01-01-2006, 11:10 PM
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் இளையோர் நன்மையே அடைகிறார்கள் என்ற தலைப்பில் தனது கருத்தை மிக அழகாக வைத்துச்சென்றார் விஸ்ணு. ( நேரில பட்டி மன்றம் வைச்சா அடிபிடி நடக்குமோ??)
பிரியசகியின் கருத்தை வெட்டிச்சென்ற விஸ்ணு மனக்கட்டுப்பாடின்மையே ஒருவிடயத்திற்கு அடிமையாவதற்குக்காணரம். மனக்கட்டுப்பாடற்றவர்கள் தான் இணையத்திற்கு அடிமையாகிறார் என்கிறார். அலைபாயும் மனசுடையவர்கள் இளையோர் எதையும் கையாண்டு பார்க்கவேண்டும் என்று எண்ணும் வயசு என்கிறார்கள்.. இளையோரிடம் மனக்கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியுமோ..?? பார்ப்போம் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன கருத்து வருகின்றது என்பதை
இணையமானது சிறுவயதில் இங்கு வந்த இளையோருக்கு தாயக உணர்வை ஊட்டும் பணியைச்செய்கிறது என்று விஸ்ணு கூறுகிறார்.. குறிப்பாக TYO என்கின்ற ஒரு இணையத்தை சுட்டிக்காட்டுகிறார்.. பல்லாயிரக்கணக்கான இணையங்கள் இருக்கையில் ஒரு சில இணையங்கள் தாயக உணர்வை ஊட்டினால் போதுமா என்கின்ற கேள்வியை எழுப்புவார்களோ எதிரணியினர்..??
உடனுக்குடன் உலகச்செய்திகளைமட்டும் அல்ல தாயகத்துச்செய்தியையும் அறிய இணையம் உதவி செய்கிறது. இது நன்மையில்லையா..?? என்கிறார் விஸ்ணு. அது தானே இது நன்மையில்லையா என்ன..??
பத்துப்பேர் மத்தில் பூரணமான ஒருவனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இணையம் உதவுகிறது என்கிறார்.?? எப்படி செய்தியை உடனுக்குடன் அறிந்தால் மட்டும் பூரணத்துவம் அடைந்துவிட முடியுமா..?? பதில் வருகிறதா பார்ப்போமே..??
காலநிலை அறிவது பள்ளித்தேவைகளை நிறைவேற்றுவது என்று எத்தனையோ தேவைகளுக்கு இந்த இணையம் பயன்படுகிறது என்கிறார் விஸ்ணு.
இன்னொன்று... பள்ளித்தேவைகளுக்காக (ஒப்படைக்காக) இணையத்தில் தகவல்களைத்தேடும் மாணவர்கள் இணையத்தில் உள்ளவற்றை அப்படியே பிரதி பண்ணி அதனை ஆசிரியரிடம் தங்கள் ஆக்கமாக கொடுக்கிறார்கள். அப்படிக்கொடுக்கையில் அதாவது இன்னொருவருடைய அவரது ஆக்கத்தை பிரதி பண்ணிக்கொடுப்பதால் குறிப்பிட்ட மாணவனுக்கு என்ன பயன்..?? குறிப்பிட்ட மாணவன் குறிப்பிட்ட பாடத்தை தானாய் படித்து அதற்குரிய விடையைத்தேடாது பிறர் எழுதியுள்ளதை பிரதி பண்ணிக்கொடுப்பதன் மூலம் அவன் அறிவு வளர்கிறதா..?? நடைமுறை ரீதியாக தான் படித்ததை பிரதியிடவேண்டிய சூழ்நிலில் அவனால் என்ன செய்யமுடியும்..?? குறிப்பாக கூகுல் போன்ற இணையத்தில் பாடத்தின் தலைப்பை எழுதிவிட்டால் தேவையான விடயங்கள் வரும் அவற்றை கொப்பி பண்ணிக்கொடுக்கும் போது பயன் என்ன..?? மாறாக மாணவன் வாசித்து அதை விளங்கிக்கொண்டு தனது சொந்த பதிலை தானாய் எழுதும் போது அவனது அறிவு விருத்தியாகிறது. (பலர் இதையே செய்கிறார்கள் ஒருசிலர் விதிவிலக்கு..) இது நன்மையா என்ன..??
வங்கி நடவடிக்கைகள் பிரயாண ஒழுங்குகள் போன்றவற்றை இணையத்தின் ஊடாக மிக இலகுவாக செய்துமுடிக்கலாம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளார் இது நன்மை தான்.
(ஆனால் இப்படி இருந்த இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்துவிட்டால் மனிதன் சோம்பேறி ஆகமாட்டானா என்ன). எங்கே எதிரணியினர் என்ன சொல்லப்போகிறார்கள்.
