Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#6
<b>சிந்தியா த(தா) இந்தியா?!</b> :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?

(இவ் ஆய்வு 22.12.03 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் ~தமிழ்க்குரல்| வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)



சிறிலங்காவின் அரசியல் தளத்தைப் போல் இந்தியாவின் அரசியல் தளமும் இப்போது பரபரப்பு மிகுந்த ஒன்றாக விளங்குகின்றது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளை பாரதிய ஜனதாக் கட்சியே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் ஓர் ஆச்சரியமான உண்மையாகும். அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதாக் கட்சிக்குமிடையேயுள்ள முறுகல் நிலை மேலும் கசப்படைந்து மத்திய அமைச்சரவையிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறிக் கொள்கின்ற அளவிற்கு இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள பரபரப்பு நிலையையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. எதிர்காலத்தில் இந்திய மத்திய-மாநில அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் வருமா? அரசில் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் வருமா? என்றெல்லாம் இப்போது பரவலாகப் பேசுவதும் ஆரம்பமாகிவிட்டது.

இந்தியாவிற்குள் எத்தகைய அரசில் மாற்றங்கள் வந்தாலும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பெரிதாக மாற்றம் எதுவும் நடந்து விடுவதில்லை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள். பொதுவாக சகல உலக நாடுகளிலும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ எது தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினாலும் அந்த அரசு தன்னுடைய நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில், அதனது நடைமுறைகளில் அதிக மாற்றங்களைச் செய்வதில்லை. இந்த அணுகுமுறைதான் பொதுவாக சகல வெளிநாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றில் முக்கியமான மாற்றம் ஒன்று வரவேண்டும் என்று விரும்புகின்ற ஓர் இனம் இந்தியாவிற்கு மிக அருகிலேயே இருக்கின்றது என்பதையும் இந்த வேளையில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அரசியல் பொருளாதார ரீதியாக ஈழத்தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் குறிப்பாக தென்னிந்தியாவிற்கு இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதை வரலாறு கூறும். பின்னாளில் ஒருங்கிணைந்த சுதந்திர இந்தியாவிற்குள் தென்னிந்தியாவும் சேர்ந்து கொண்டது உண்மையென்றாலும் அண்மைக் காலம்வரை ஈழத்தமிழினத்திற்கும், நவ இந்தியாவிற்குமிடையே நெருங்கிய நல்லுறவு இருந்தே வந்துள்ளது. திருமதி இந்திரா காந்தியின் அரசியல் பார்வை இந்த நல்லுறவின் உச்சியைத் தொடவைத்தது.

ஈழத்தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத்தமிழர்கள் சம்பந்தப்படாத இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னால் இந்த நல்லுறவில் விரிசல் ஏற்பட்டமை ஒரு துர் அதிர்ஷ்டமான காலப்பகுதியாகும். ஈழத்தமிழினத்தின் அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் தீர்க்க தரிசனம் இல்லாமல் அன்றைய இந்திய அரசும், அதன் வெளிவிவகார ஆலோசகர்களும் எடுத்த அவசர, அலங்கோல முடிவுகள் ஈற்றில் அனர்த்தத்தையே கொண்டு வந்தன. அன்றைய நிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை வேறு ஒரு வெளிநாடு இந்தியா மீது திணித்திருந்தால் இந்தியா எவ்வாறு தனது உரிமையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற போராடியிருக்குமோ அதையேதான் ஈழத்தமிழினமும் செய்தது அதில் இருந்த நியாயத்தை விருப்பு வெறுப்பின்றிச் சிந்தித்தால் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

'இலங்கைப் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்குவதானால் அதனுடைய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இலண்டன் நகர மாவீரர் நாள் உரையின்போது தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கியமான கருத்தாகும். இது குறித்து சில விடயங்களைத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்தியாவுடனான ஆத்மார்த்தமான நட்புறவை நாடி தன்னுடைய விருப்பத்தை, வேண்டுகோளை தமிழீழத் தலைமை தொடர்ந்து தெரிவித்தே வந்துள்ளது. தன்மீது இந்திய அரசியல்-இராணுவ அழுத்தங்கள் இருந்த நேரத்திலும் சரி, அந்த அழுத்தங்களை வெற்றிகொண்ட வேளையிலும் சரி சிங்கள அரசுகளுடனான போரில் பல இராணுவ வெற்றிகளையும், அரசியல் வெற்றிகளையும் அடைந்த போதும் சரி தமிழீழத் தலைமை தன்னுடைய உள்ளக் கிடக்கையை இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளது. இது குறித்து சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டலாம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தக் கால கட்டத்தில் அதாவது சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் பேசிய உரையின்போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசியிருந்தார். 'இந்திய - இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத்தராது" என்பதை விளக்கிய தலைவர் அதே மேடையிலேயே இந்தியாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையையும், நட்புணர்வையும் தெளிவுபடுத்தியிருந்தார். 'நாம் இந்தியாவை நேசிக்கின்றோம், இந்திய மக்களை நேசிக்கின்றோம் நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அவர் தெளிவாகவே கூறியிருந்தார்.

