12-28-2003, 12:24 AM
<b>புலிகளை முடக்கவா இலங்கை - இந்திய
பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம்
டி. சிவராம் (தராக்கி) </b> :?
பிசாசுடன் கூட்டுவைத்தாவது தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் எனக்கூறினார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருடைய வழிவந்த சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னையவர் தான் எண்ணியதை வெளிப்படையாகச் சொன்னார். பின்னையவர் அதையே தான் மிகுந்த மதிநுட்பத்துடன் செய்ய முற்பட்டதாக எண்ணுகிறார். புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிக்கையில் ~இலங்கைப் பிரதமரும் இந்தியப் பிரதமரும் அண்மையில் சந்தித்தபோது இலங்கை இனச்சிக்கலுக்கான தீர்வு எந்த வரையறைகளுக்குள் அமைய வேண்டும் என உடன்பாடு| கண்டதாகக் சுட்டிக்காட்டப்பட்டது.
புலிகளின் இடைக்கால வரைவைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் அதற்குள் ஏன் இந்தியாவை இழுக்க வேண்டும்? இனச்சிக்கலின் இறுதித்தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென இந்தியா கொண்டுள்ள கருத்தை ஏன் புலிகளின் இடைக்கால வரைவு பற்றி வெளியிட்ட அறிக்கையினுள் புகுத்த வேண்டும்? நீங்கள் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுகின்ற விடயத்தில் எல்லைமீறினால் அதைத் தடுக்க இந்தியா எம்பக்கம் நிற்கிறது என மறைமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே நாம் மேற்படி அறிக்கையைக் கொள்ள வேண் ண்டியிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்டிடும் ஆவலில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் புலிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூக்குரலிட்டு வருகின்றன.
இந்தியா புலிக்கு எதிரி, புலி நமக்கு எதிரி எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிங்கள அரசியலாளர் பலர் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதும், பேசுவதும் அதைக்கண்டு எம்மத்தியிலுள்ள படித்த பேதைகள் பலர் ~ஆகா, நம் பாரதத்தாயை சிங்களப்பேரினவாதிகள் குழப்பிவிட்டார்கள். நாம் உண்மையை எடுத்தியம்பி இந்தியாவை எம்பக்கம் திருப்பிட வேண்டும்" என அங்கலாய்ப்பர். இவற்றிடையே ~புலிகளின் கடற்படை இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என டெல்லியில் உள்ளவர்கள் கவலை கொள்கின்றனர். புலிகள் எங்ஙனம் தமது படைபலத்தை இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இரட்டிப்பாக்கியுள்ளனர் என நான் இந்தியாவிற்கு விளக்கினேன்" என்பது போன்ற கூற்றுகளை அடிக்கடி வெளியிட்டு அவருக்கே கைவந்த பாணியில் கோமாளிக் கூத்தாடுகிறார் கதிர்காமர்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் சிறிலங்காவும் இந்தியாவும் விரைவில் லபாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம். (னுநகநளெந ஊழழிநசயவழைn) ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அதுபற்றி இருதரப்பும் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிளம்பி எம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டால் புலிகளின் படைவலு முடக்கப்பட்டுவிடும் எனவும் பேச்சுவார்த்தை பிழைத்து சிங்களப்பேரினவாதிகள் தமிழ் மக்கள் மீது போரைக்கட்ட விழ்த்து விடும் போது மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உதவும் எனவும் ஒரு கருத்து இப்போது உலவுகிறது.