எங்கள் இளையோர் இன்னொன்றை செய்யவும் இந்த இணையம் வழிவகுக்கிறது. வங்கி நடவடிக்கைகளை மற்றும் இணையத்தில் வங்கித்தகவல்களை பயன்படுத்தும் நிறுவனங்களை கக் பண்ணி அதனால் பணம் ஈட்டவும் வழிவகுக்கிறது. இது கூட நன்மை தானா..?? எங்கே பதில்
வேலைச்சுமையுடன் வரும் இளையோர் ஓய்வெடுப்பதற்கு இணையம் பொழுதுபோக்கு சாதனமாக அமைகிறது என்கிறார் விஸ்ணு.. பாடல்கள் படங்கள் போன்றவற்றை இலவசமாக இறக்க முடியும் என்கிறார். ம் யாரோ கஸ்டப்பட்டு படம் எடுக்க அதை இணையத்தில் போட்டு அவர்கள் உளைப்பில மண்ணை அள்ளிப்போட்டு சட்டத்தையும் மீறுவது நன்மையா இது சீரழிவில்லையா என்று கேட்பார்களா மற்ற அணியினர் பார்ப்போம்.
சிலர் சரியான வழிநடத்தலின்றி அல்லது தனிப்பட்ட பலவீனம் காரணமாக சீரழிந்து போவதை பல நல்ல விடையங்களை வாரிவழங்கும் இணையத்தை குறை கூற முடியுமா என்கிறார் விஸ்ணு..?? சீரழிவதற்கு காரணம் எதுவானாலும் பயன்படுத்தும் ஊடகம் இணையமாக இருக்கையில் குறை கூறாமல் என்ன செய்வது ..??
<b>இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.
</b>
கடைசியாக ஒரு கருத்தை உறுதியாக வைத்துச்சென்றிருக்கிறார். சீரழிவுகளிற்கு பல காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கருத்திற்கு சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போமே..
<b>அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி...</b>
இளையோரைச்சீரழியக்கூடிய விடயங்கள் இணையத்தில் உள்ளன என்பதை ஒத்துக்கொண்டதாலோ என்னவோ.?? இளையோரை இடுப்பில கட்டுப்போட்டு வழிநடத்தச்சொல்றார். பார்ப்போம் எதிரணியினர் என்ன சொல்கிறார்கள் என்று.
கடைசியாக ஒரு மிரட்டல் விட்டுச்செல்கிறார்.. தாங்கள் சிப்பாய்கள் கொமாண்டோக்கள் பின்னால் வருகிறார்கள் என்கிறார். எங்கே கொமாண்டோக்களை எதிர்கொள்ளத்தயாராகுங்கள் எதிரணியினர்.
சீரழிகிறார்கள் என்கின்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். முட்டிமோதுங்கள் பார்ப்போம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிரியசகியின் கருத்தை வெட்டிச்சென்ற விஸ்ணு மனக்கட்டுப்பாடின்மையே ஒருவிடயத்திற்கு அடிமையாவதற்குக்காணரம். மனக்கட்டுப்பாடற்றவர்கள் தான் இணையத்திற்கு அடிமையாகிறார் என்கிறார். அலைபாயும் மனசுடையவர்கள் இளையோர் எதையும் கையாண்டு பார்க்கவேண்டும் என்று எண்ணும் வயசு என்கிறார்கள்.. இளையோரிடம் மனக்கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியுமோ..?? பார்ப்போம் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன கருத்து வருகின்றது என்பதை
இணையமானது சிறுவயதில் இங்கு வந்த இளையோருக்கு தாயக உணர்வை ஊட்டும் பணியைச்செய்கிறது என்று விஸ்ணு கூறுகிறார்.. குறிப்பாக TYO என்கின்ற ஒரு இணையத்தை சுட்டிக்காட்டுகிறார்.. பல்லாயிரக்கணக்கான இணையங்கள் இருக்கையில் ஒரு சில இணையங்கள் தாயக உணர்வை ஊட்டினால் போதுமா என்கின்ற கேள்வியை எழுப்புவார்களோ எதிரணியினர்..??
உடனுக்குடன் உலகச்செய்திகளைமட்டும் அல்ல தாயகத்துச்செய்தியையும் அறிய இணையம் உதவி செய்கிறது. இது நன்மையில்லையா..?? என்கிறார் விஸ்ணு. அது தானே இது நன்மையில்லையா என்ன..??
பத்துப்பேர் மத்தில் பூரணமான ஒருவனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இணையம் உதவுகிறது என்கிறார்.?? எப்படி செய்தியை உடனுக்குடன் அறிந்தால் மட்டும் பூரணத்துவம் அடைந்துவிட முடியுமா..?? பதில் வருகிறதா பார்ப்போமே..??
காலநிலை அறிவது பள்ளித்தேவைகளை நிறைவேற்றுவது என்று எத்தனையோ தேவைகளுக்கு இந்த இணையம் பயன்படுகிறது என்கிறார் விஸ்ணு.
