01-02-2006, 10:32 AM
<b>நீதி தவறாது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் போல அமந்திருக்கும் நடுவர் செல்வமுத்து ஜயா அவர்களுக்கும் தனது பேரிலேயே தமிழையும் தமிழ்பண்பாட்டையும் கொண்டிருக்கும் தமிழினி அம்மா அவர்களுக்கும் எனது முதல் வணக்கங்கள் (பாண்டிய மன்னன் நீதி தவறி தீர்ப்பு வழங்கியதால் என்ன நடந்தது என்பது நடுவருக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்) தேவையில்லாமல். . . . மன்னிக்கவும். . . . நல்ல கருத்துள்ள பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகைக்கும் இங்கு நடாத்துவதற்கு அனுமதியளித்த கள நிர்வாகத்துக்கும் நன்றிகள் நல்லதொரு தமிழ் சமுதாயத்தை உருவாக்கவேணுமெண்ட ஆதங்கத்துடன் சோழியன் அவர்களுக்கு கீழ் அணிவகுத்து நிற்கும் தோழர்களுடன் நானும் இருப்பதில் பெருமையடைகிறேன் எதிர் தரப்பில் பரிதாபமாக ஏண்டா இதுக்கை வந்து மாட்டுப்பட்டம் எண்டு முழிபிதுங்க அமந்திருக்கும் எமது எதிரணியினருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்
நடுவர் அவர்களே எனக்கு முன்னால் பேசிய விஷ்ணுதம்பி சிப்பாய்கள் கொமாண்டோ என்று சொல்லி ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வந்து எமது அணியினரையும் உங்களையும் பயப்படுத்தப்பாக்கிறார் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேணும் எண்டு கேட்டுக் கொள்கிறேன்
திடீரெண்டு அணியிலை கடைசி ஆட்டக்காரர் முன்னுக்கு வந்தால் எதிரணியினருக்கு ஒரு பயம் இருக்கும்தான். . . . சரி இண்டைக்கு தலைப்பு இணையம் புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு நன்மையை தருகுதா அல்லது தீமையை தருகுதா என்பதே.. . . .முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே அவர்கள்தான் என்ன செய்வார்கள் அங்கை பாருங்க. . .இருக்கிற எல்லாரும் சின்னஆட்கள் இந்த வயசிலை தாங்கள் பிடிச்சதான் சரி எண்டு நிப்பார்கள் எங்கள் அணியில் இருப்பவர்கள் போல அறிவான அனுபவசாலிகளின் கருத்துக்களை அவர்கள் காலவோட்டத்தில் உள் வாங்கி தங்களைத் திருத்திக் கொள்ளுவார்கள் எண்டு நம்புகிறேன்
எதிரணியில் எனக்கு முன்னம் வந்த விஷ்ணு தம்பி [b]இணையத்தில் சீரழிவுகள் இருக்குது தான் ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் கெட்டுப் போவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு</b> எண்டு கூறிச் சென்றார் அப்ப அவரே ஒத்துக் கொள்கிறார் இந்த மனக்கட்டுப்பாடு எங்கடை இளைஞர் இடத்தில் இருக்கிறதா எண்டதுதானே பிரச்சனையே எதை பாக்கப்பிடாது எண்டு சொல்லுகிறோமோ அதைதான் முதல் போய் பாத்துவிட்டு மற்றவேலை பார்ப்பார்கள் அந்த இளமைத் துடிப்பால் அதிகம் ஈடுபடுபவர்களே அதிகம் என்றே நாம் வாதாடுகிறோம் சரி அப்பிடி மனக்கட்டுபாடோடு சாமியாரைப் போல இருந்தால் தம்பியனுக்கு ஏதோ வருத்தம் எண்டு வைத்தியரிட்டை போற பெற்றோரைத்தானே பாத்திருக்கிறம்
