01-05-2006, 08:49 PM
மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும் இன்றைய புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையம்
எவ்வளவு கேடுகள் விளைவிக்கின்றது என்ற உண்மையை சொல்லி இளைஞர்களை
திருத்தவேண்டும் என்ற அவாவுடன் களத்தில் நியாயத்துக்காக வாதாடிக்கொண்டிருக்கும்
எனது அணி நண்பர்களே. சமுதாயம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்றவகையில்
உண்மையை தெரிந்தகொண்டும் ஒப்புக்காக வாதாடிக் கொண்டிருக்கும் எதிரணியினரே
அனைவருக்கும் எனது வணக்கம். இரசிகை ஒரு அருமையான தலைப்பை கொடுத்து
அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றார் அவருக்கு எனது நன்றிகள்.
நாங்கள் எதிரணியினர்போல் வார்த்தைஜாலங்கள் செய்யத்தெரியாதவர்கள்
மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவோம். எதிரணியினர் உங்களை குளிரவைப்பதற்
காக தங்கத்தாமரை வெள்ளித்தாமரை என்றெல்லாம் உங்களை ஏமாற்ற முயல்வார்கள்
அதை நம்பி ஒரு பொய்யான தீர்ப்பை வழங்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். நாங்கள் உங்களை
இதயத்தாமரையில்தான் வைத்திருக்கின்றோம். ஏனென்றால் எங்கள் வசதிக்கு அங்குதான் வைத்திருக்க
முடியும்.
எதிரணித்தலைவர் தனது கருத்தில் இணையத்தில் இரண்டாவது இடத்தில்
தமிழ்மொழி இருப்பதாக கூறினார் நாங்கள்அதையும் மறுக்கவில்லை. ஆனால் தமிழில் எத்தனையோ
தோன்றி மறைந்துவிட்டன. காரணம் ஒரு குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு
அவை ஆரம்பிக்கப்பட்டன. இணையம் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதை புலம்பெயர் தமிழ்
இளைஞர்கள் சரியாகப்பயன்படுத்தவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
இணையத்தை நாம் சரியாக பயன்படுத்தினால் யாழ்
களத்தில் ஏன் உறுப்பினர்கள் புனைபெயரில் வருகின்றனர்.இளைஞன் கூறியிருக்கின்றார் 80 வீதம்
இளைஞர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று. உண்மையான பெயரில் கருத்துக்களை வைத்தால்
தங்களை இனம் கண்டு தொல்லைகள் கொடுப்பார்கள் என்றுதானே புனைபெயரில் வருகின்றனர். உண்மையான
பெயரில் வந்திருந்தால் என்னுடைய தங்கை தமிழினி எவ்வளவு நச்சரிப்புக்களை சந்திக்க வேண்டிவரும்.
அசிங்கமான தொலைபேசி அழைப்புக்களை சந்திப்பார். இந்த ஒரு காரணமே போதாதா இளைஞர்கள் இணையத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று. எப்போது சொந்தபடங்களுடன் சொந்தப்பெயரில் இணையங்களில் (களங்களில்)
உலாவமுடியுமோ அப்போது சொல்லுங்கள் புலம்பெயர் இளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனர் என்று
நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
<b>அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கிஇ அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும்இ இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டிஇ
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும்இ நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது. </b>
சில நாட்களுக்குமுன்னர் லங்காசிறி இணையத்துக்கு
சென்றிருந்தேன் பதிவுசெய்யாமல் அரட்டை அடிக்கலாம்என்று கூறப்பட்டிருந்தது. என்னதான் நடக்கின்றது
என்று பார்க்கலாம் என நானும் என்னுடைய மகனுடைய பெயரில் முன்பகுதியை கொடுத்து உள்ளே
சென்று வணக்கம் என்று எழுதினேன். யாரோ ஒருவர் வந்து வணக்கம் என்று என்னுடைய பெயரையும் எழுதினார். அடுத்ததாக எந்த இடம் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்ததாக எத்தனை
குழந்தைகள் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்த கேள்வி அந்த கேடுகெட்டவனிடம் இருந்து
வந்தது கணவர் இருக்கின்றாரா? நானும் இவர் என்னதான் செய்கின்றார் என்று பார்ப்போம் என்று அவர்
வேலைக்கு போய்விட்டார்(அப்போது இரவு 11 மணி) இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவார் என்றேன்.
உடனடியாக தொலைபேசி இலக்கத்தை தரும்படி கேட்டான் அந்த தெருப்பொறுக்கி . இதுவே ஒரு
உண்மையான அப்பாவிப்பெண் தொலைபேசி இலக்கத்தை கொடுத்திருந்தால் ஒரு குடும்பமே சீரழிந்து
போயிருக்கும். முன்பு இணையத்தில் திருமணமாகாத பெண்களை தேடிய இளைஞர்கள் இன்று
திருமணமான பெண்ணை தேடுகின்றான் இது இணையத்தால் கிடைத்த வளர்ச்சியா? இதுதான் இளைஞர்கள்
இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனரா?
இப்படி ஒரு அனுபவத்தை பெற்ற எந்த பெற்றோராவது இணையத்தில் குழந்தைகளை உலாவ
அனுமதிப்பார்களா? தவறுகளை உங்கள்மேல் வைத்துக்கொண்டு பெரியவர்களை குறை கூறாதீர்கள்.
