01-05-2006, 06:09 PM
kuruvikal Wrote:முந்தி ஊரில இருக்கேக்க...படிக்கேக்க கூட பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படாத கனபேர் இங்க புலம்பெயர்ந்து வந்த உடனை ஒரு சங்கம் அமைச்சிடுவினம். அதுதான் பழைய மாணவர்..மாணவிகள் சங்கம். அவையட்ட ஒருக்கா பாடசாலைக் கீதம் தெரியுமோ என்று கேளுங்கோ..ம்ம்ம்...நினைக்கல்ல..! பட் பாடசாலையின் பெயரால் நல்லாப் புழங்குதாம்..பெயரும்..புகழும்..பணமும் தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன பொங்க வார நேரம் குருவி லொள்ளுப் பண்ணுதே என்று பாக்கிறேளா.. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் 3 விசயம் நல்லா அவதானிச்சம்.. அரசியலில.. மாற்றுக் கருத்து.. ஓசிப் பேப்பர்..அடிக்கிறது. கோயிலில - போட்டிக்கு அம்மன் முருகன் பிள்ளையார் என்று ஊருக்கு ஒரு கோயில்..கிட்டடில அறிஞ்சம். ஊரில உள்ள அதே பெயரில உங்க கனடா லண்டன் என்று கோயில்களாமே..நாகபூசணி..செல்வச்சந்நிதி என்று அவையும் புலம்பெயர்ந்திட்டினமாமே...! படிப்பில.. பழைய மாணவர் சங்கம்..ஆளாளுக்கு..! எல்லாம் "சம்திங்" சமாச்சாரத்துக்குப் போல...ம்ம்ம்..இப்பவாவது படிச்ச பாடசாலையை நினைக்கினமே..அந்தளவில கப்பி தான். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் குருவிகள்... மன்னிக்க வேணும் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். வேறு யாருடைய கூத்துக்களையும் கேலிகளையும் பார்த்துட்டு எமது இந்த தலைப்பிற்குள் இதை எழுதுவது வேதனைக்குரியது.
மற்றும் குருவிகளே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் எமது பாடசாலை பொங்கல் விழா மிகவும் வேறுபாட்டது. பொங்கல் விழா நிச்சயம் புலத்தில் இருக்கும் மற்ற விழாக்களிலும் வேறுபட்டது. உரும்பிராய் பழைய மாணவர்களின் பிள்ளைகளால் மட்டுமே ஒருக்கிணைந்து நடத்தப்படுகின்றது. அத்துடன் நாம் கேளிக்கைகளுக்கு இடம் கொடுப்பது இல்லை.
கடந்த வருடம் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலமையிலும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவால் உடனே ரத்து செய்யப்பட்டது. கேளிகைகளுக்கு மட்டுமே நாம் இப்படியான நிகழ்வுகளை நடத்துதென்றால் சுனாமி என்ன ஏது வந்தாலும் நடத்தியிருப்போமா?
அடுத்து இந்த பொங்கல் விழா நடத்துவது இன்னொரு நோக்கமும் உண்டு. புலத்தில் இருக்கும் உரும்பிராய் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பேச்சுப்போட்டிகள் சங்கீத போட்டிகள் நடத்தி தமிழ் திறமையை வளர்க்கின்றார்கள். தாயகத்தில் நடந்த ஈழப்போரட்டத்தில் எமது பாடசாலைகள் எல்லாம் பலமாக சேதமடைந்து இருந்தது. அதை திருத்துவதற்கு அரசாங்கம் ஒன்றும் அள்ளிக் கொடுத்து விடவில்லை. எமது பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பிய பணத்தில் தான் எமது பாடசாலைகளில் இப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றது.
ஆகவே எமது பழைய மாணவர் சங்கம் வேறுபட்டது. எமது முக்கிய நோக்கம் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுதும் இங்கு இருக்கும் உரும்பிராய் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை கூட்டுவது தான் எமது பிரதான நோக்கம்.
நீங்கள் எமது பொங்கல் விழாவிற்கு ஒருமுறை வருகை தந்து விட்டு பின்னார் எழுதுங்கள்....


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 