01-01-2006, 02:57 PM
பட்டிமன்றத்துக்கு தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கும் செல்வமுத்து ஜயா... மற்றும் தமிழினி அக்காவுக்கும் எனது பணிவான வணக்கங்கள். எமது அனைத்து கருத்து பரிமாற்றத்துக்கும் வழிசமைத்துத் தந்த மோகன் அண்ணா அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்த உறவுக்கும்... பின்னணியில் பட்டி மன்றம் சிறப்பாக நடக்க காரணியாக இருக்கு சகோதரி ரசிகை அவர்களும் எனது வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அணித்தலைவர்கள்.... மற்றும் எனது , எதிர் அணி உறுப்பினர்களுக்கும்... பார்த்துப்பயன் பெறும் உறவுகளுக்கும் எனது வணக்கத்தையும்.. புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு எனதுவாதத்துக்கு வருகிறேன்.
<b>பிரியசகி கூறியது:-
இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! </b>
நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் யத்தையும் சேர்த்து கொல்வது எவ்வகையில் பொருத்தமாகும்??
<b>பிரியசகி கூறியது:-
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.</b>
தவறான கருத்து இது... தாயகத்தில் இருந்து வருபவர்கள் ஒப்பீட்டுரீதியில் தமிழ்கலாச்சாரங்களில் ஈடுபாட்டுடன்.... போராட்ட உணர்வுகளுடன் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களை குறைகூறுவது தவறு. தாயக உணர்வுகளுடன் கூடிய நிகழ்வுகளில் பங்கேற்கும் இளையோர்களில் எத்தனை தமிழே அதிகம் பேசத்தெரியாத தமிழ் இளையோர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக சுனாமி நேரத்தில் நிதி சேகரிப்பில் எத்தனை பேர் ஈடு பட்டார்கள்.
இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.
நடுவர் அவர்களே... புலம் பெயர்நாடுகளில் இயந்திரமயமான ஒரு இளைஞனின் வாழ்க்கையில்.... அவனது வாழ்வை மேம்படுத்தவும்... இலகுபடுத்தவும்... ஒரு இணையமானது எப்படி உதவி புரிகிறது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்... எனது அணித்தலைவர் பல கருத்துக்களை கூறிய போதிலும்.... நானும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.
வெளியில் செல்லும் போது... காலநிலை தகவல் மற்றும் போக்குவரத்து சாதனங்கள்.. பாதை விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.
பாடசாலை நேர அட்டவணை மாற்றங்களை அறிந்துகொள்ளவும்..... பாடசாலை நேரம் தவிர ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இலகுவான ஒரு ஊடகமாகவும்.... நினைத்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு நோட்ஸை பெற்று கொள்ளவோ... ஒரு சந்தேகத்தைதீர்த்துக் கொள்ளவோ..வீட்டுப்பாடங்களை செய்து அனுப்பவும்.. அவற்றுக்கான பிழைதிருத்தங்களை பெற்றுக்கொள்ளவும் இந்த இணையம் பயன்படுகிறது.
யாகூ சாட் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எதிர் அணியினர் இங்கே கவனிக்கவும்.... சாட் மூலமாக வீட்டுப்பாடங்களை நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி செய்கிறார்கள் ( குரூப் ஸ்ரடி ) பாடவிபரங்களை இணையங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
குடும்பத்தை பிரிந்துவாழும் இளையோர் குடும்பத்துடன் இணைந்திருக் சாட் மற்றும் சாட்டுக்கு இணையாக சொல்லகூடிய தொலை பேசி சேவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல... புதிய உறவுகளை பற்று அதனால் பயன் அடைபவர்கள் எவளவு பேர் இருக்கிறார்கள். உதாரணமாக.. இந்த பட்டி மன்றம் சிறப்பாக நெறிப்படுத்தபடுவது சாட் மூலமே.... நாம் இணையத்தில் பெற்றுக்கொண்ட உறுவுகளுடன் சேர்ந்தே என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
<b>எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.</b>
ஆகா அப்படியா?? சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா?? இது பற்றி பிரியசிக்கு தெரியாதா??
எத்தனையோ நல்லவிடயங்கள் இருக்கையில்... எதோ ஒரு உறுதிப்படுத்தமுடியாத தகவலை கூறி தனது கருத்தை கூற முற்படுகிறார் சகி....
