயங்களை முன் வைப்பது நல்லது எனக் கருதுகிறேன்.
சர்வதேச தகவல் வலைப்பின்னலில் சிக்கிய
உலக அரசியல் , அமெரிக்காவில் இராணுவ தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ,
முதலில் கணனிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வலைப் பின்னல்,
பூகோள, நிர்வாக எல்லைகளைக் கடந்து
உலகின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கும்
இணையமாக வியாபித்திருப்பதற்கான சான்று கொண்ட
பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
அரச நிர்வாகத்தில் இருந்து
பொழுது போக்கு வரை மட்டுமல்ல
அனைத்துத் துறைகளையும் இணையம்
இன்று ஆக்கிரமித்திருக்கிறது.
அது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுகிறது.
கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமானதாக திகழ்கிறது.
ஒட்டுமொத்தமாக கூறுவதானால்,
இணையம் என்பது தகவல் புரட்சிக்கான ஆணிவேர்
என்ற நிலையில் இருந்து
சமூக மாற்றத்திற்கான இயந்திரம் என்றவாறு
உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில்
தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ் மட்டுமல்ல மனித உயிர் காப்பதற்கான அறுவைச் சிகிச்சைகள் கூட
இணைய ஊடக வழி மூலம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.
இன்று இணைய ஊடகம்,
வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள் என்று
பார்க்கும் திசை எங்கும் தமிழ் மொழியை வியாபிக்க வழி வகுத்திருக்கிறது.
<b>\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" </b>
என்னும் உயர்நோக்கத்தின் பல பரிமாணங்களாக
இணையம் தமிழை உலகெங்கும் பரப்ப வழி செய்திருக்கிறது.
அதாவது
இணைய பத்திரிகையாக - சஞ்சிகையாக -
தளமாக -மின்நூலகமாக - ஒலி-ஒளி வடிவாக ...................இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான
சிறப்பாய் பார்ப்போமானால் மிகப் பெரிய மின் நூலகங்களை
தமிழ் இணையப் பல்கலக்கழகங்கள் வடிவமைத்துள்ளது.
இவ் இணைய நூலகங்களில்
பாடத்திட்டம் தொடர்பான நூல்களும்
குறிப்புதவி நூல்களும் உள்ளன.
சங்க இலக்கியங்கள் முதல்
இக்கால இலக்கியங்கள் வரை
எல்லாத் தமிழ் இலக்கியங்களும்
இந்த மின் நூலகங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஒளி- ஒலிக் காட்சிகளும்
தமிழ்ப் பண்பாட்டுடன் தொடர்பான பரதநாட்டியம், நாதசுர இசை, ஏறு தழுவல் முதலானவற்றின் ஒளி- ஒலிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களும் மின்நூலகத்தில் தரப்பட்டுள்ளன.
ஏனைய உலக மொழிகளும் அடக்கம்.
சாதாரண நூலகத்திலிருந்து இந்த மின்நூலகங்கள் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது.
தேவைப்படும் நூலை உடனே எடுத்துப் படிக்க இயலும்.
ஒரு நூலில் தேவைப்படும் பகுதியை மட்டும் உடனே தேடிக் கற்க இயலும்
பல்வேறு நூல்களில் உள்ள பல்வேறு கருத்துகளைத் தேடுதல் வசதியின் மூலம் ஒரே இடத்தில் திரட்டிக் கற்க இயலும்.
ஒரே நேரத்தில் ஒரே நூலை எத்தனைபேர் வேண்டுமானாலும் எங்கே இருந்தும் படிக்க இயலும்.
இப்படியான பணிகள் மூலம்
ஒருவரால் விரும்பிய ஒன்றை கற்பதற்கு கல்வி நிலையங்களை நாடிப் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை.
நாடு விட்டு நாடு போக வேண்டியதில்லை.
இணைய வழி முலமே எதை வேண்டுமானாலும் எங்கிருந்தும் கற்கலாம்.
எந்த ஒரு கல்வி கற்கும் செயலுக்கும் அடிப்படத் தேவைகளான பாடங்களும் கலந்துரையாடல்களும் -
பயிற்சிகளும் தன் மதிப்பீடுகளும் - நூலகம்/அகராதி
- இறுதித் தேர்வுகள் போன்ற இவை அனைத்துமே, ஆங்கிலத்தில் (ஏனைய மொழிகளில்) மட்டுமல்ல தற்போது தமிழ் இணையதளக் கல்வியிலும் இடம்பெற்றுள்ளன.