இவ்வொப்பந்தம் நமது உரிமைப் போராட்டப்பாதையில் ஒரு பெரும்பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது என வீரியமற்ற தமிழ்க் கருத்தியலாளர் முனகுவதையும் நாம் கேட்கக் கூடியதாயுள்ளது. பழம் எப்போ நழுவிப்பாலில் விழும் அது எப்போ நழுவி வாயில் விழும் என எம்மிடையே காத்துக் கிடந்த எட்டப்பர்கள் சிலர் இதுதான் சரியான சந்தர்ப்பமென எண்ணி 'இந்தியாவே தமிழரின் தாயகம், எனவே இந்தியா இங்கு வந்து தமிழரைக் காப்பாற்ற வேண்டும்" என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டால் புலிகளைப் பற்றிப் பயப்படத்தேவையில்லை எனக் கனவு காண்கின்றனர் இந்தியதாசர்ளாக மாறியுள்ள ஜே.வி.பி. போன்ற பல சிங்களப் பேரினவாதிகள். இனி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் என இந்தியா கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
இதில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவ்வொப்பந்தம் சிறிலங்காவுக்கென பிரத்தியேகமாக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. 1987இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் சிறிலங்காவுக்கெனவே விசேடமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமானது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், திறந்த வான் பறப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப்போல ஒரு பொதுச் சட்டகத்தினடிப்படையில் அமைந்ததாகும். 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வியட்நாம் அரசுடன் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது. வியட்நாமினுடைய ரஷ்ய தயாரிப்பு மிக் வேக வானு}ர்திகளை பழுதுபார்க்கவும், அவற்றிற்கான புதிய ஓட்டிகளுக்குப் பயிற்சியளிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர ஆயுத உற்பத்தி செய்ய உதவி வழங்கவும், வியட்நாமியக் கடற்படையின் சண்டைப்படகுகள், கப்பல்கள் ஆகியவற்றைப் பழுதுபார்க்கவும், தரமுயர்த்தவும் மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ஒத்துக்கொண்டது. அத்துடன் இந்தியா தயாரிக்கும் போர்த் தளபாடங்களை முன்னிணக்க விலைக்கு வியட்நாமிற்கு விற்கவும் இந்த ஒப்பந்தம் வழிசமைத்தது. இந்திய படைகளுக்கு விசேட காட்டுச் சண்டைப் பயிற்சி வழங்கவும் இந்தியாவிடமிருந்தது அதிவேக ரோந்துப்படகுகளை வாங்கவும், இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டாகச் செயற்படவும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி வியட்நாம் ஒத்துக் கொண்டது. 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி வியட்நாம் தலைநகர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அங்கு ஐந்து நாள் தங்கி மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இதைத் தொடர்ந்து இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி டெல்லி சென்ற சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் தியோசீ ஹியானும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ{ம் இரு நாடுகளுக்குமிடையிலான ~பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இவ்வொப்பந்தம் நிறைவேறியது. தென்கிழக்காசியாவின் அமெரிக்கச்சார்புக் கூட்டணியான ஆசியானின் (யுளநயn) அமைப்பை சேர்ந்த நாடுகளில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்ட முதலாவது நாடு சிங்கப்பூராகும்.
புலனாய்வுப் பரிமாற்றம், படைத்துறைப் பயிற்சி படையதிகாரிகள் பரிமாற்றம், கூட்டுக் கடற்படைப்பயிற்சி நடவடிக்கை என்பன இந்திய - சிங்கப்பூர் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும். இந்திய மாகடல் வரை படத்தை நீங்கள் அவதானித்தால் சிங்கப்பூரின் இருப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் இன்றியமையாத மலாக்கா நீரிணையின் வாயிலாக இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதைக் காணலாம். இந்த வகையிலும், மலேசியா, இந்தோனேசியா ஆகிய பெரிய நாடுகளின் பிராந்தியச் செல்வாக்கை ஓரளவு சமநிலைப்படுத்தவும் சிங்கப்பூருக்கு இருக்கும் தேவையை கணக்குப் பண்ணி இந்த பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது எனலாம். (எனினும் இது அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்குமிடையில் இருக்கும் மிக நெருக்கமான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)
நவம்பர் மாத இறுதியில் இந்தியத் தலைநகரம் வந்த பிறேசில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் அந்நாட்டின் உயர்மட்ட படைத்துறைக்குழுவினரும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் ஒரு விரிவான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைத் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆயுதம் மற்றும் பல்வேறு போர்த்தளபாட, சண்டை வானு}ர்தி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மூன்றாம் உலக நாடு பிறேசிலாகும். அதன் போர்த்தளபாட, ஆயுதத் தொழிற்றுறையில் பங்கெடுக்கவும், பயனடையவும் அந்நாட்டுடனான பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் என்பது டெல்லியின் கணிப்பு.