இன்னொன்று... பள்ளித்தேவைகளுக்காக (ஒப்படைக்காக) இணையத்தில் தகவல்களைத்தேடும் மாணவர்கள் இணையத்தில் உள்ளவற்றை அப்படியே பிரதி பண்ணி அதனை ஆசிரியரிடம் தங்கள் ஆக்கமாக கொடுக்கிறார்கள். அப்படிக்கொடுக்கையில் அதாவது இன்னொருவருடைய அவரது ஆக்கத்தை பிரதி பண்ணிக்கொடுப்பதால் குறிப்பிட்ட மாணவனுக்கு என்ன பயன்..?? குறிப்பிட்ட மாணவன் குறிப்பிட்ட பாடத்தை தானாய் படித்து அதற்குரிய விடையைத்தேடாது பிறர் எழுதியுள்ளதை பிரதி பண்ணிக்கொடுப்பதன் மூலம் அவன் அறிவு வளர்கிறதா..?? நடைமுறை ரீதியாக தான் படித்ததை பிரதியிடவேண்டிய சூழ்நிலில் அவனால் என்ன செய்யமுடியும்..?? குறிப்பாக கூகுல் போன்ற இணையத்தில் பாடத்தின் தலைப்பை எழுதிவிட்டால் தேவையான விடயங்கள் வரும் அவற்றை கொப்பி பண்ணிக்கொடுக்கும் போது பயன் என்ன..?? மாறாக மாணவன் வாசித்து அதை விளங்கிக்கொண்டு தனது சொந்த பதிலை தானாய் எழுதும் போது அவனது அறிவு விருத்தியாகிறது. (பலர் இதையே செய்கிறார்கள் ஒருசிலர் விதிவிலக்கு..) இது நன்மையா என்ன..??
வங்கி நடவடிக்கைகள் பிரயாண ஒழுங்குகள் போன்றவற்றை இணையத்தின் ஊடாக மிக இலகுவாக செய்துமுடிக்கலாம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளார் இது நன்மை தான்.
(ஆனால் இப்படி இருந்த இடத்தில இருந்து எல்லாத்தையும் செய்துவிட்டால் மனிதன் சோம்பேறி ஆகமாட்டானா என்ன). எங்கே எதிரணியினர் என்ன சொல்லப்போகிறார்கள்.
எங்கள் இளையோர் இன்னொன்றை செய்யவும் இந்த இணையம் வழிவகுக்கிறது. வங்கி நடவடிக்கைகளை மற்றும் இணையத்தில் வங்கித்தகவல்களை பயன்படுத்தும் நிறுவனங்களை கக் பண்ணி அதனால் பணம் ஈட்டவும் வழிவகுக்கிறது. இது கூட நன்மை தானா..?? எங்கே பதில்
வேலைச்சுமையுடன் வரும் இளையோர் ஓய்வெடுப்பதற்கு இணையம் பொழுதுபோக்கு சாதனமாக அமைகிறது என்கிறார் விஸ்ணு.. பாடல்கள் படங்கள் போன்றவற்றை இலவசமாக இறக்க முடியும் என்கிறார். ம் யாரோ கஸ்டப்பட்டு படம் எடுக்க அதை இணையத்தில் போட்டு அவர்கள் உளைப்பில மண்ணை அள்ளிப்போட்டு சட்டத்தையும் மீறுவது நன்மையா இது சீரழிவில்லையா என்று கேட்பார்களா மற்ற அணியினர் பார்ப்போம்.
சிலர் சரியான வழிநடத்தலின்றி அல்லது தனிப்பட்ட பலவீனம் காரணமாக சீரழிந்து போவதை பல நல்ல விடையங்களை வாரிவழங்கும் இணையத்தை குறை கூற முடியுமா என்கிறார் விஸ்ணு..?? சீரழிவதற்கு காரணம் எதுவானாலும் பயன்படுத்தும் ஊடகம் இணையமாக இருக்கையில் குறை கூறாமல் என்ன செய்வது ..??
<b>இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.
</b>
கடைசியாக ஒரு கருத்தை உறுதியாக வைத்துச்சென்றிருக்கிறார். சீரழிவுகளிற்கு பல காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக்கருத்திற்கு சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போமே..
<b>அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி...</b>
இளையோரைச்சீரழியக்கூடிய விடயங்கள் இணையத்தில் உள்ளன என்பதை ஒத்துக்கொண்டதாலோ என்னவோ.?? இளையோரை இடுப்பில கட்டுப்போட்டு வழிநடத்தச்சொல்றார். பார்ப்போம் எதிரணியினர் என்ன சொல்கிறார்கள் என்று.
கடைசியாக ஒரு மிரட்டல் விட்டுச்செல்கிறார்.. தாங்கள் சிப்பாய்கள் கொமாண்டோக்கள் பின்னால் வருகிறார்கள் என்கிறார். எங்கே கொமாண்டோக்களை எதிர்கொள்ளத்தயாராகுங்கள் எதிரணியினர்.
சீரழிகிறார்கள் என்கின்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம். முட்டிமோதுங்கள் பார்ப்போம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