மேலும்.........எதை படிக்கலாம் என்று யோசிப்பவர்கள்.. அவற்றை தெரிவு செய்யவும்.... அவற்றுக்கு விண்ணப்பிக்கவும்... படித்து முடித்தோர் நல்லதொரு வேலையினை தேடிப்பெற்றுக்கொள்ளவும்.. அவற்றுக்கு விண்ணப்பிக்கவும். இணையத்தை பயன் படுத்திக்கொள்ளவில்லையா??
மேலும் வங்கி நடவெடிக்கைகள்.. பிரயாண ஒழுங்குகள்... டிக்கட் செய்தல்... பொருட்களை சந்தைப்படுத்தவும்... கொள்வனவு செய்யவும்... வாழ்த்துகளையும் கடிதங்களையும் அனுப்புதல் பெற்றுக்கொள்ளுதல்... சிறந்த வாழ்வு துணையை பெற்றுக்கொள்வது போன்ற எத்தனையோ வகையான விடயங்களுக்கு இந்த இணையம் பயன்படவில்லையா??
எதிர் அணியினர் கேட்கலாம்.. இவை எல்லாம் இணையம் இல்லாமலே சீராக நடக்கவில்லையா என்று. நடந்தன அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால்... மற்றய ஊடகங்களைவிட.... விரைவாக.. இலகுவாக... மலிவாக... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அத்துடன் இவ்வாறான அனைத்து விடயங்களுக்கும் பயன்பட்ட மற்றைய ஊடகங்களை பின் தள்ளிவிட்டு இணையம் முதல் நிலையில் இருக்கிறது. இதனால் நமது இளையோர் நேரத்தையும் பணத்தையும் குறைவாக செலவு செய்து இலகுவாக தமது இலக்குகளை அடைவதற்கு இணையம் வழி செய்கிறது என்று கூறுகிறேன்.
வேலைச்சுமையுடன் வரும் ஒரு இளைஞம் ரிலாக்ஸ் பண்ணுவதற்கு.. தனது சுமைகளை மறந்து அடுத்த நாள் உற்சாகமாக தனது வேலையை செய்வதற்கு ஒருபொழுது போக்கு சாதனமாக இணையம் பயன்படுகிறது ( பாடல்களை படங்களை செலவின்றி பெற்றுக்கொள்ளல், அரட்டை மற்றும் பல.... )
இணையத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்கள்... தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்... அதே பாதையில் பயணிக்கும் நண்பர்களை இனம்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்பட்டு இலகுவில் தமது இலக்குகளை அடையத்துடிக்கும் இளைஞர்களை இங்கு கூறவிரும்புகிறேன்.
இனையத்தளங்களின் மூலம் வருவாயை பெற்று ஒரு சைட் பிஸினெஸ் செய்பவர்கள்.. விளம்பரபடுத்தலில் ஈடுபடுபர்கள்.. இதனால் தமது பிஸினெஸை விரிபடுத்திக்கொள்பவர்கள் எத்தனை பேர்??
அடுத்து.. புலம்பெயர் நாடுகளில் .... ஈழத்து உணர்வுகளுடன் நாம் நிலைத்திருந்து... நமது ஈழப்போராட்டத்தை திறனாக மேற்கொள்ள, எமது உணர்வுளை வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்த நமது இளையோர் பலபல இணைத்தளங்களை அமைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இந்த எதிரணியினருக்கு தெரியவில்லையா?? இப்போது தமிழ் மொழியில் நமது பண்பாட்டை.. நமது
போராட்ட த்தை கூறிநிற்கும எத்தனையோ இணையத்தளங்களை பார்த்திருந்தால் ......
<b>பிரியசகி கூறியது:-
ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.!</b>
....பிரியசகி இப்படி கூறியிருக்கமாட்டார். பாவம் அவர் கூறியது அவரது அறியாமை. மற்றய எத்தனையோ அண்ணாமார்கள் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்பதை கூறி.. இனியாவது பின்னணியில் நிற்கும் அண்ணாக்களை கண்டு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறேன்.
இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??
<b>பிரியசகி கூறியது :-
இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..? </b>
இணையத்தை பயன்படுத்தி முன்னேறவிட்டாலும் பறவாய் இல்லை.... வரும் தீமைகளை தடுத்து நிறுத்துவோம் என்று சின்னபிள்ளைத்தனமாக சொல்கிறார் பிரியசகி.