தேசியத் தலைவரின் அந்தக் கூற்று நேர்மையானதாகவும், தெளிவானதாகவும் இருந்துள்ளது. இந்தியாவின் அப்போதைய அரசின் தெளிவற்ற சிந்தனையால் உருவாக்கப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர் அதே வேளையில் இந்திய தேசத்தின் மீதான தம்முடைய நட்புறவையும் தெளிவுபடுத்தியிருந்தார். இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் அடிப்படையில் புலிகள் எதிரானவர்கள் அல்ல என்ற திடமான, தெளிவான சிந்தனையை அப்போதே தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த ஆண்டு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தினது கவனத்தையும் ஈர்த்த சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டின் போதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவுடனான நட்புறவு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசியிருந்தார். 1987ம் ஆண்டு புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக இருந்தன. 2002ம் ஆண்டு சமாதானச் சூழ்நிலை ஏற்படுகின்ற வேளையில் புலிகளுக்கு இருந்த இராணுவப் பலமும், அரசியல் பலமும் வேறாக விசுவரூபமாக இருந்தன. ஆனால் அந்த இரண்டு வித்தியாசமான காலப்பகுதிகளிலும் தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவின் நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

பின்னர் சிறிலங்கா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகிய போதும் இந்தியாவின் அனுசரனையை விடுதலைப்புலிகள் நாடி நின்றதை நாம் அறிவோம். சுமாதானப் பேச்சுக்களை விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னின்று நடாத்திய மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அவ்வேளையில் இந்தியாவின் அனுசரணையை பல வழிகளில் நாடியதையும் நாமறிவோம். துரதிர்ஷ்டவசமாக தற்போதய இந்திய அரசு விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தை புறந்தள்ளியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தமது நட்புறவை வெளிப்படுத்தiயே வந்துள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உருப்பினர்களில் ஒருவரான வே.பாலகுமாரன் அவர்கள் மீண்டும் இதே கருத்துக்களை தெரிவித்திருந்தார். திரு பாலகுமாரன் அவர்கள் தெரிவித்த அக்கருத்துக்கள் இந்தியாவுடனான நிலைப்பாடு குறித்து தேசியத் தலைவரின் சிந்தனையை மீண்டும் அடிக்கோடிடுவதாகவே அமைந்துள்ளன.

திரு வே.பாலகுமாரன் அவர்கள் கீழ்வருமாறு பேசியிருந்தார்.

'இந்தியாவுடன் நட்புறவோடு இணங்கிச் செயற்பட மனப்புூர்வமாக விரும்புகின்றோம். இதில் எந்தவிதமான அநாவசியமான குழப்பங்களும் கிடையாது. இந்தியா எமது து}ரத்து உறவு நாடு. நாங்கள் இந்தியாவிடம் எந்த மோதலையும் ஏற்படுத்த என்றுமே விரும்பியதில்லை. நடந்தவை எல்லாம் நடந்தவையாக இருக்கட்டும். நாங்கள் என்றைக்கும் இந்தியாவின் போக்குக்கு எதிராகச் செயல்படப்போவதில்லை. இதைத்தான் இந்தியாவிற்கு சொல்ல விரும்புகிநோம். இந்தியாவுடன் எந்தச் சிக்கலுக்கும் போகாமல் நல்லுறவைப் பேண விரும்புகிறோம். எனவே இந்தியா எங்களைப் பகைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பது எமக்குத் தெரியும். எம்மோடு இந்தியா நேர்மையாக உறவு வைக்க முன்வந்தால் நாங்களும் இணக்கமாகச் செயல்பட தயாராக இருக்கின்றோம். அவர்களாகவே உருவாக்கிக் கொண்டால் அன்றி எம்மோடு மோதுவதற்கு இந்தியாவிற்கு எந்தக் காரணமும் கிடையாது. நாம் இதை புதுடில்லிக்கு தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். இந்தியவின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர நாங்கள் தயாராக இல்லை. எனவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அனுகவேண்டும் என்று திரு பாலகுமாரன் அவர்கள் இந்தியாவுடனான புலிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். 'தற்போதய அரசியல் நிலைமை தொடர்பாகத் தமிழீழத் தேசியத் தலைவர் எமக்கு விளக்கம் அளித்திருக்கின்றார். முழு உணர்வுத்திறனுடன் இன்றைய சர்வதேச அரசியலை முன்கூட்டியே அறிந்து அதன்படி செயல்படுகின்றோம். என்று தேசியத் தலைவர் எமக்குக் கூறியிருக்கின்றார்" என்று திரு வே.பாலகுமாரன் தெரிவித்திருப்பதானது தலைவரின் சிந்தனையின் தீர்க்க தரிசனத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. 'இந்தியாவின் பிராந்திய அரசியலில் எந்தக் குழப்பத்தையும் கொண்டுவர புலிகள் தயாராக இல்லை எனவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுகவேண்டும் என்ற அந்தச் சொற்றொடர் ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவுடனான நட்புறவு குறித்து தமது நிலைப்பாட்டை முன்னர் 1987 இலும் பின்னர் 2002இலும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான திரு வே.பாலகுமாரன் ஊடாகவும் மீண்டும் தலைவரது நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது."