நேரம்போதவில்லை நாளையும் கருத்துக்களை வைக்கவிரும்புகிறன்றேன். அதன்பிறகு எதிரணியினர் தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்
எவ்வளவு கேடுகள் விளைவிக்கின்றது என்ற உண்மையை சொல்லி இளைஞர்களை
திருத்தவேண்டும் என்ற அவாவுடன் களத்தில் நியாயத்துக்காக வாதாடிக்கொண்டிருக்கும்
எனது அணி நண்பர்களே. சமுதாயம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்றவகையில்
உண்மையை தெரிந்தகொண்டும் ஒப்புக்காக வாதாடிக் கொண்டிருக்கும் எதிரணியினரே
அனைவருக்கும் எனது வணக்கம். இரசிகை ஒரு அருமையான தலைப்பை கொடுத்து
அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றார் அவருக்கு எனது நன்றிகள்.
நாங்கள் எதிரணியினர்போல் வார்த்தைஜாலங்கள் செய்யத்தெரியாதவர்கள்
மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவோம். எதிரணியினர் உங்களை குளிரவைப்பதற்
காக தங்கத்தாமரை வெள்ளித்தாமரை என்றெல்லாம் உங்களை ஏமாற்ற முயல்வார்கள்
அதை நம்பி ஒரு பொய்யான தீர்ப்பை வழங்கமாட்டீர்கள் என நம்புகின்றேன். நாங்கள் உங்களை
இதயத்தாமரையில்தான் வைத்திருக்கின்றோம். ஏனென்றால் எங்கள் வசதிக்கு அங்குதான் வைத்திருக்க
முடியும்.
எதிரணித்தலைவர் தனது கருத்தில் இணையத்தில் இரண்டாவது இடத்தில்
தமிழ்மொழி இருப்பதாக கூறினார் நாங்கள்அதையும் மறுக்கவில்லை. ஆனால் தமிழில் எத்தனையோ
தோன்றி மறைந்துவிட்டன. காரணம் ஒரு குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு
அவை ஆரம்பிக்கப்பட்டன. இணையம் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதை புலம்பெயர் தமிழ்
இளைஞர்கள் சரியாகப்பயன்படுத்தவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
இணையத்தை நாம் சரியாக பயன்படுத்தினால் யாழ்
களத்தில் ஏன் உறுப்பினர்கள் புனைபெயரில் வருகின்றனர்.இளைஞன் கூறியிருக்கின்றார் 80 வீதம்
இளைஞர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று. உண்மையான பெயரில் கருத்துக்களை வைத்தால்
தங்களை இனம் கண்டு தொல்லைகள் கொடுப்பார்கள் என்றுதானே புனைபெயரில் வருகின்றனர். உண்மையான
பெயரில் வந்திருந்தால் என்னுடைய தங்கை தமிழினி எவ்வளவு நச்சரிப்புக்களை சந்திக்க வேண்டிவரும்.
அசிங்கமான தொலைபேசி அழைப்புக்களை சந்திப்பார். இந்த ஒரு காரணமே போதாதா இளைஞர்கள் இணையத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என்று. எப்போது சொந்தபடங்களுடன் சொந்தப்பெயரில் இணையங்களில் (களங்களில்)
உலாவமுடியுமோ அப்போது சொல்லுங்கள் புலம்பெயர் இளைஞர்கள் இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனர் என்று
நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
<b>அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கிஇ அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும்இ இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டிஇ
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும்இ நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது. </b>
சில நாட்களுக்குமுன்னர் லங்காசிறி இணையத்துக்கு
சென்றிருந்தேன் பதிவுசெய்யாமல் அரட்டை அடிக்கலாம்என்று கூறப்பட்டிருந்தது. என்னதான் நடக்கின்றது
என்று பார்க்கலாம் என நானும் என்னுடைய மகனுடைய பெயரில் முன்பகுதியை கொடுத்து உள்ளே
சென்று வணக்கம் என்று எழுதினேன். யாரோ ஒருவர் வந்து வணக்கம் என்று என்னுடைய பெயரையும் எழுதினார். அடுத்ததாக எந்த இடம் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்ததாக எத்தனை
குழந்தைகள் என்று கேட்டார் நானும் எழுதினேன். அடுத்த கேள்வி அந்த கேடுகெட்டவனிடம் இருந்து
வந்தது கணவர் இருக்கின்றாரா? நானும் இவர் என்னதான் செய்கின்றார் என்று பார்ப்போம் என்று அவர்
வேலைக்கு போய்விட்டார்(அப்போது இரவு 11 மணி) இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவார் என்றேன்.
உடனடியாக தொலைபேசி இலக்கத்தை தரும்படி கேட்டான் அந்த தெருப்பொறுக்கி . இதுவே ஒரு
உண்மையான அப்பாவிப்பெண் தொலைபேசி இலக்கத்தை கொடுத்திருந்தால் ஒரு குடும்பமே சீரழிந்து
போயிருக்கும். முன்பு இணையத்தில் திருமணமாகாத பெண்களை தேடிய இளைஞர்கள் இன்று
திருமணமான பெண்ணை தேடுகின்றான் இது இணையத்தால் கிடைத்த வளர்ச்சியா? இதுதான் இளைஞர்கள்
இணையத்தை சரியாக பயன்படுத்துகின்றனரா?
இப்படி ஒரு அனுபவத்தை பெற்ற எந்த பெற்றோராவது இணையத்தில் குழந்தைகளை உலாவ
அனுமதிப்பார்களா? தவறுகளை உங்கள்மேல் வைத்துக்கொண்டு பெரியவர்களை குறை கூறாதீர்கள்.
நேரம்போதவில்லை நாளையும் கருத்துக்களை வைக்கவிரும்புகிறன்றேன். அதன்பிறகு எதிரணியினர் தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

