12-31-2005, 05:50 PM
<i><b>'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' </b></i>என்னும் தலைப்பில் நடைபெறும் இவ் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி நடுநிலைமை வகிக்க வந்திருக்கும் செல்வமுத்து ஐயாவிற்க்கும், தமிழினி அக்காவிற்க்கும் எனது முதற்க்கண் வணக்கம்!
இங்கே நான் உங்களோடு உறவாட வழி அமைத்துத்தந்த யாழ் இணைய ஊடகத்திற்க்கும், மோகன் அண்ணாவிற்க்கும், பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்தி செல்லும் ரசி அக்காவிற்க்கும் எனது பணிவான வணக்கம்!
அடுத்து, நமது அணிக்கு தலைமை தாங்க வந்திருக்கும் சோழியன் அண்ணாவிற்கும், அணி உறுப்பினர்களுக்கும், நன்மையே கொடுக்கும் இணையமென்று கருத்துக்களை கூற ஒருங்கிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், தலைவரான இளைஞன் அவர்களுக்கும், பட்டிமன்றத்தை பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஏனைய கள உறுப்பின்ர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.
<b>'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?'</b> இதுவே நம் பட்டிமன்றத்தின் தலைப்பு.
எங்கள் அணிக்காக வாதாடிய அணித்தலைவர் சோழியன் அண்ணா கூறிய படி. இணையத்தளத்தின் பயன்களுக்கு மிகையானது எதுவும் இல்லை!! அத்தோடு இணையத்தளத்தினூடாகவே தான் நானும் உங்கள் உறவுகளை பெற்று, இங்கே உங்கள் எல்லோரின் முன்னில் என் கருத்துக்களை வைக்க வந்திருக்கின்றேன் என்பதையும் நான் மறுக்கவில்லை! ஆனால் எமது வாதம் என்னவோ அதை எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் (ஏன் மறைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.) ஆனாலும் அவர்களின் மறுப்பையும், மறைப்பையும் மீறி அவர்களுக்கு நம் தலைப்பை புரிந்து கொள்ள வைப்பதே எமது கண்ணான கடமை என எண்ணிக்கொண்டு எனது வாதத்தை தொடர விரும்புகிறேன்.
கனம் நடுவர் அவர்களே! இணையத்தளத்தின் முதல் தீமையாக நான் கூற விரும்புவது இணையத்தள்ங்களினாலும், இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். இதை நாம் யாழ் களத்திலேயே காணலாம். (ஏன் நான் என்னையே உதாரணமாக கூறுவேன்). இதில் நன்மை பெறுவார்களோ தீமை பெறுவார்களோ என்பதல்ல..அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள் என்பதே. ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! அப்படியாயின் முதல் தீமையை எதிரணியினர் தங்களையே உதாரணமாக எடுத்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
<b>மேற்கோள்:
எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்... </b>
...என்றார், எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள்.
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்)
<b>மேற்கோள்:
சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!" </b>
நடுவர் அவர்களே மேலே எதிரணி உறுப்பினர் அனிதா கூறியது போல் , சினிமா அடிப்படைக்காரணம் என்றாலும், சஞ்சிகைகளில் இளையோர் அலசிய விடயங்களை இணையம் இன்னும் விரைவாகவும், இலகுவாகவும் அவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு கடத்தியாக பயன்படுகிறதல்லவா..? அவர்களின் சினிமா மோகத்திற்கு இணையம் இதனால் இலகுவாக வழி வகுக்கின்றதல்லவா..?
ஆகவே எதிரணியினர் அந்தச் சினிமாவுக்காக இணையத்தைப் பயன்படுத்துவதை சீரழிவு இல்லை என்கிறீர்களா அல்லது இங்கே இணையத்தின் பயன்பாடு சீரழிவுக்கு பயன்படவில்லை என்கிறீர்களா......?
<b>மேற்கோள்:
"தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள்." </b>
தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். அவ்வளவுதான். இப்படியே பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு இருந்தால் எப்போது தான் உண்மை வெளிவரப்போகின்றது..?
இங்கே தான் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.