பாடங்களுடன், பயிற்சிகள், தன்மதிப்பீடு வினாக்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இணைய வாயிலாகவே ஆசிரியருடன் கலந்துரையாடும் (CHAT) வசதியும் வழங்கப்படுகின்றது.
தவிரவும் இணைய வழித் தேர்வுகளை மேற்கொள்ளவும், எழுத்துத் தேர்வு எழுதவும் தொடர்பு மையங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எத்தனை எத்தனை.................
ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல்
தமிழில் வலைத்தளங்கள் இருக்காது போனாலும்
ஒரு மாபெரும் அதீதமான வளர்ச்சி தமிழ் இணையத்தளங்கள் ஊடாக உருவாகியதை
யாராலும் மறுக்க முடியாது.
இணைய வழி தமிழ் வலைப்பதிவுகள்
மெல்ல மெல்ல தமிழ் இணைய உலகில்
தனக்கென தனியானதொரு இடத்தை பிடித்து வருகின்றன.
இன்னொரு முக்கியமான நிகழ்வு
ஏராளமான புதியவர்கள் உற்சாகத்துடன்
தமிழில் புதிய ஆக்கங்கள்,
வெளியான தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மின்பதிப்பாகவும் தந்த வண்ணமுள்ளனர்.
இணையத்தின் ஆணி வேரே Integration என்னும் ஒருங்கிணைப்புதானே?
<b>கூடி வாழ்ந்தால் கோடி</b> நன்மை என்று முன்னோர் சொன்னவற்றை இணைய வழி செயல்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது.
உலகெங்கும் பரந்து வாழும் மக்கள்
முகம் தெரியாமல் இருந்தாலும்
ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து
கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்
நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.
அது
நிலவில் மனிதன் கால் பதித்ததற்கு ஒப்பானது.
வளர்ந்து வரும் வலைப்பதிவுலகத்தின் போக்கை பார்க்கும் போது
இதுவரை வலைப்பதிவு வைப்பதெல்லாம் வெறும் புகழுக்காக, மறுமொழிக்காக எழுதப்படுபவை..
வீண்வேலை என்று கருத்து தெரிவித்து வந்தவர்களே கூட
இன்று வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதிலிருந்து
இணைய உலகில் இதற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் முக்கியதுவத்தை உணரலாம்.
எண்ணிக்கையின் அடிப்படையிலும் சரி,
தொழில்நுட்ப ரீதியாகவும் சரி- வலைப்பதிவுகளில் நாம் காணும் சீரான வளர்ச்சியும், அடுத்தடுத்த படிநிலையை அடைவதில் இருக்கும் உத்வேகமும் இணையம் சம்மந்தப்பட்ட தளங்களில் இருப்பது என்பது கண்கூடு.
<b>யாகு</b> குழுவில் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குழுக்கள் இருக்கின்றன.
அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி...
வலைப்பூக்களில் பல திறமையான எழுத்தாளர்கள் இன்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...
ஈழத்தவரான நமக்கு சொந்தமான பல தமிழ் எழுத்துப் பொக்கிசங்கள்
யாழ் நூலக எரிப்போடு மண்ணாகி விட்டது.
அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும்
மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.
இன்றைய நிலை அன்று இருந்திருந்தால்
எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?
எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப் பார்க்கும் போது, மனம் கனிய வாய்ப்பிருக்கிறது..
அதுவே பலருக்கு ஒரு பதிவாகவும் ஆகி விடும்.
பலர் எழுதும் கட்டுரைகள் மூலம் அவர்களது பயமற்ற குரலை தமிழில் வெளிப்படுத்தியது என்றால், பயமற்ற சிந்தனைகளை இணையத்தில் வெளிப்படுத்தக் காரணமாய் இருந்ததும் இருந்து வருவதும் இணையதளம் என்று சொல்லலாம்.
இணையதளங்கள் \"தமிழின் மிக முக்கியமான விவாதங்ககளுக்கு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள்
இணைய வழி விவாதிக்கப் பட்டுள்ளன.
இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது.
பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள்,
தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம்
இங்கே வெகு சாதாரணம்.
ஒருவர் நெடுநாள் வலை பதிக்கவில்லையெனில் அவரைப்பற்றிய கவலைகளையும், விசாரிப்புகளையும் சக வலைப்பதிவாளர்களிடையே காணலாம்.