இதுபோல செக் குடியரசுடனும் இந்தியா இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விரிவான பேச்சுக்களை நடத்துமுகமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை செக்குடியரசின் தலைநகரான பிராக் சென்றிருந்தார். 'இந்தியப்படைகளுக்கான பார ஊர்திகளை கூட்டாக உற்பத்தி செய்வது தொடர்பாகவும் வு - 72 தாங்கிகளையும் ஆஐ ரக உலங்கு வானு}ர்திகளையும் தரமுயர்த்துவது பற்றியும், இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பெர்னாண்டஸ{க்கும் செக் பாதுகாப்பு அமைச்சர் மிரோஸ்லாவ் கொஸ்டெல்காவிற்குமிடையில் விரிவான பேச்சுகள் நடைபெற்றன" என இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். பெர்னாண்டசும் செக் பாதுகாப்பு அமைச்சரும் அக்டோபர் 20ஆம் திகதி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கடந்த மாதம் ஓமான் நாட்டுடனும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆரம்பித்தது. அதற்குரிய இறுதிவரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓமானின் படைவீரர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தியா பயிற்சி வழங்கும். அத்துடன் இந்தியப் போர்த் தளபாடங்களை ஓமான் இதனடிப்டையில் வசதிவிலைக்கு வாங்கவும் ஏற்பாடாகிறது.
இவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்போமேயானால் இந்தியாவின் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் யாதென்பது ஓரளவேணும் புரியும். உலகின் பல்வேறு படைகளுடன் நேரடிப் பயிற்சி, கூட்டு நடவடிக்கைகள், தகவல் மற்றும் புலனாய்வுப் பரிமாற்றம் என்பவற்று}டாக தொடர்புகளை வளர்த்தெடுத்தல், போர்த்தளபாட விற்பனவு, கூட்டு உற்பத்தி என்பவற்றிற்கான வாய்ப்புக்களைப் பெருக்குதல் என்பவற்றையே மேற்படி இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திற்கு அப்பாலும் போரியற் செல்வாக்குள்ள ஒரு அரசாக உலக அரங்கில் காலடி எடுத்துவைக்கவும் இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு வழிசமைக்கிறது. அதைவிட மிக முக்கியமானதாக இவ்வொப்பந்தத்தில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இது எவ்வகையிலும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்பதே. அந்த நோக்கில் அதன் சட்டகம் வடிவமைக்கப்படவில்லை என்பது மேற்கூறிய உதாரணங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாயின் அதைக் கைச்சாத்திடும் இருநாடுகளில் ஒன்றுக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடு படையுதவி செய்ய வேண்டுமென்பதே அதன் அடிப்படை. இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை 1971ஆம் ஆண்டு சோவியத் குடியரசுடன் மட்டுமே இந்தியா செய்திருந்தது. அதுவும் 2001ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விடுபடுவதும் மேற்படி கூட்டுறவு ஒப்பந்தங்களை பரவலாக இந்தியா செய்வதன் பின்னணியிலுள்ள ஒரு நோக்கமாகும்.
இது சிறிலங்காவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமல்ல என்பதும் தெளிவு. இந்தியாவின் மாறி வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு வீயுூகங்களென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
நன்றி: வீரகேசரி 21-12-03
பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம்
டி. சிவராம் (தராக்கி) </b> :?