பாடசாலைக்கு பிள்ளையை அனுப்புகிறோம். அங்கே பிள்ளைகளுக்கு எத்தனை தீயவை காத்திருக்கிறது. தீயவற்றை பழகுவதற்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இதற்காக ஒரு பிள்ளைக்கு பாடசாலை தேவை இல்லை. பிள்ளை படிக்கவிட்டாலும் பறவாய் இல்லை. பிள்ளை நல்லபிள்ளையாக இருக்கட்டும் என்று பிள்ளையை பாடசாலையில் இருந்து மறித்துவிடுவதற்கு ஒப்பானது சகி கூறியது. மேற்கு நாடுகள் படுவேகமாக முன்னேறியதற்கும்... நமது & நமது அயல் நாடுகள் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதற்கு இப்படியான ஒரு மனப்பாங்கே காரணம் என்பதையும் கூறவிரும்புகிறேன்.
<b>பிரியசகி கூறியது:-
இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள்....
இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார்.
இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும்
ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும்.
டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது.....</b>
இளையோர் தம்மை முன்னேற்றிக்கொள்வதற்கு துணைபுரியும் கல்விநிறுவனங்கள்.. தொலைக்காட்சி... சஞ்சிகைகள்... புத்தகங்கள் வரிசையில் இப்போது இணையமும் சேர்ந்திருக்கிறது.... மற்றய ஊடகங்களி பின் தள்ளிவிட்டு முன்னணியிலும் நிற்கிறது. இணையத்தில் மட்டும் அல்ல.. மற்றய ஊடகங்களிலும் நன்மை தீமை உள்ளது.
பிரியசகி கூறிய தீமைகள் இணையத்தில் மட்டும் இல்லை..... புலம் பெயர்நாடுகளில் பாடசாலைகளில், விளையாட்டு கழகங்களில், இப்படியான சந்தர்ப்பங்கள் இளையோர்க்கு ஏற்படுவதில்லையா?? அதற்காக பாடசாலைகளையோ அவை போன்ற ஊடகங்களை குறைக்கூற முடியுமா??
இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலாவது... நமது அணியினரின் கருத்துக்களை உள்வாங்கி இணையத்தை சிறந்த முறையில் எதிர் அணி இளையோர் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.
எதிர் அணியில் இருக்கும் பெற்றோர்கள்...இணையம் எனும் கடலில் தன்னை பாதுகாத்துகொள்ள நீச்சல் பழகும், இணைய கடலை பயன்படுத்தி தனதுவாழ்வை கரையேற்றப்போகும் உங்கள் பிள்ளைகளை முற்றாக தடுத்து நிறுத்தி அவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளாது... அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி... அவர்கள் முன்னேற்றதுக்கு வழிசமைக்கும் இணையம் காரணமல்ல என்று கூறிக்கொண்டு...
நானும் அனித்தாவும் வெறும் சிப்பாய்கள் தான்... நாம் கொண்டுவந்தது வெறும் மணியோசைத்தான்.... எமது அணிக் கொமாண்டோக்கள் உங்கள் தாக்குதல்களை சிறப்பாக முறியட்டிக்க எமது பட்டியலில் கீழே இருக்கிறார்கள் என கூறி.....
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை பெற்று தந்த இணைய பொறுப்பாளருக்கு நன்றி கூறி....
பணிவாக விடைபெறுகிறேன். நன்றி.
அணித்தலைவர்கள்.... மற்றும் எனது , எதிர் அணி உறுப்பினர்களுக்கும்... பார்த்துப்பயன் பெறும் உறவுகளுக்கும் எனது வணக்கத்தையும்.. புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு எனதுவாதத்துக்கு வருகிறேன்.
<b>பிரியசகி கூறியது:-
இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! </b>
நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் யத்தையும் சேர்த்து கொல்வது எவ்வகையில் பொருத்தமாகும்??
<b>பிரியசகி கூறியது:-
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.</b>
தவறான கருத்து இது... தாயகத்தில் இருந்து வருபவர்கள் ஒப்பீட்டுரீதியில் தமிழ்கலாச்சாரங்களில் ஈடுபாட்டுடன்.... போராட்ட உணர்வுகளுடன் வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களை குறைகூறுவது தவறு. தாயக உணர்வுகளுடன் கூடிய நிகழ்வுகளில் பங்கேற்கும் இளையோர்களில் எத்தனை தமிழே அதிகம் பேசத்தெரியாத தமிழ் இளையோர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக சுனாமி நேரத்தில் நிதி சேகரிப்பில் எத்தனை பேர் ஈடு பட்டார்கள்.
இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.
நடுவர் அவர்களே... புலம் பெயர்நாடுகளில் இயந்திரமயமான ஒரு இளைஞனின் வாழ்க்கையில்.... அவனது வாழ்வை மேம்படுத்தவும்... இலகுபடுத்தவும்... ஒரு இணையமானது எப்படி உதவி புரிகிறது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்... எனது அணித்தலைவர் பல கருத்துக்களை கூறிய போதிலும்.... நானும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்.
காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.
வெளியில் செல்லும் போது... காலநிலை தகவல் மற்றும் போக்குவரத்து சாதனங்கள்.. பாதை விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.
பாடசாலை நேர அட்டவணை மாற்றங்களை அறிந்துகொள்ளவும்..... பாடசாலை நேரம் தவிர ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான இலகுவான ஒரு ஊடகமாகவும்.... நினைத்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு நோட்ஸை பெற்று கொள்ளவோ... ஒரு சந்தேகத்தைதீர்த்துக் கொள்ளவோ..வீட்டுப்பாடங்களை செய்து அனுப்பவும்.. அவற்றுக்கான பிழைதிருத்தங்களை பெற்றுக்கொள்ளவும் இந்த இணையம் பயன்படுகிறது.
யாகூ சாட் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எதிர் அணியினர் இங்கே கவனிக்கவும்.... சாட் மூலமாக வீட்டுப்பாடங்களை நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி செய்கிறார்கள் ( குரூப் ஸ்ரடி ) பாடவிபரங்களை இணையங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
குடும்பத்தை பிரிந்துவாழும் இளையோர் குடும்பத்துடன் இணைந்திருக் சாட் மற்றும் சாட்டுக்கு இணையாக சொல்லகூடிய தொலை பேசி சேவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல... புதிய உறவுகளை பற்று அதனால் பயன் அடைபவர்கள் எவளவு பேர் இருக்கிறார்கள். உதாரணமாக.. இந்த பட்டி மன்றம் சிறப்பாக நெறிப்படுத்தபடுவது சாட் மூலமே.... நாம் இணையத்தில் பெற்றுக்கொண்ட உறுவுகளுடன் சேர்ந்தே என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
<b>எம் எஸ் என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை நிறுத்தியிருப்பதாக கூறும் பிரியசகி அதற்கான காரணம் என்ன?? சீரழிவு தான் என்கிறார். சற்றூம்களில் சீரழிவுகள் நடக்கின்றன அங்கே பாலியல் விடையங்கள் பரிமாறப்படுகின்றன தகாத வார்த்தைப்பிரியோகங்கள் நடைபெறுகின்றன அங்குள்ள நமது இளையோர் நிலை என்ன சீரழிகிறார்கள் என்கிறார் பிரியசகி.</b>
ஆகா அப்படியா?? சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா?? இது பற்றி பிரியசிக்கு தெரியாதா??
எத்தனையோ நல்லவிடயங்கள் இருக்கையில்... எதோ ஒரு உறுதிப்படுத்தமுடியாத தகவலை கூறி தனது கருத்தை கூற முற்படுகிறார் சகி....
மேலும்.........எதை படிக்கலாம் என்று யோசிப்பவர்கள்.. அவற்றை தெரிவு செய்யவும்.... அவற்றுக்கு விண்ணப்பிக்கவும்... படித்து முடித்தோர் நல்லதொரு வேலையினை தேடிப்பெற்றுக்கொள்ளவும்.. அவற்றுக்கு விண்ணப்பிக்கவும். இணையத்தை பயன் படுத்திக்கொள்ளவில்லையா??
மேலும் வங்கி நடவெடிக்கைகள்.. பிரயாண ஒழுங்குகள்... டிக்கட் செய்தல்... பொருட்களை சந்தைப்படுத்தவும்... கொள்வனவு செய்யவும்... வாழ்த்துகளையும் கடிதங்களையும் அனுப்புதல் பெற்றுக்கொள்ளுதல்... சிறந்த வாழ்வு துணையை பெற்றுக்கொள்வது போன்ற எத்தனையோ வகையான விடயங்களுக்கு இந்த இணையம் பயன்படவில்லையா??