இப்போது மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்திய வெளியுறவில் மாற்றம் வேண்டும் என்றும் கோறியுள்ளார்.

தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை இன்றல்ல, நேற்றல்ல அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாகவே வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் சிங்கள தேசம் அவ்வாறு நடந்துள்ளதா? சிங்களத் தலைமைகள் அவ்வாறு நடந்துள்ளதா? சராசரி சிங்கள மக்கள் இந்தியா மீது கொண்டுள்ள அபிப்பிராயம்தான் என்ன?

வரலாற்று ரீதியாக ஈழத் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும் நெருங்கிய நட்புறவு இருந்து வந்துள்ளமையை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சிங்கள தேசமும், இந்தியாவும் தொடர்ந்து முரண்பட்டே வந்துள்ளதைத்தான் வரலாறு காட்டி நிற்கின்றது. இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பின்னரும்கூட இதே இந்திய வெறுப்புணர்வைத்தான் சிங்களத் தலைமைகளும், அரசியல்வாதிகளும் கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ உதவிகள் ரீதியாக சிறிலங்கா தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் பல இந்திய எதிர்ப்பு நாடுகளாகவே இருந்தன. சீனாவையும், பாகிஸ்தானையும் உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். முன்னர் வல்லரசாக இருந்த ரஷ்யாவோடு இந்தியா நெருங்கிய நட்புக் கொண்டிருந்த காலத்தில் சிறிலங்கா அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றது.

இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் சிங்கள தேசம் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி பரம்பரை, பரம்பரையாகவே தொடரப்பட்டுள்ளது. வருந்தத்தக்க வகையில் இந்தத் துவேச உணர்ச்சியானது சாதாரணச் சிங்களப் பொதுமக்களிடமும் பலமாக விதைக்கப்பட்டுவிட்டது. 1985 இல் இந்தியாவும், இலங்கையும் கலந்து கொண்ட 'டெஸ்ட்" (வுநளவ) கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை சிறிலங்கா வென்றது. இந்திய அணியை சிறிலங்கா அணி வென்றதைக் கொண்டாடுமுகமாக அடுத்த நாளை நாடு தழுவிய பொது விடுமுறையாக சிறிலங்கா அரசு அறிவித்ததை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழினத்தை கலந்து கொள்ளாமல் அவர்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாத இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இரு அரசுகளும் கைச்சாத்திட முயன்ற போது சிங்களப் பகுதிகளில் கடும் எதிர்ப்புத் தோன்றியதன் காரணம் என்ன? பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இந்தியா சம்பந்தப்படக் கூடாது என்ற இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

அன்று இந்தியா வரக்கூடாது என்று கூக்குரல் இட்ட அதே சிங்களச் சக்திகள் இன்று இந்தியா வரவேண்டும் என்று கெஞ்சுவதன் காரணம் மனமாற்றம் அல்ல! தமிழினத்தின் பலத்தை, உரிமைப் போராட்டத்தை எந்த வகையிலாவது நசுக்கிவிட வேண்டும் என்ற பரிதவிப்புத்தான்.

இப்படிப்பட்ட பின்புலத்தில் சிறிலங்கா குறித்த இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை நாம் தர்க்கிக்க விரும்புகின்றோம்.