பிசாசுடன் கூட்டுவைத்தாவது தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் எனக்கூறினார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருடைய வழிவந்த சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னையவர் தான் எண்ணியதை வெளிப்படையாகச் சொன்னார். பின்னையவர் அதையே தான் மிகுந்த மதிநுட்பத்துடன் செய்ய முற்பட்டதாக எண்ணுகிறார். புலிகள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசு வெளியிட்ட அதிகாரபூர்வமான அறிக்கையில் ~இலங்கைப் பிரதமரும் இந்தியப் பிரதமரும் அண்மையில் சந்தித்தபோது இலங்கை இனச்சிக்கலுக்கான தீர்வு எந்த வரையறைகளுக்குள் அமைய வேண்டும் என உடன்பாடு| கண்டதாகக் சுட்டிக்காட்டப்பட்டது.
புலிகளின் இடைக்கால வரைவைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் அதற்குள் ஏன் இந்தியாவை இழுக்க வேண்டும்? இனச்சிக்கலின் இறுதித்தீர்வு எவ்வாறு அமைய வேண்டுமென இந்தியா கொண்டுள்ள கருத்தை ஏன் புலிகளின் இடைக்கால வரைவு பற்றி வெளியிட்ட அறிக்கையினுள் புகுத்த வேண்டும்? நீங்கள் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுகின்ற விடயத்தில் எல்லைமீறினால் அதைத் தடுக்க இந்தியா எம்பக்கம் நிற்கிறது என மறைமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே நாம் மேற்படி அறிக்கையைக் கொள்ள வேண் ண்டியிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதைக்காட்டிடும் ஆவலில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் புலிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூக்குரலிட்டு வருகின்றன.
இந்தியா புலிக்கு எதிரி, புலி நமக்கு எதிரி எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சிங்கள அரசியலாளர் பலர் சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவதும், பேசுவதும் அதைக்கண்டு எம்மத்தியிலுள்ள படித்த பேதைகள் பலர் ~ஆகா, நம் பாரதத்தாயை சிங்களப்பேரினவாதிகள் குழப்பிவிட்டார்கள். நாம் உண்மையை எடுத்தியம்பி இந்தியாவை எம்பக்கம் திருப்பிட வேண்டும்" என அங்கலாய்ப்பர். இவற்றிடையே ~புலிகளின் கடற்படை இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என டெல்லியில் உள்ளவர்கள் கவலை கொள்கின்றனர். புலிகள் எங்ஙனம் தமது படைபலத்தை இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது இரட்டிப்பாக்கியுள்ளனர் என நான் இந்தியாவிற்கு விளக்கினேன்" என்பது போன்ற கூற்றுகளை அடிக்கடி வெளியிட்டு அவருக்கே கைவந்த பாணியில் கோமாளிக் கூத்தாடுகிறார் கதிர்காமர்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் சிறிலங்காவும் இந்தியாவும் விரைவில் லபாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம். (னுநகநளெந ஊழழிநசயவழைn) ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாகவும் அதுபற்றி இருதரப்பும் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கிளம்பி எம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டால் புலிகளின் படைவலு முடக்கப்பட்டுவிடும் எனவும் பேச்சுவார்த்தை பிழைத்து சிங்களப்பேரினவாதிகள் தமிழ் மக்கள் மீது போரைக்கட்ட விழ்த்து விடும் போது மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்காப் படைகளுக்கு இந்தியா உதவும் எனவும் ஒரு கருத்து இப்போது உலவுகிறது.