எதிர் அணியினர் கேட்கலாம்.. இவை எல்லாம் இணையம் இல்லாமலே சீராக நடக்கவில்லையா என்று. நடந்தன அதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால்... மற்றய ஊடகங்களைவிட.... விரைவாக.. இலகுவாக... மலிவாக... நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. அத்துடன் இவ்வாறான அனைத்து விடயங்களுக்கும் பயன்பட்ட மற்றைய ஊடகங்களை பின் தள்ளிவிட்டு இணையம் முதல் நிலையில் இருக்கிறது. இதனால் நமது இளையோர் நேரத்தையும் பணத்தையும் குறைவாக செலவு செய்து இலகுவாக தமது இலக்குகளை அடைவதற்கு இணையம் வழி செய்கிறது என்று கூறுகிறேன்.
வேலைச்சுமையுடன் வரும் ஒரு இளைஞம் ரிலாக்ஸ் பண்ணுவதற்கு.. தனது சுமைகளை மறந்து அடுத்த நாள் உற்சாகமாக தனது வேலையை செய்வதற்கு ஒருபொழுது போக்கு சாதனமாக இணையம் பயன்படுகிறது ( பாடல்களை படங்களை செலவின்றி பெற்றுக்கொள்ளல், அரட்டை மற்றும் பல.... )
இணையத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்கள்... தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்... அதே பாதையில் பயணிக்கும் நண்பர்களை இனம்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்பட்டு இலகுவில் தமது இலக்குகளை அடையத்துடிக்கும் இளைஞர்களை இங்கு கூறவிரும்புகிறேன்.
இனையத்தளங்களின் மூலம் வருவாயை பெற்று ஒரு சைட் பிஸினெஸ் செய்பவர்கள்.. விளம்பரபடுத்தலில் ஈடுபடுபர்கள்.. இதனால் தமது பிஸினெஸை விரிபடுத்திக்கொள்பவர்கள் எத்தனை பேர்??
அடுத்து.. புலம்பெயர் நாடுகளில் .... ஈழத்து உணர்வுகளுடன் நாம் நிலைத்திருந்து... நமது ஈழப்போராட்டத்தை திறனாக மேற்கொள்ள, எமது உணர்வுளை வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்த நமது இளையோர் பலபல இணைத்தளங்களை அமைத்து சிறப்பாக செயற்பட்டு வருவது இந்த எதிரணியினருக்கு தெரியவில்லையா?? இப்போது தமிழ் மொழியில் நமது பண்பாட்டை.. நமது
போராட்ட த்தை கூறிநிற்கும எத்தனையோ இணையத்தளங்களை பார்த்திருந்தால் ......
<b>பிரியசகி கூறியது:-
ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.!</b>
....பிரியசகி இப்படி கூறியிருக்கமாட்டார். பாவம் அவர் கூறியது அவரது அறியாமை. மற்றய எத்தனையோ அண்ணாமார்கள் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்பதை கூறி.. இனியாவது பின்னணியில் நிற்கும் அண்ணாக்களை கண்டு கொள்ளுமாறு கேட்டு நிற்கிறேன்.
இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??
<b>பிரியசகி கூறியது :-
இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..? </b>
இணையத்தை பயன்படுத்தி முன்னேறவிட்டாலும் பறவாய் இல்லை.... வரும் தீமைகளை தடுத்து நிறுத்துவோம் என்று சின்னபிள்ளைத்தனமாக சொல்கிறார் பிரியசகி.
பாடசாலைக்கு பிள்ளையை அனுப்புகிறோம். அங்கே பிள்ளைகளுக்கு எத்தனை தீயவை காத்திருக்கிறது. தீயவற்றை பழகுவதற்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. இதற்காக ஒரு பிள்ளைக்கு பாடசாலை தேவை இல்லை. பிள்ளை படிக்கவிட்டாலும் பறவாய் இல்லை. பிள்ளை நல்லபிள்ளையாக இருக்கட்டும் என்று பிள்ளையை பாடசாலையில் இருந்து மறித்துவிடுவதற்கு ஒப்பானது சகி கூறியது. மேற்கு நாடுகள் படுவேகமாக முன்னேறியதற்கும்... நமது & நமது அயல் நாடுகள் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதற்கு இப்படியான ஒரு மனப்பாங்கே காரணம் என்பதையும் கூறவிரும்புகிறேன்.