இன்னெண்று குறிப்பிட்டார் <b>சிறந்த வாழ்க்கைத்துனையை பெற்றுக் கொள்ள இணையம் உதவி செய்கிறது </b>எண்டு ஜயா. . .குறிப்புப் பாத்து நேரை போய் பெம்பிளையும் பாத்து பத்துப் பேரிட்டை விசாரித்து செய்யிற கலியாணங்களே பிச்சுக்கிது இந்த லட்சணத்திலை இணையத்திலை போய் பெம்பிளை எடுத்தால். . . . .சிலவேளைகளில் விஷ்ணு போன்றவர்களுக்கு அப்பிடி செட் ஆகியிருந்தால் சந்தோஷம். . .அடுத்தது <b>வேலைப்பளுவால் வீடு வாற இளைஞனுக்கு இணைய அரட்டை புத்துணர்ச்சியை தருவதாக. .</b> .இது நல்ல பகிடி ஒரு இளைஞன் உற்சாகமாக திடகாத்திரமாக இருக்கவேணுமெண்டால் ஜீம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யுங்கோ அல்லது பீச்சுப் பக்கமா போய் அப்படியே கடலை போட்டுட்டு . .மன்னிக்கவும் . . கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நடந்திட்டு வாங்கோ எப்பிடி மனசிலும் உடம்பிலும் உற்சாகம் வரும் எண்டு தெரியும் இதை விட்டுட்டு அறை புூட்டிப்போட்டு கணணிக்கு முன்னாலை குந்தியிருந்தால் உற்சாகம் வராது தலையிடிதான் வரும்
எதிர்தரப்பு தலைவர் கூறினார் <b>தொழிநுட்ப வளர்ச்சி இணைய வளர்ச்சி மேல் நோக்கி இருக்கவேணுமா? கீழ் நோக்கியிருக்கவேணுமா எண்டு . .</b> .நாங்கள் அதை மறுக்கவில்லை அவர்கள் சொல்லுவது போல எந்தப்பக்கத்திலையாவது வளர்ந்துட்டுப் போகட்டும் ஆனால். .அந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேணுமெண்டதே எமது கருத்து அதே போல இன்னெண்டையும் குறிப்பிட்டார் <b>இளம் பெண்கள் சுதந்திரமாகவும் தமது கருத்துக்களை சொல்வதுக்கு இடமளிக்கிறது எண்டு </b>ஜயா இதுக்கு முன்னம் பத்திரிகைகளில் பெண்கள் சுதந்திரமாக கருத்துகள் எழுதவில்லையா. . ?ஆனா இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எத்தனை பெண்கள் இணையத்தின் ஊடாக எங்களைப் போல நல்லா ஆண்களை எல்லாம் கவிழ்த்திருக்கிறார்கள் எண்டு சொல்லட்டா. . .(வேண்டாம் அது வேறை பட்டிமன்றமாகப் போய்விடும்) இன்று புலத்தில் இருப்பவர்கள் பணவிசயத்தில் ஒரு குறையுமில்லாமல்தான் இருக்கிறார்கள் அவர்களின் இந்த நாகாPக வளர்ச்சியில் கணணி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கையாளப்படுகிறது. தனது பிள்ளை இணையத்தில் புகுந்து விளையாடுவான் எண்டு சொல்லிப் பெருமைப்படுகிறவர்கள் பிள்ளைகள் இணையத்தில்; எங்கை புகுந்து நிக்கினம் எண்டதை ஏன்தான் பாக்கிறார்கள் இல்லையோ தெரியேலை. . இதற்கு காரணம் சில இடங்களில் படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் இருப்பது பிள்ளைகளுக்கு வசதியாகப் போய் விட்டது அல்லது வெளிநாட்டு நாகாPகத்தில் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது அழகில்லை எண்டு எண்ணமும் சில பெற்றோரிடம் இருக்கலாம் இப்பிடி அளவுக்கு அதிகமான சுதந்திரமும் கவனிப்பாரற்று இருப்பதாலும் இளைஞர்கள் தவறான வழியில் இணையத்தை பயன்படுத்த உதவுகிறது