இவ்வொப்பந்தம் நமது உரிமைப் போராட்டப்பாதையில் ஒரு பெரும்பின்னடைவை ஏற்படுத்தப்போகின்றது என வீரியமற்ற தமிழ்க் கருத்தியலாளர் முனகுவதையும் நாம் கேட்கக் கூடியதாயுள்ளது. பழம் எப்போ நழுவிப்பாலில் விழும் அது எப்போ நழுவி வாயில் விழும் என எம்மிடையே காத்துக் கிடந்த எட்டப்பர்கள் சிலர் இதுதான் சரியான சந்தர்ப்பமென எண்ணி 'இந்தியாவே தமிழரின் தாயகம், எனவே இந்தியா இங்கு வந்து தமிழரைக் காப்பாற்ற வேண்டும்" என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டால் புலிகளைப் பற்றிப் பயப்படத்தேவையில்லை எனக் கனவு காண்கின்றனர் இந்தியதாசர்ளாக மாறியுள்ள ஜே.வி.பி. போன்ற பல சிங்களப் பேரினவாதிகள். இனி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் என இந்தியா கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
இதில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவ்வொப்பந்தம் சிறிலங்காவுக்கென பிரத்தியேகமாக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. 1987இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் சிறிலங்காவுக்கெனவே விசேடமாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமானது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், திறந்த வான் பறப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப்போல ஒரு பொதுச் சட்டகத்தினடிப்படையில் அமைந்ததாகும். 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வியட்நாம் அரசுடன் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது. வியட்நாமினுடைய ரஷ்ய தயாரிப்பு மிக் வேக வானு}ர்திகளை பழுதுபார்க்கவும், அவற்றிற்கான புதிய ஓட்டிகளுக்குப் பயிற்சியளிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர ஆயுத உற்பத்தி செய்ய உதவி வழங்கவும், வியட்நாமியக் கடற்படையின் சண்டைப்படகுகள், கப்பல்கள் ஆகியவற்றைப் பழுதுபார்க்கவும், தரமுயர்த்தவும் மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ஒத்துக்கொண்டது. அத்துடன் இந்தியா தயாரிக்கும் போர்த் தளபாடங்களை முன்னிணக்க விலைக்கு வியட்நாமிற்கு விற்கவும் இந்த ஒப்பந்தம் வழிசமைத்தது. இந்திய படைகளுக்கு விசேட காட்டுச் சண்டைப் பயிற்சி வழங்கவும் இந்தியாவிடமிருந்தது அதிவேக ரோந்துப்படகுகளை வாங்கவும், இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையுடன் கூட்டாகச் செயற்படவும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி வியட்நாம் ஒத்துக் கொண்டது. 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி வியட்நாம் தலைநகர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அங்கு ஐந்து நாள் தங்கி மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இதைத் தொடர்ந்து இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி டெல்லி சென்ற சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் தியோசீ ஹியானும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ{ம் இரு நாடுகளுக்குமிடையிலான ~பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இவ்வொப்பந்தம் நிறைவேறியது. தென்கிழக்காசியாவின் அமெரிக்கச்சார்புக் கூட்டணியான ஆசியானின் (யுளநயn) அமைப்பை சேர்ந்த நாடுகளில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்ட முதலாவது நாடு சிங்கப்பூராகும்.
புலனாய்வுப் பரிமாற்றம், படைத்துறைப் பயிற்சி படையதிகாரிகள் பரிமாற்றம், கூட்டுக் கடற்படைப்பயிற்சி நடவடிக்கை என்பன இந்திய - சிங்கப்பூர் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும். இந்திய மாகடல் வரை படத்தை நீங்கள் அவதானித்தால் சிங்கப்பூரின் இருப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் இன்றியமையாத மலாக்கா நீரிணையின் வாயிலாக இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தமான் - நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதைக் காணலாம். இந்த வகையிலும், மலேசியா, இந்தோனேசியா ஆகிய பெரிய நாடுகளின் பிராந்தியச் செல்வாக்கை ஓரளவு சமநிலைப்படுத்தவும் சிங்கப்பூருக்கு இருக்கும் தேவையை கணக்குப் பண்ணி இந்த பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது எனலாம். (எனினும் இது அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்குமிடையில் இருக்கும் மிக நெருக்கமான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.)