<b>பிரியசகி கூறியது:-
இளையோர்கள் வளர்ந்து வருபர்கள் புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்கள். பிறர் செய்வதை தாங்களும் செய்ய எண்ணுவார்கள்....
இணையம் மூலம் பிறமொழித்தளங்களை பயன்படுத்துபவர்கள் பிற கலாச்சாராத்தையும் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது இதனால் எமது கலாச்சாராத்தோடு ஒன்றாகாத தன்மை உண்டு என்கிறார்.
இணையம் மூலமான வேற்று நாட்டவர்களுடனான தொடர்பானது நமது இளையோரிற்கு தவறான படங்கள் மற்றும் தகவல்களைப்பெற வழிவகுக்கும்
ஆபாசப்படங்களை இணையத்தில் போட்டுவிட்டால் ஒரு சில நிமிடங்களில் உலகம் எங்கும் பரவிவிடும்.
டேற்றிங் இணையத்தின் ஊடகவே அதிகமாக பரவுகிறது.....</b>
இளையோர் தம்மை முன்னேற்றிக்கொள்வதற்கு துணைபுரியும் கல்விநிறுவனங்கள்.. தொலைக்காட்சி... சஞ்சிகைகள்... புத்தகங்கள் வரிசையில் இப்போது இணையமும் சேர்ந்திருக்கிறது.... மற்றய ஊடகங்களி பின் தள்ளிவிட்டு முன்னணியிலும் நிற்கிறது. இணையத்தில் மட்டும் அல்ல.. மற்றய ஊடகங்களிலும் நன்மை தீமை உள்ளது.
பிரியசகி கூறிய தீமைகள் இணையத்தில் மட்டும் இல்லை..... புலம் பெயர்நாடுகளில் பாடசாலைகளில், விளையாட்டு கழகங்களில், இப்படியான சந்தர்ப்பங்கள் இளையோர்க்கு ஏற்படுவதில்லையா?? அதற்காக பாடசாலைகளையோ அவை போன்ற ஊடகங்களை குறைக்கூற முடியுமா??
இணையத்தை பயன்படுத்தி இளையோர் கெட்டுப்போவதற்கும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் கெட்டுப்போவதற்கும்... சிறந்த வழிகாட்டல் இன்மை, கட்டுப்பாடு இன்மை, கண்ணி பற்றிய பெற்றோர்களின் அறியாமை அல்லது அவர்களுடைய மனித பலவீனம், ஊக்கமின்மையே காரணமாக அமைகிறதே தவிர இணையம் என்கிற ஊடகம் அல்ல என்பதை கூறிக்கொண்டு.
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலாவது... நமது அணியினரின் கருத்துக்களை உள்வாங்கி இணையத்தை சிறந்த முறையில் எதிர் அணி இளையோர் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.
எதிர் அணியில் இருக்கும் பெற்றோர்கள்...இணையம் எனும் கடலில் தன்னை பாதுகாத்துகொள்ள நீச்சல் பழகும், இணைய கடலை பயன்படுத்தி தனதுவாழ்வை கரையேற்றப்போகும் உங்கள் பிள்ளைகளை முற்றாக தடுத்து நிறுத்தி அவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளாது... அவர்கள் நீச்சல் பழகும்வரை அவர்களின் இடுப்பில் கட்டுப்போடுங்கள்.... அவர்கள் சரியான பாதையில் நீந்தி செல்ல அவர்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டலும்.. அவர்களின் தனிப்பட்ட அக்கறை.. பலவீனங்கள் தான்.. அவர்கள் கெட்டுப்போவதற்கு காரணமேயன்றி... அவர்கள் முன்னேற்றதுக்கு வழிசமைக்கும் இணையம் காரணமல்ல என்று கூறிக்கொண்டு...
நானும் அனித்தாவும் வெறும் சிப்பாய்கள் தான்... நாம் கொண்டுவந்தது வெறும் மணியோசைத்தான்.... எமது அணிக் கொமாண்டோக்கள் உங்கள் தாக்குதல்களை சிறப்பாக முறியட்டிக்க எமது பட்டியலில் கீழே இருக்கிறார்கள் என கூறி.....
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை பெற்று தந்த இணைய பொறுப்பாளருக்கு நன்றி கூறி....
பணிவாக விடைபெறுகிறேன். நன்றி.

