12-20-2003, 03:40 PM
<b>இந்தியா எம் மக்களை கைவிடுமாயின்
நாம் இந்தியாவைக் கைவிடுவோம்
அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு </b>
8) 
இலங்கை இனப்பிரச்சினை என் பது விடுதலைப் புலிகளுடைய பிரச் சினை மட்டுமல்ல் இலங்கையில் வாழுகின்ற 35 லட்சம் தமிழ் மக்களு டைய பிரச்சினை. ஆகவே, யாரோ ஒருவரை நினைத்துக்கொண்டு இந் தியா எம்மைக் கைவிட்டுவிட முடி யாது. அப்படி இந்தியா எம்மைக் கை விட்டால் நாம் இந்தியாவைக் கைவிட வேண்டிவரும்.
- இப்படித் தெரிவித்தார் மலை யகமக்கள் முன்னணித் தலைவரும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெ.சந்திரசேகரன்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநா யகமூர்த்தியின் சேவை நலன் பாராட்டுவிழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் நேற்று மாலை 4 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன.
அவர் அங்கு மேலும் தெரிவித் ததாவது:-
இங்குள்ள தமிழர்களுக்கு ஓர் ஆபத்து என்றால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக மலையகத் தில் 15 லட்சம் தமிழர்கள் இருக்கி றார்கள். அதேபோல் எங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நீங்கள் குரல் எழுப்பவேண்டும்.
இது புலிகளின் பிரச்சினை அல்ல் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களினதும் பிரச்சினை என் பதை இந்தியாவுக்கு நாம் தெளி வாகச் சொல்லி இருக்கிறோம்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஜே.வி.பி. என்ற அமைப் புக்கு 16 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறமுடியுமென்றால், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் 40 இற்கும் அதிகமான நாடாளுமன்ற ஆச னங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு நிலையில் எந்தத் தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எமது காலடியிலே விழவேண் டிய அவசியம் ஏற்படும்.
மலையகத் தமிழர்களும், வடக்கு - கிழக்குத் தமிழர்களும், கொழும் புத் தமிழர்களும் ஒன்றாகச் சேர்ந் தால் இலங்கையை ஆட்டிப் படைக்கக் கூடிய பலத்தை உருவாக்கலாம். அதற் கான சரியான அடித்தளத்தை நாம் இப்போதிருந்தே உருவாக்க வேண் டும். நாங்கள் ஒன்றுபடுவதில் ஏதா
வது தடை இருக்குமாக இருந்தால் அதனை இப்போதே அகற்றிவிட வேண் டும்.
- இப்படி சந்திரசேகரன் கூறினார்.
நேற்றுக்காலை விமானம் மூலம் பலாலி வந்த அமைச்சர், அங்கிருந்து யாழ். செயலகம் சென்று அரச அதி பரைச் சந்தித்து யாழ். குடா நாட் டின் நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
சாவகச்சேரி மற்றும் யாழ். நகரப் பகுதிகளையும் சுற்றிப்பார்வையிட்டார்.
நன்றி: உதயன்.
நாம் இந்தியாவைக் கைவிடுவோம்
அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு </b>
8) 
இலங்கை இனப்பிரச்சினை என் பது விடுதலைப் புலிகளுடைய பிரச் சினை மட்டுமல்ல் இலங்கையில் வாழுகின்ற 35 லட்சம் தமிழ் மக்களு டைய பிரச்சினை. ஆகவே, யாரோ ஒருவரை நினைத்துக்கொண்டு இந் தியா எம்மைக் கைவிட்டுவிட முடி யாது. அப்படி இந்தியா எம்மைக் கை விட்டால் நாம் இந்தியாவைக் கைவிட வேண்டிவரும்.
- இப்படித் தெரிவித்தார் மலை யகமக்கள் முன்னணித் தலைவரும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பெ.சந்திரசேகரன்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநா யகமூர்த்தியின் சேவை நலன் பாராட்டுவிழா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகள் நேற்று மாலை 4 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றன.
அவர் அங்கு மேலும் தெரிவித் ததாவது:-
இங்குள்ள தமிழர்களுக்கு ஓர் ஆபத்து என்றால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக மலையகத் தில் 15 லட்சம் தமிழர்கள் இருக்கி றார்கள். அதேபோல் எங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நீங்கள் குரல் எழுப்பவேண்டும்.
இது புலிகளின் பிரச்சினை அல்ல் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களினதும் பிரச்சினை என் பதை இந்தியாவுக்கு நாம் தெளி வாகச் சொல்லி இருக்கிறோம்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஜே.வி.பி. என்ற அமைப் புக்கு 16 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறமுடியுமென்றால், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் 40 இற்கும் அதிகமான நாடாளுமன்ற ஆச னங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு நிலையில் எந்தத் தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எமது காலடியிலே விழவேண் டிய அவசியம் ஏற்படும்.
மலையகத் தமிழர்களும், வடக்கு - கிழக்குத் தமிழர்களும், கொழும் புத் தமிழர்களும் ஒன்றாகச் சேர்ந் தால் இலங்கையை ஆட்டிப் படைக்கக் கூடிய பலத்தை உருவாக்கலாம். அதற் கான சரியான அடித்தளத்தை நாம் இப்போதிருந்தே உருவாக்க வேண் டும். நாங்கள் ஒன்றுபடுவதில் ஏதா
வது தடை இருக்குமாக இருந்தால் அதனை இப்போதே அகற்றிவிட வேண் டும்.
- இப்படி சந்திரசேகரன் கூறினார்.
நேற்றுக்காலை விமானம் மூலம் பலாலி வந்த அமைச்சர், அங்கிருந்து யாழ். செயலகம் சென்று அரச அதி பரைச் சந்தித்து யாழ். குடா நாட் டின் நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
சாவகச்சேரி மற்றும் யாழ். நகரப் பகுதிகளையும் சுற்றிப்பார்வையிட்டார்.
நன்றி: உதயன்.