நவம்பர் மாத இறுதியில் இந்தியத் தலைநகரம் வந்த பிறேசில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் அந்நாட்டின் உயர்மட்ட படைத்துறைக்குழுவினரும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் ஒரு விரிவான பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தமொன்றைத் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆயுதம் மற்றும் பல்வேறு போர்த்தளபாட, சண்டை வானு}ர்தி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மூன்றாம் உலக நாடு பிறேசிலாகும். அதன் போர்த்தளபாட, ஆயுதத் தொழிற்றுறையில் பங்கெடுக்கவும், பயனடையவும் அந்நாட்டுடனான பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் என்பது டெல்லியின் கணிப்பு.
இதுபோல செக் குடியரசுடனும் இந்தியா இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விரிவான பேச்சுக்களை நடத்துமுகமாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதி வரை செக்குடியரசின் தலைநகரான பிராக் சென்றிருந்தார். 'இந்தியப்படைகளுக்கான பார ஊர்திகளை கூட்டாக உற்பத்தி செய்வது தொடர்பாகவும் வு - 72 தாங்கிகளையும் ஆஐ ரக உலங்கு வானு}ர்திகளையும் தரமுயர்த்துவது பற்றியும், இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பெர்னாண்டஸ{க்கும் செக் பாதுகாப்பு அமைச்சர் மிரோஸ்லாவ் கொஸ்டெல்காவிற்குமிடையில் விரிவான பேச்சுகள் நடைபெற்றன" என இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். பெர்னாண்டசும் செக் பாதுகாப்பு அமைச்சரும் அக்டோபர் 20ஆம் திகதி பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கடந்த மாதம் ஓமான் நாட்டுடனும் மேற்படி பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான விரிவான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆரம்பித்தது. அதற்குரிய இறுதிவரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அது கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓமானின் படைவீரர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்தியா பயிற்சி வழங்கும். அத்துடன் இந்தியப் போர்த் தளபாடங்களை ஓமான் இதனடிப்டையில் வசதிவிலைக்கு வாங்கவும் ஏற்பாடாகிறது.
இவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்போமேயானால் இந்தியாவின் பாதுகாப்புக்கூட்டுறவு ஒப்பந்தம் யாதென்பது ஓரளவேணும் புரியும். உலகின் பல்வேறு படைகளுடன் நேரடிப் பயிற்சி, கூட்டு நடவடிக்கைகள், தகவல் மற்றும் புலனாய்வுப் பரிமாற்றம் என்பவற்று}டாக தொடர்புகளை வளர்த்தெடுத்தல், போர்த்தளபாட விற்பனவு, கூட்டு உற்பத்தி என்பவற்றிற்கான வாய்ப்புக்களைப் பெருக்குதல் என்பவற்றையே மேற்படி இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திற்கு அப்பாலும் போரியற் செல்வாக்குள்ள ஒரு அரசாக உலக அரங்கில் காலடி எடுத்துவைக்கவும் இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு வழிசமைக்கிறது. அதைவிட மிக முக்கியமானதாக இவ்வொப்பந்தத்தில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இது எவ்வகையிலும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்பதே. அந்த நோக்கில் அதன் சட்டகம் வடிவமைக்கப்படவில்லை என்பது மேற்கூறிய உதாரணங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாயின் அதைக் கைச்சாத்திடும் இருநாடுகளில் ஒன்றுக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற நாடு படையுதவி செய்ய வேண்டுமென்பதே அதன் அடிப்படை. இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை 1971ஆம் ஆண்டு சோவியத் குடியரசுடன் மட்டுமே இந்தியா செய்திருந்தது. அதுவும் 2001ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து விடுபடுவதும் மேற்படி கூட்டுறவு ஒப்பந்தங்களை பரவலாக இந்தியா செய்வதன் பின்னணியிலுள்ள ஒரு நோக்கமாகும்.
இது சிறிலங்காவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமல்ல என்பதும் தெளிவு. இந்தியாவின் மாறி வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு வீயுூகங்களென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
நன்றி: வீரகேசரி 21-12-03