பல மொழிகளைப் பேசுகின்ற, பல இனங்களைச் சார்ந்த, பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் அரசு தன்னை இந்த மக்களின் பிரதிநிதியாக் கருதிச் செயல்படுகின்றது. அதுவே முறையானதாகும். பல்லின மொழி, பண்பாட்டை ஒருங்கிணைத்துப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தியா அதே உள்நாட்டுப் பார்வையை தனது அண்டை நாடுகளிடமும் காட்ட வேண்டும். ஆனால் இந்தியாவோ தனது அண்டை நாடான இலங்கைத் தீவின் பிரச்சனைகளை சிங்கள தேசத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கின்றது. ஆகவே இந்தியாவின் கொள்கையானது தமிழர் நலனையும், சிங்களவர் நலனையும் சமமாகச் சீர் கொண்டு பார்க்காமல் சிங்கள ஏகாதிபத்தியத்தின் பால் சார்பாகச் செயல்படுகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கைத் தீவின் இரண்டு இனங்களுக்கும் பொதுவானதாகவே அமைய வேண்டும் இந்த மாற்றம் இந்தியாவிடம் ஏற்பட வேண்டும்.

தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தைச் சற்று ஆழமாகக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும் தமிழீழத்தவரின் விடுதலைப் போராட்டத்தால்தான் இந்தியாவின் பிராந்திய மேலாண்மை ஓரளவிற்காவது காப்பாற்றப்பட்டுள்ளது. இன்று தமிழர் தேசம் தமது நிலப்பரப்புக்களைத் தம்மிடமே தக்க வைத்துக் கொண்டிருப்பதானால்தான் இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத நாடுகளின் சக்திகள் புக முடியாமல் இருக்கின்றன. இன்று தமிழர் தேசம் தனது நிலப்பரப்பைத் தக்க வைக்காமல் போயிருந்தால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு சிறிலங்கா அரசு குத்தகைக்குக் கொடுத்து விட்டிருக்கும். இப்போது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப்படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகளில் இந்திய விரோத சக்திகள்தான் குடியிருந்திருக்கும்.

இந்தியா சிந்திக்க வேண்டும்!

நீண்ட காலமாகவே இந்தியா குறித்த தங்கள் நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்தி வந்துள்ளர்கள். மீண்டும், மீண்டும் இந்தியாவுடனான ஆத்மார்த்த நட்பினை வேண்டி தமிழர் தலைமை நேசக்கரத்தை நீட்டி நிற்கின்றது. இந்தியா போன்ற ஒரு பிராந்திய முக்கியத்துவம் கொண்ட நாடு கரிசனப்படக்கூடிய விடயங்கள் பல உண்டுதான்! மறுக்கவில்லை! அதேபோல் இலங்கைத் தீவில் வாழும் தெசிய இனமான தமிழினத்தை இன்று உரு பலம் பொருந்திய இனமாக மாற்றிய மாபெரும் சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கம் விளங்குகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்! இப்படிப்பட்ட நிலையில் இந்தியா கருத்தில் கொள்ளக் கூடிய பல கேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தெளிவாகவும், விரிவாகவும் விடையிருத்தே வந்துள்ளர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்ற விடயங்கள்தான் என்ன?

'இந்தியாவின் பிராந்திய மோலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

'இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப் பலிகள் எதிரானவர்கள் அல்ல"

'இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை"

'இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செயல்படுபவர்கள் அல்ல"

'இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

'இந்தியாவின் பிராந்திய அரசியல்க் களத்தில் குழப்பம் எதையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகள் விரும்பவில்லை"

மாறாக விடுதலைப் பலிகள் விரும்புவது என்ன?

'இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவே விடுதலைப் புலிகள் விரும்புகின்றார்கள்"

'இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாக, நேசச் சக்தியாகவே விடுதலைப் புலிகள் கருதுகின்றார்கள்"

'இந்தியாவுடன் நட்புறவோடு நெருங்கிச் செயற்பட விடுதலைப் புலிகள் மனப்புூர்வமாக விரும்புகின்றார்கள்"

'இப்படிப்பட்ட சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்"

தமிழீழ விடுதலைப் பலிகளின் இந்த நியாயமான வேண்டுகோளை இந்தியா ஏற்க வேண்டும். அதற்குறிய நடவடிக்கைகளில் இந்தியா இறங்க வேண்டும். இந்த விடயங்களில் மேலும் தெளிவு தேவைப்படும் பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ஆகவே இந்தியா புலிகளை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும்!

இதுவே ஈழத் தமிழினத்தினதும் அதன் தலைமையினதும் கோரிக்கையாகும்.

இந்தியா சிந்திக்க வேண்டும்!

நன்றி: தமிழ்நாதம் & தமிழ்க்குரல்| வானொலி (அவுஸ்திரேலியா )
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)