இப்படி இணையத்தின் மூலம் துளிர்க்கும் நட்புகளும், கிடைக்கும் தொடர்புகளும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை பயப்பனவாக இருப்பதை அவரவர் வாழ்க்கையில் அறியலாம்.
கதை, கவிதைகள் அல்லாமல் அறிவியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, நடப்புச் செய்திகள், விமர்சனங்கள் என்று இணையம் அளவுக்கு ஆழமாகவும் அறியாப் பிரதேசங்களைத் தொட்டும் எழுதப்பட்ட கட்டுரைகளை இடம் பெற வைத்த சிறப்பு இணையத்துக்கு உண்டு.
மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
\"சிறியோரை இகழ்தலும் இலமே\" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்
சம-மரியாதை தருகிறது.
புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.
இது தமிழனின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.
மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.
வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத
மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.
வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும்.
இணையத்தாலும் வலைப்பூக்களாலும் அச்சு ஊடகங்களுக்கும் நிறைய நன்மை இருக்கிறது.
இன்றைய சூழலில் திரைப்பட விமர்சனங்கள் கிடைக்கின்றன.
நல்ல நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், பழைய கால நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் போன்றவை அச்சு ஊடகங்களில் கிடைப்பதில்லை.
இவை இணையத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
ஜப்பான், சீனா, கொரியா, தைவான், கொங்காங், போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில்,..........
ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது.
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய அப் பணி விரிந்து வளர்ந்தது.
உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில்
இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது.
வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள
மாபெரும் கொடையே இணைய ஊடகம்.
தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தள மேடையே இணைய ஊடகம்தான் என்பதில் ஐயப்பாடு இருக்காது.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு,
மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறவும்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியவும்; உற்பத்தியாகும் பொருள்களை வாங்கவும்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான்.
நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணி முன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இயக்குவதுபோல்) இயக்க முடியும்.
சமகால தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அடைய வேண்டுமென்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றன.
இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலத்தில்
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம்,
தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும்.
தரும்.
<b>மெல்ல அல்ல விரைவாகவே தமிழ்
இணையத்தில் சிறக்கும்.</b>
அடுத்த தலைமுறை தமிழின் பெருமையை உணர இணையத்தின் பிரதான மொழியாக
தமிழ் மொழி அமைய வேண்டும் .
இது உண்மைதான்.
தமிழிலமைந்த பயன்பாட்டு மென்பொருட்கள் பெருக பெருக இன்றுள்ள இளைய தலைமுறையும் தமிழை மறக்க மாட்டார்கள்.
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.......</b>
எனக் கூறி
எமது நண்பர்கள் நாங்கள் விட்டுச் சென்ற மிகுதியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு
வாய்ப்பு தந்த அனைவருக்கும்
நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வணக்கம்.</span>
தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து மற்றும் தமிழினிக்கும்
பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த இரசிகைக்கும்
இங்கு பங்கு பற்ற இடம் தந்த யாழ் களத்துக்கும்
எதிரணித் தலைவராக இருக்கும் சோழியனுக்கும்
அவரது குழுவினருக்கும்
<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள்
இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள்</b>
என்ற எமது அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைஞனுக்கும்
எமது பக்க சார்பாக பேசும் நண்பர்களுக்கும்
இவற்றை ரசித்து சுவைக்கும் வாசக நண்பர்களுக்கும்
என் இனிய வணக்கம்.
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி!
இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும்,
அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...
இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி
நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம்
என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...
வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை..
அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.
அது போலவே நல்லவைகளை விட
தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன.
எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும்
ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே
பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே?
அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
எனவே
ஒரு சிறு கதையோடு இந்த பட்டி மன்றத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன்.
உங்கள் அனுமதி நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு சிறப்பு மிக்க நாடகமொன்றைக் காண இரண்டு நண்பர்கள் திரையரங்கு ஒன்றுக்கு சென்றார்களாம்.
அந்த நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்த அழகான கதாநாயக நடிகையின்
கடைசி அத்தியாயமான அவள் இறக்கும் காட்சி வந்த போது
அரங்கமே நிசப்தத்தின் உச்சத்தை அடைந்து காணப்பட்டதாம்.