எதிர் தரப்பினர் கூறலாம் இணைய வசதி இருப்பதால்தான் இப்பிடியொரு பட்டிமன்றத்தை நடத்தக்கூடியதாக இருக்கிறது எண்டு .. வருஷத்திலை ஆத்தி பு|த்தாப்போல ஒரு நிகழ்ச்சி இதை வைத்துக் கொண்டு இணையம் நன்மையை தருகிறது எண்டு நடுவர்கள் வரமாட்டார்கள் எண்டு நம்புகிறேன் ஆனா இதிலும் ஒன்றை கவனிக்க வேணும் இங்கு கருத்தாடுபவர்களின் உண்மையான திறமையை எங்களால் அறிய முடியுமா? மேடையில் பேசுவதுக்கும் இதுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்வீர்கள்தானே இந்த இணைய வசதி ஒரு துடிப்புள்ள இளைஞனை நாலு சுவத்துக்கு இருந்து தனிய சிரிச்சுக் கதைப்பது பார்பவர்களுக்கு பைத்தியக்காரனோ என எண்ண வைக்கிறது எண்டு சொன்னாலும் தவறில்லைதானே. . ஒரு தங்கை குறிப்பிட்டா <b>இணையத்தளங்களில் இருக்கும் ஆபாசப்படங்கள் புத்தங்களில் இல்லையா எண்டு.</b> . .நல்ல கருத்து ஒரு புத்தகத்தை வைத்துப் பாக்கும் போது அறிவு குறைந்த பெற்றோராலும் அதை கண்டு கண்டிப்பதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு (நான் இருக்கும் நாட்டிலை அப்படியான புத்தகங்களுக்கும் கறுப்பு மையடிச்சுத்தான் விடுகிறாங்கள் என்னத்தைப் பாக்கிறது) ஆனால் இணையத்தில் அப்பிடியா. . .? டவுண்லோட் பண்ணி கணணியில் ஒளிச்செல்லோ வைக்கிறீயள் எங்கை போய் தேடுறது
அண்மையில் இந்தியாவின் இணையத்தள சேவர் அமைப்பொண்றிடம் இளைய சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் கேட்டார்கள் இணையத்திலிருக்கும் ஆபாச தளங்களை தடைசெய்ய முடியாதா எண்டு அதுக்கு அவர்கள் கூறினார்கள் ஒருநாளுக்கு இணையத்தில் வருபவர்களில் 75 சதவீதமானவர்கள் அப்பிடியான தளங்களைத்தான் பார்வையிடுகிறார்கள் மிகுதி 25 வீதம்தான் சாதாரண தளங்களுக்கு போவதாக இந்த நிலையில் அப்பிடியான தளங்களை தடை செய்தால் நாங்கள் எல்லாரும் மூட்டைகட்ட வேண்டியதுதான் என்று . . .அப்போ இப்பிடியான தளங்களை நம்பித்தான் அவையின்ரை வாழ்க்கையே போகுது என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான தளங்களை பார்வையிடுபவர்கள் இளைஞர்கள் எண்டுதான் நம்புகிறேன்;. . . .
இணையத்தில் பலதரப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது என்கிறார்கள் மறுக்கவில்லை ஆனால் எமது இளைய சமுதாயம் எப்பிடியான செய்திகளை உள் வாங்குகிறார்கள் எண்டு கவனிக்கவேணும் அன்று எனது நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் அவரின் 15 வயதுள்ள மகன் அங்கிள் இந்த வீடீயோ பாத்தீங்களா எண்டு கணணியிலை ஒரு படத்தைக் காட்டினான் நான் திகைத்து போய்விட்டேன் என்னவெண்றால் அண்மையில் ஈராக்கில் அல்ஹாய்தா தீவிரவாதிகளால் பிடிக்கபட்ட ஒரு பயணகைதியை கொலை செய்யும் காட்சி அதுவும் தலையை துண்டாக வெட்டி மற்றைய கையில் எடுத்து காட்டுகிறார்கள் எனக்கு இதை சொல்லும் போது கை நடுங்குது ஆனா இந்த சிறுவன் இதை அடிக்கடி போட்டுப் பாக்கிறான் இப்பிடி மனநிலையுள்ள அந்த பையன் இதை செய்து பாத்தால் என்ன எண்டு வெளிக்கிட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை அப்ப இந்த இணைய வசதியால் ஒருவன் கொலையாளி ஆவதுக்கும் அதை எப்பிடி செய்வது என்பதுக்கும் ஜடியா குடுப்பதாகவும் நாங்கள் எடுக்கலாம்தானே. . . .