இளையோர்கள், சிறியோர்கள் என்றால், அவர்கள் வளர்ந்து வருபவர்கள், புதிய விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள், கூட படிப்பவர்களோ (அவர்கள் வேற்று நாட்டவராக இருந்தாலும் சரி) அல்லது கூடி பழகுபவர்களோ, செய்யும் காரியங்களை தாங்களும் செய்ய எண்ணுவார்கள். அது இள்மைக்கே உரிய ஒரு குணாதிசயமாகும். நீங்கள் சொன்னது போல, முற்றாக வேறு காலாச்சாரத்தைக்கொண்ட வேற்று மொழியினர்டன் பழகையில் வேற்று மொழியின் தளங்களை பயன் படுத்தவும் செய்கிறார்கள். இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும், வேற்று கலாச்சாரத்தை அவர்கள் பழகும் வாய்ப்பும், அதனால் நம் கலாச்சாரத்தோடு ஒன்றாத குணமும் உருவாகும் என்று. அதனால் அவர்கள் நாளடைவில் வேற்று நாட்டவர்களோடு(அவர்களின் கலாச்சாரத்தின் படி) தவறான இளமையோடு சம்மந்தப்படக்கூடிய எண்ணங்களையோ அல்லது அவற்றை உருவாக்கக்கூடிய தகவல்களை, படங்களை பெற வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு இணையம் ஒரு இலகுவான ஊடகமாக பயன்படுகின்றது. நாட்கள் செல்ல செல்ல...அதன் மேல் கொண்ட மோகம் அதிகமாக அவர்கள் நீங்கள் சொல்லும் நன்மைகளை விட்டு அவற்றையே நாடத்தொடங்குவார்கள்? இதை நீங்கள் மறுப்பீர்களா?? இல்லை இதற்கும் அவர்களின் இளைமையே காரணம் கூற்ப்போகின்றீர்களா? அப்படியே இளமையே காரணம் என்றாலும், அந்த இளமையின் வேகத்தையும் அந்த காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் உருவாகும் ஒரு வித துடிப்பினை, மோகத்தினை நீக்கும் படியாகவும், அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கவும் எத்தனை ஊடகங்கள் (இதில் தமிழ் ஊடகங்களும், நீங்கள் கூறிய அதே வேற்று மொழி ஊடகங்களும் அடங்கும்) பயன்படுகின்றன?? அதே குணாதிசயங்களை சாதகமாக்கி அதனூடாக பணம் பெற எத்தனை ஊடகங்கள் வழி வகுக்கின்றன.....? இரு வகையிலான இணையத்தளங்களின் எண்ணிக்கைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்....!
இதிலே நீங்கள் யாகூ பற்றி சொல்லலாம். பட்டிமன்றங்கள் நடத்துகின்றார்கள் என்று.
அங்கே சென்று நம் தமிழ் பிரிவில் பார்த்தால் நம் இளைய உறவுகள் தாகாத வார்த்தைகளால் மற்றவர்களைத் திட்டுவது தான் அதிகம். பட்டிமன்றம் எத்தனை தடவை நடத்தியிருப்பார்கள்...? ஆனால் தினமும் தாகாத வார்த்தைகளால் சண்டை என்பது நடக்கின்றது. மேலும் இப்படியான அரட்டைகளில் கீழ்தரமான பாலியல் விடயங்கள் பரிமாறப்படுகின்றன என்று, எம்.எஸ்.என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை அறையைத் தடை செய்திருப்பதை அறிவீர்களா? இது இளைஞர்கள் இணையம் மூலம் சீரழிகின்றனர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றதல்லவா!
<b>மேற்கோள்:-
சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?</b>
மறுக்கவில்லை, எதிரணித்தலைவர் அவர்களே! அதன் மறுபக்கத்தையும் பார்க்கும்படி கேட்கிறேன். புதிய உலகம்..அழகான அந்த உலகம் மட்டுமா நம் இளையோர் உருவாக்குகிறார்கள்?? இல்லையே அவர்களை அறியாமலேயே , இருக்கும் இந்த ஒரு உலகத்தினையும் மாற்றியல்லவா அமைக்கிறார்கள்...!
ஒரு வீட்டில் பிள்ளைகள் என்பவர்கள் அந்த வீட்டின் தூண்கள்!! புதிய உலகை உருவாக்குகிறார்கள் என்று உங்களைப்போல் பல புலம் வாழ் பெற்றோரும் நினைத்து எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள் கூறியது போல் ஒரு குறுகிய வட்டத்தையோ, சதுரத்தையோ அமைத்துக்கொண்டு இருந்தால், இருக்கும் இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..?
புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகமும் நன்மையடைகிறது என்று...அனிதா அவர்கள் கூறினார். அவரின் கருத்தை அப்படியே நான் எடுத்துக்கொண்டால், தூண்களான இளம் சமூகம் நன்மை அடைந்து முன்னேறா விடினும் சீரழிந்து கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமில்லையா..அவை கூறிய்து போல் அது மொத்த
தமிழ் சமூகத்திற்கும் கேடு இல்லையா. ..!