நாடகத்தில் அமிழ்ந்து போயிருந்த இரு நண்பர்களில் ஒருவர்
விழித்த கண் வாங்காது மேடையை பார்த்து விறைத்து நின்று கொண்டிருந்த அடுத்த நண்பரிடம் கேட்டாராம்.
\"நடிப்பு எப்படி என்று?\"
அதற்கு கண் வாங்காது மேடையை பார்த்து கொண்டிருந்த நண்பர் சொன்னாராம்
\"இன்னும் கொஞ்சம் துணி விலகாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\" என்று..........
இது போலத்தான் நம் எதிரணியில் பலர்
நல்லவற்றை நுகரத் தெரியாது.
தவறான வழிகளில் போய் மூக்குடைபட்டு வந்து
இங்கே தமது அவலங்களைக் கொட்டுகிறார்கள்.
இது போன்ற அனுபவங்கள் எமது அணியினருக்கு கிடைத்ததில்லை.
காரணம் இதற்கான தேவை எமக்கில்லை என்பதை ஆரம்பம் முதலே விளக்கி வந்திருக்கிறார்கள்.
இனியாவது அப்படியான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். :?:
காரணம் இந்த பட்டி மன்றம் நிச்சயம் இவர்களை நல் வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை
எமது அணியினருக்கு உண்டு.
எனவே வெட்டிப் பேசுவதை தவிர்த்து,
.....................
எதிரணி நண்பர்கள் தெரியாமல் இருக்கும் சில விடயங்களை முன் வைப்பது நல்லது எனக் கருதுகிறேன்.
சர்வதேச தகவல் வலைப்பின்னலில் சிக்கிய
உலக அரசியல் , அமெரிக்காவில் இராணுவ தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ,
முதலில் கணனிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வலைப் பின்னல்,
பூகோள, நிர்வாக எல்லைகளைக் கடந்து
உலகின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கும்
இணையமாக வியாபித்திருப்பதற்கான சான்று கொண்ட
பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
அரச நிர்வாகத்தில் இருந்து
பொழுது போக்கு வரை மட்டுமல்ல
அனைத்துத் துறைகளையும் இணையம்
இன்று ஆக்கிரமித்திருக்கிறது.
அது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுகிறது.
கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமானதாக திகழ்கிறது.
ஒட்டுமொத்தமாக கூறுவதானால்,
இணையம் என்பது தகவல் புரட்சிக்கான ஆணிவேர்
என்ற நிலையில் இருந்து
சமூக மாற்றத்திற்கான இயந்திரம் என்றவாறு
உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில்
தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ் மட்டுமல்ல மனித உயிர் காப்பதற்கான அறுவைச் சிகிச்சைகள் கூட
இணைய ஊடக வழி மூலம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.
இன்று இணைய ஊடகம்,
வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள் என்று
பார்க்கும் திசை எங்கும் தமிழ் மொழியை வியாபிக்க வழி வகுத்திருக்கிறது.
<b>\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" </b>
என்னும் உயர்நோக்கத்தின் பல பரிமாணங்களாக
இணையம் தமிழை உலகெங்கும் பரப்ப வழி செய்திருக்கிறது.
அதாவது
இணைய பத்திரிகையாக - சஞ்சிகையாக -
தளமாக -மின்நூலகமாக - ஒலி-ஒளி வடிவாக ...................இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான
சிறப்பாய் பார்ப்போமானால் மிகப் பெரிய மின் நூலகங்களை
தமிழ் இணையப் பல்கலக்கழகங்கள் வடிவமைத்துள்ளது.
இவ் இணைய நூலகங்களில்
பாடத்திட்டம் தொடர்பான நூல்களும்
குறிப்புதவி நூல்களும் உள்ளன.
சங்க இலக்கியங்கள் முதல்
இக்கால இலக்கியங்கள் வரை
எல்லாத் தமிழ் இலக்கியங்களும்
இந்த மின் நூலகங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஒளி- ஒலிக் காட்சிகளும்
தமிழ்ப் பண்பாட்டுடன் தொடர்பான பரதநாட்டியம், நாதசுர இசை, ஏறு தழுவல் முதலானவற்றின் ஒளி- ஒலிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களும் மின்நூலகத்தில் தரப்பட்டுள்ளன.
ஏனைய உலக மொழிகளும் அடக்கம்.
சாதாரண நூலகத்திலிருந்து இந்த மின்நூலகங்கள் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது.