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்த நாடாவது ஆபாச தளங்களை தடை செய்ய முன்வருகுதோ அதன் பிறகு நாங்கள் பார்க்கலாம் எவ்வளவு இளைஞர்கள் இணையத்தை விருப்புடன் பாக்கிறார்கள் எண்டு அதுக்கு எந்த நாடும் முன்வராது . . (ஆனா. . .ஓரே ஒரு நாடு இருக்குது. .அந்த பாவப்பட்ட பாலவனத்து நாட்டிலிருந்துதான் எனது கருத்தை சொல்லுகிறன் ஜயா) மீண்டும் விஞ்ஞான வளர்ச்சி நாகாPகம் எண்டு அறிமுகமான இணையம் எமது இளைஞரை சோம்பேறிகளாக்கி உடல் திடகாத்திர மில்லாத நோயாளிகளாக் கூட மாற்றியிருக்கிறது /மாற்றுகிறது என்று கூறி வாய்ப்பு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் நன்றி
<b>வணக்கம் </b>
நடுவர் அவர்களே எனக்கு முன்னால் பேசிய விஷ்ணுதம்பி சிப்பாய்கள் கொமாண்டோ என்று சொல்லி ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வந்து எமது அணியினரையும் உங்களையும் பயப்படுத்தப்பாக்கிறார் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேணும் எண்டு கேட்டுக் கொள்கிறேன்
திடீரெண்டு அணியிலை கடைசி ஆட்டக்காரர் முன்னுக்கு வந்தால் எதிரணியினருக்கு ஒரு பயம் இருக்கும்தான். . . . சரி இண்டைக்கு தலைப்பு இணையம் புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு நன்மையை தருகுதா அல்லது தீமையை தருகுதா என்பதே.. . . .முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே அவர்கள்தான் என்ன செய்வார்கள் அங்கை பாருங்க. . .இருக்கிற எல்லாரும் சின்னஆட்கள் இந்த வயசிலை தாங்கள் பிடிச்சதான் சரி எண்டு நிப்பார்கள் எங்கள் அணியில் இருப்பவர்கள் போல அறிவான அனுபவசாலிகளின் கருத்துக்களை அவர்கள் காலவோட்டத்தில் உள் வாங்கி தங்களைத் திருத்திக் கொள்ளுவார்கள் எண்டு நம்புகிறேன்
எதிரணியில் எனக்கு முன்னம் வந்த விஷ்ணு தம்பி [b]இணையத்தில் சீரழிவுகள் இருக்குது தான் ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் கெட்டுப் போவதுக்கு சந்தர்ப்பம் இருக்கு</b> எண்டு கூறிச் சென்றார் அப்ப அவரே ஒத்துக் கொள்கிறார் இந்த மனக்கட்டுப்பாடு எங்கடை இளைஞர் இடத்தில் இருக்கிறதா எண்டதுதானே பிரச்சனையே எதை பாக்கப்பிடாது எண்டு சொல்லுகிறோமோ அதைதான் முதல் போய் பாத்துவிட்டு மற்றவேலை பார்ப்பார்கள் அந்த இளமைத் துடிப்பால் அதிகம் ஈடுபடுபவர்களே அதிகம் என்றே நாம் வாதாடுகிறோம் சரி அப்பிடி மனக்கட்டுபாடோடு சாமியாரைப் போல இருந்தால் தம்பியனுக்கு ஏதோ வருத்தம் எண்டு வைத்தியரிட்டை போற பெற்றோரைத்தானே பாத்திருக்கிறம்
இன்னெண்று குறிப்பிட்டார் <b>சிறந்த வாழ்க்கைத்துனையை பெற்றுக் கொள்ள இணையம் உதவி செய்கிறது </b>எண்டு ஜயா. . .குறிப்புப் பாத்து நேரை போய் பெம்பிளையும் பாத்து பத்துப் பேரிட்டை விசாரித்து செய்யிற கலியாணங்களே பிச்சுக்கிது இந்த லட்சணத்திலை இணையத்திலை போய் பெம்பிளை எடுத்தால். . . . .சிலவேளைகளில் விஷ்ணு போன்றவர்களுக்கு அப்பிடி செட் ஆகியிருந்தால் சந்தோஷம். . .அடுத்தது <b>வேலைப்பளுவால் வீடு வாற இளைஞனுக்கு இணைய அரட்டை புத்துணர்ச்சியை தருவதாக. .</b> .