தேவைப்படும் நூலை உடனே எடுத்துப் படிக்க இயலும்.
ஒரு நூலில் தேவைப்படும் பகுதியை மட்டும் உடனே தேடிக் கற்க இயலும்
பல்வேறு நூல்களில் உள்ள பல்வேறு கருத்துகளைத் தேடுதல் வசதியின் மூலம் ஒரே இடத்தில் திரட்டிக் கற்க இயலும்.
ஒரே நேரத்தில் ஒரே நூலை எத்தனைபேர் வேண்டுமானாலும் எங்கே இருந்தும் படிக்க இயலும்.
இப்படியான பணிகள் மூலம்
ஒருவரால் விரும்பிய ஒன்றை கற்பதற்கு கல்வி நிலையங்களை நாடிப் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை.
நாடு விட்டு நாடு போக வேண்டியதில்லை.
இணைய வழி முலமே எதை வேண்டுமானாலும் எங்கிருந்தும் கற்கலாம்.
எந்த ஒரு கல்வி கற்கும் செயலுக்கும் அடிப்படத் தேவைகளான பாடங்களும் கலந்துரையாடல்களும் -
பயிற்சிகளும் தன் மதிப்பீடுகளும் - நூலகம்/அகராதி
- இறுதித் தேர்வுகள் போன்ற இவை அனைத்துமே, ஆங்கிலத்தில் (ஏனைய மொழிகளில்) மட்டுமல்ல தற்போது தமிழ் இணையதளக் கல்வியிலும் இடம்பெற்றுள்ளன.
பாடங்களுடன், பயிற்சிகள், தன்மதிப்பீடு வினாக்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இணைய வாயிலாகவே ஆசிரியருடன் கலந்துரையாடும் (CHAT) வசதியும் வழங்கப்படுகின்றது.
தவிரவும் இணைய வழித் தேர்வுகளை மேற்கொள்ளவும், எழுத்துத் தேர்வு எழுதவும் தொடர்பு மையங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எத்தனை எத்தனை.................
ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல்
தமிழில் வலைத்தளங்கள் இருக்காது போனாலும்
ஒரு மாபெரும் அதீதமான வளர்ச்சி தமிழ் இணையத்தளங்கள் ஊடாக உருவாகியதை
யாராலும் மறுக்க முடியாது.
இணைய வழி தமிழ் வலைப்பதிவுகள்
மெல்ல மெல்ல தமிழ் இணைய உலகில்
தனக்கென தனியானதொரு இடத்தை பிடித்து வருகின்றன.
இன்னொரு முக்கியமான நிகழ்வு
ஏராளமான புதியவர்கள் உற்சாகத்துடன்
தமிழில் புதிய ஆக்கங்கள்,
வெளியான தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மின்பதிப்பாகவும் தந்த வண்ணமுள்ளனர்.
இணையத்தின் ஆணி வேரே Integration என்னும் ஒருங்கிணைப்புதானே?
<b>கூடி வாழ்ந்தால் கோடி</b> நன்மை என்று முன்னோர் சொன்னவற்றை இணைய வழி செயல்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது.
உலகெங்கும் பரந்து வாழும் மக்கள்
முகம் தெரியாமல் இருந்தாலும்
ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து
கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்
நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.
அது
நிலவில் மனிதன் கால் பதித்ததற்கு ஒப்பானது.
வளர்ந்து வரும் வலைப்பதிவுலகத்தின் போக்கை பார்க்கும் போது
இதுவரை வலைப்பதிவு வைப்பதெல்லாம் வெறும் புகழுக்காக, மறுமொழிக்காக எழுதப்படுபவை..
வீண்வேலை என்று கருத்து தெரிவித்து வந்தவர்களே கூட
இன்று வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதிலிருந்து
இணைய உலகில் இதற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் முக்கியதுவத்தை உணரலாம்.
எண்ணிக்கையின் அடிப்படையிலும் சரி,
தொழில்நுட்ப ரீதியாகவும் சரி- வலைப்பதிவுகளில் நாம் காணும் சீரான வளர்ச்சியும், அடுத்தடுத்த படிநிலையை அடைவதில் இருக்கும் உத்வேகமும் இணையம் சம்மந்தப்பட்ட தளங்களில் இருப்பது என்பது கண்கூடு.
<b>யாகு</b> குழுவில் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குழுக்கள் இருக்கின்றன.
அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி...
வலைப்பூக்களில் பல திறமையான எழுத்தாளர்கள் இன்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...
ஈழத்தவரான நமக்கு சொந்தமான பல தமிழ் எழுத்துப் பொக்கிசங்கள்
யாழ் நூலக எரிப்போடு மண்ணாகி விட்டது.
அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும்
மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.
இன்றைய நிலை அன்று இருந்திருந்தால்
எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?
எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப் பார்க்கும் போது, மனம் கனிய வாய்ப்பிருக்கிறது..
அதுவே பலருக்கு ஒரு பதிவாகவும் ஆகி விடும்.
பலர் எழுதும் கட்டுரைகள் மூலம் அவர்களது பயமற்ற குரலை தமிழில் வெளிப்படுத்தியது என்றால், பயமற்ற சிந்தனைகளை இணையத்தில் வெளிப்படுத்தக் காரணமாய் இருந்ததும் இருந்து வருவதும் இணையதளம் என்று சொல்லலாம்.
இணையதளங்கள் \"தமிழின் மிக முக்கியமான விவாதங்ககளுக்கு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள்
இணைய வழி விவாதிக்கப் பட்டுள்ளன.
இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது.
பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள்,
தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம்
இங்கே வெகு சாதாரணம்.
ஒருவர் நெடுநாள் வலை பதிக்கவில்லையெனில் அவரைப்பற்றிய கவலைகளையும், விசாரிப்புகளையும் சக வலைப்பதிவாளர்களிடையே காணலாம்.
இப்படி இணையத்தின் மூலம் துளிர்க்கும் நட்புகளும், கிடைக்கும் தொடர்புகளும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை பயப்பனவாக இருப்பதை அவரவர் வாழ்க்கையில் அறியலாம்.
கதை, கவிதைகள் அல்லாமல் அறிவியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, நடப்புச் செய்திகள், விமர்சனங்கள் என்று இணையம் அளவுக்கு ஆழமாகவும் அறியாப் பிரதேசங்களைத் தொட்டும் எழுதப்பட்ட கட்டுரைகளை இடம் பெற வைத்த சிறப்பு இணையத்துக்கு உண்டு.
மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
\"சிறியோரை இகழ்தலும் இலமே\" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்
சம-மரியாதை தருகிறது.
புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.
இது தமிழனின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.
மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.
வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத
மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.
வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும்.
இணையத்தாலும் வலைப்பூக்களாலும் அச்சு ஊடகங்களுக்கும் நிறைய நன்மை இருக்கிறது.
இன்றைய சூழலில் திரைப்பட விமர்சனங்கள் கிடைக்கின்றன.
நல்ல நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், பழைய கால நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் போன்றவை அச்சு ஊடகங்களில் கிடைப்பதில்லை.
இவை இணையத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
ஜப்பான், சீனா, கொரியா, தைவான், கொங்காங், போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில்,..........
ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது.
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய அப் பணி விரிந்து வளர்ந்தது.
உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில்
இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது.
வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள
மாபெரும் கொடையே இணைய ஊடகம்.
தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தள மேடையே இணைய ஊடகம்தான் என்பதில் ஐயப்பாடு இருக்காது.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு,
மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறவும்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியவும்; உற்பத்தியாகும் பொருள்களை வாங்கவும்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான்.
நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணி முன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இயக்குவதுபோல்) இயக்க முடியும்.
சமகால தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அடைய வேண்டுமென்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றன.
இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலத்தில்
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம்,
தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும்.
தரும்.
<b>மெல்ல அல்ல விரைவாகவே தமிழ்
இணையத்தில் சிறக்கும்.</b>
அடுத்த தலைமுறை தமிழின் பெருமையை உணர இணையத்தின் பிரதான மொழியாக
தமிழ் மொழி அமைய வேண்டும் .
இது உண்மைதான்.
தமிழிலமைந்த பயன்பாட்டு மென்பொருட்கள் பெருக பெருக இன்றுள்ள இளைய தலைமுறையும் தமிழை மறக்க மாட்டார்கள்.
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.......</b>
எனக் கூறி
எமது நண்பர்கள் நாங்கள் விட்டுச் சென்ற மிகுதியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு
வாய்ப்பு தந்த அனைவருக்கும்
நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வணக்கம்.</span>