இது நல்ல பகிடி ஒரு இளைஞன் உற்சாகமாக திடகாத்திரமாக இருக்கவேணுமெண்டால் ஜீம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்யுங்கோ அல்லது பீச்சுப் பக்கமா போய் அப்படியே கடலை போட்டுட்டு . .மன்னிக்கவும் . . கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நடந்திட்டு வாங்கோ எப்பிடி மனசிலும் உடம்பிலும் உற்சாகம் வரும் எண்டு தெரியும் இதை விட்டுட்டு அறை புூட்டிப்போட்டு கணணிக்கு முன்னாலை குந்தியிருந்தால் உற்சாகம் வராது தலையிடிதான் வரும்
எதிர்தரப்பு தலைவர் கூறினார் <b>தொழிநுட்ப வளர்ச்சி இணைய வளர்ச்சி மேல் நோக்கி இருக்கவேணுமா? கீழ் நோக்கியிருக்கவேணுமா எண்டு . .</b> .நாங்கள் அதை மறுக்கவில்லை அவர்கள் சொல்லுவது போல எந்தப்பக்கத்திலையாவது வளர்ந்துட்டுப் போகட்டும் ஆனால். .அந்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கவேணுமெண்டதே எமது கருத்து அதே போல இன்னெண்டையும் குறிப்பிட்டார் <b>இளம் பெண்கள் சுதந்திரமாகவும் தமது கருத்துக்களை சொல்வதுக்கு இடமளிக்கிறது எண்டு </b>ஜயா இதுக்கு முன்னம் பத்திரிகைகளில் பெண்கள் சுதந்திரமாக கருத்துகள் எழுதவில்லையா. . ?ஆனா இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எத்தனை பெண்கள் இணையத்தின் ஊடாக எங்களைப் போல நல்லா ஆண்களை எல்லாம் கவிழ்த்திருக்கிறார்கள் எண்டு சொல்லட்டா. . .(வேண்டாம் அது வேறை பட்டிமன்றமாகப் போய்விடும்) இன்று புலத்தில் இருப்பவர்கள் பணவிசயத்தில் ஒரு குறையுமில்லாமல்தான் இருக்கிறார்கள் அவர்களின் இந்த நாகாPக வளர்ச்சியில் கணணி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கையாளப்படுகிறது. தனது பிள்ளை இணையத்தில் புகுந்து விளையாடுவான் எண்டு சொல்லிப் பெருமைப்படுகிறவர்கள் பிள்ளைகள் இணையத்தில்; எங்கை புகுந்து நிக்கினம் எண்டதை ஏன்தான் பாக்கிறார்கள் இல்லையோ தெரியேலை. . இதற்கு காரணம் சில இடங்களில் படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் இருப்பது பிள்ளைகளுக்கு வசதியாகப் போய் விட்டது அல்லது வெளிநாட்டு நாகாPகத்தில் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடுவது அழகில்லை எண்டு எண்ணமும் சில பெற்றோரிடம் இருக்கலாம் இப்பிடி அளவுக்கு அதிகமான சுதந்திரமும் கவனிப்பாரற்று இருப்பதாலும் இளைஞர்கள் தவறான வழியில் இணையத்தை பயன்படுத்த உதவுகிறது
எதிர் தரப்பினர் கூறலாம் இணைய வசதி இருப்பதால்தான் இப்பிடியொரு பட்டிமன்றத்தை நடத்தக்கூடியதாக இருக்கிறது எண்டு .. வருஷத்திலை ஆத்தி பு|த்தாப்போல ஒரு நிகழ்ச்சி இதை வைத்துக் கொண்டு இணையம் நன்மையை தருகிறது எண்டு நடுவர்கள் வரமாட்டார்கள் எண்டு நம்புகிறேன் ஆனா இதிலும் ஒன்றை கவனிக்க வேணும் இங்கு கருத்தாடுபவர்களின் உண்மையான திறமையை எங்களால் அறிய முடியுமா? மேடையில் பேசுவதுக்கும் இதுக்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்வீர்கள்தானே இந்த இணைய வசதி ஒரு துடிப்புள்ள இளைஞனை நாலு சுவத்துக்கு இருந்து தனிய சிரிச்சுக் கதைப்பது பார்பவர்களுக்கு பைத்தியக்காரனோ என எண்ண வைக்கிறது எண்டு சொன்னாலும் தவறில்லைதானே. . ஒரு தங்கை குறிப்பிட்டா <b>இணையத்தளங்களில் இருக்கும் ஆபாசப்படங்கள் புத்தங்களில் இல்லையா எண்டு.</b> . .நல்ல கருத்து ஒரு புத்தகத்தை வைத்துப் பாக்கும் போது அறிவு குறைந்த பெற்றோராலும் அதை கண்டு கண்டிப்பதுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு (நான் இருக்கும் நாட்டிலை அப்படியான புத்தகங்களுக்கும் கறுப்பு மையடிச்சுத்தான் விடுகிறாங்கள் என்னத்தைப் பாக்கிறது) ஆனால் இணையத்தில் அப்பிடியா. . .? டவுண்லோட் பண்ணி கணணியில் ஒளிச்செல்லோ வைக்கிறீயள் எங்கை போய் தேடுறது
அண்மையில் இந்தியாவின் இணையத்தள சேவர் அமைப்பொண்றிடம் இளைய சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் கேட்டார்கள் இணையத்திலிருக்கும் ஆபாச தளங்களை தடைசெய்ய முடியாதா எண்டு அதுக்கு அவர்கள் கூறினார்கள் ஒருநாளுக்கு இணையத்தில் வருபவர்களில் 75 சதவீதமானவர்கள் அப்பிடியான தளங்களைத்தான் பார்வையிடுகிறார்கள் மிகுதி 25 வீதம்தான் சாதாரண தளங்களுக்கு போவதாக இந்த நிலையில் அப்பிடியான தளங்களை தடை செய்தால் நாங்கள் எல்லாரும் மூட்டைகட்ட வேண்டியதுதான் என்று . . .அப்போ இப்பிடியான தளங்களை நம்பித்தான் அவையின்ரை வாழ்க்கையே போகுது என்னைப் பொறுத்த மட்டில் இப்படியான தளங்களை பார்வையிடுபவர்கள் இளைஞர்கள் எண்டுதான் நம்புகிறேன்;. . . .
இணையத்தில் பலதரப்பட்ட செய்திகளை அறிய முடிகிறது என்கிறார்கள் மறுக்கவில்லை ஆனால் எமது இளைய சமுதாயம் எப்பிடியான செய்திகளை உள் வாங்குகிறார்கள் எண்டு கவனிக்கவேணும் அன்று எனது நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் அவரின் 15 வயதுள்ள மகன் அங்கிள் இந்த வீடீயோ பாத்தீங்களா எண்டு கணணியிலை ஒரு படத்தைக் காட்டினான் நான் திகைத்து போய்விட்டேன் என்னவெண்றால் அண்மையில் ஈராக்கில் அல்ஹாய்தா தீவிரவாதிகளால் பிடிக்கபட்ட ஒரு பயணகைதியை கொலை செய்யும் காட்சி அதுவும் தலையை துண்டாக வெட்டி மற்றைய கையில் எடுத்து காட்டுகிறார்கள் எனக்கு இதை சொல்லும் போது கை நடுங்குது ஆனா இந்த சிறுவன் இதை அடிக்கடி போட்டுப் பாக்கிறான் இப்பிடி மனநிலையுள்ள அந்த பையன் இதை செய்து பாத்தால் என்ன எண்டு வெளிக்கிட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை அப்ப இந்த இணைய வசதியால் ஒருவன் கொலையாளி ஆவதுக்கும் அதை எப்பிடி செய்வது என்பதுக்கும் ஜடியா குடுப்பதாகவும் நாங்கள் எடுக்கலாம்தானே. . . .
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்த நாடாவது ஆபாச தளங்களை தடை செய்ய முன்வருகுதோ அதன் பிறகு நாங்கள் பார்க்கலாம் எவ்வளவு இளைஞர்கள் இணையத்தை விருப்புடன் பாக்கிறார்கள் எண்டு அதுக்கு எந்த நாடும் முன்வராது . . (ஆனா. . .ஓரே ஒரு நாடு இருக்குது. .அந்த பாவப்பட்ட பாலவனத்து நாட்டிலிருந்துதான் எனது கருத்தை சொல்லுகிறன் ஜயா) மீண்டும் விஞ்ஞான வளர்ச்சி நாகாPகம் எண்டு அறிமுகமான இணையம் எமது இளைஞரை சோம்பேறிகளாக்கி உடல் திடகாத்திர மில்லாத நோயாளிகளாக் கூட மாற்றியிருக்கிறது /மாற்றுகிறது என்று கூறி வாய்ப்பு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன் நன்றி
<b>வணக்கம் </b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