நடுவர் அவர்களே! நம் இளையோர் இணையத்தால் நன்மை மட்டுமே அடையாத பட்சத்தில் அவர்களின் நன்மையில் பங்கு கொள்ளும் தமிழ் சமூகம், அதே இளையோர்கள் சீரழிந்தாலும் பங்கு பெறும் அல்லவா? பல நன்மைகளை பெற்று முன்னேறினால் பாராட்டும் நம் சமூகம் (அநேக சமயங்களில்) ஒரே ஒரு சீரழிவினையோ, தீங்கையோ பெற்றால் அதன் இரட்டிப்பு மடங்காக தூற்றும் இல்லையா....?? ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.! இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில் எத்தனை எத்தனை சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் , பெண்களை அவமானப்படுத்தும் கேடான படங்கள், செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் ஏன் எதிரணியினர் எண்ணிப்பார்க்கத்தவறி விட்டனர்...?(இல்லை தவற்றி விட்டனரா..?)
இறுதியாக அனிதா அவர்கள்
<b>டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !</b> என்று அடித்து கூறினார்.
புலம் பெயர் நாடுகளில் எத்தனை தடவைகள் இப்படியான சடங்குகள் நடை பெறுகின்றன? அதுவே எத்தனை வீடுகளில் கணணிகள் இருக்கின்றன?
சடங்குகள் மூலம் இப்படியானவற்றை தவறான பாதைக்கு இழுத்துச்செல்லக்கூடிய தகவல்கள் பரிமாறப்படுவதிலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கணணி முன்னால் அதிகமாக பரிமாறப்படுகின்றன என்பதை நீங்கள் அறியவில்லையா...? அதனால் வரும் விளைவுகள் இன்னும் அதிகமானதென்பதை நீங்கள் உணரவில்லையா....?
இறுதியாக நடுவர் அவர்களே! எத்தனையோ காலமாக நம் ஈழ மக்களுக்கும் நன்மையே தந்த அந்தப்பெரும் கடல் கூட ஒரு நாளில் அத்தனை நன்மைகளுக்கும் பதிலாக ஈடற்ற நம் உறவுகளின் உயிர்களை அள்ளிச்சென்றது. நன்மைகளை பெறலாம்...வேறு வழிகளில்! உடலினை விட்டுச்சென்ற உறவுகளின் ஆருயிர்களை திருப்பிப்பெற முடியுமா..? அதே போலவே இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல். நன்மைக்கு பதிலாக நம் இளையோர்களின் இளமையும் இணைந்து அவர்களின் ஈடற்ற, திருப்பி பெற முடியாத எதிர்காலத்தை சீரழிக்கின்றது...என்று வருத்தத்தோடு கூறி......
இந்த அருமையான பட்டிமன்றத்தில், வாதிட எனக்கு வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து, நம் அணியினர் வெற்றி பெற இன்னும் பல சத்தான கருத்துக்களோடு காத்திருக்கும் நம் அணி உறுப்பினர்களை வாழ்த்தி , மலரப்போகும் இப் புத்தாண்டு உங்களுக்கும், எல்லோருக்கும், ஒரு இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டி..., விடை பெறுகின்றேன்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>நன்றி வணக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </b></span>
இங்கே நான் உங்களோடு உறவாட வழி அமைத்துத்தந்த யாழ் இணைய ஊடகத்திற்க்கும், மோகன் அண்ணாவிற்க்கும், பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடத்தி செல்லும் ரசி அக்காவிற்க்கும் எனது பணிவான வணக்கம்!
அடுத்து, நமது அணிக்கு தலைமை தாங்க வந்திருக்கும் சோழியன் அண்ணாவிற்கும், அணி உறுப்பினர்களுக்கும், நன்மையே கொடுக்கும் இணையமென்று கருத்துக்களை கூற ஒருங்கிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், தலைவரான இளைஞன் அவர்களுக்கும், பட்டிமன்றத்தை பார்த்து ரசிக்க வந்திருக்கும் ஏனைய கள உறுப்பின்ர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.
<b>'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?'</b> இதுவே நம் பட்டிமன்றத்தின் தலைப்பு.
எங்கள் அணிக்காக வாதாடிய அணித்தலைவர் சோழியன் அண்ணா கூறிய படி. இணையத்தளத்தின் பயன்களுக்கு மிகையானது எதுவும் இல்லை!! அத்தோடு இணையத்தளத்தினூடாகவே தான் நானும் உங்கள் உறவுகளை பெற்று, இங்கே உங்கள் எல்லோரின் முன்னில் என் கருத்துக்களை வைக்க வந்திருக்கின்றேன் என்பதையும் நான் மறுக்கவில்லை! ஆனால் எமது வாதம் என்னவோ அதை எதிரணியினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் (ஏன் மறைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.) ஆனாலும் அவர்களின் மறுப்பையும், மறைப்பையும் மீறி அவர்களுக்கு நம் தலைப்பை புரிந்து கொள்ள வைப்பதே எமது கண்ணான கடமை என எண்ணிக்கொண்டு எனது வாதத்தை தொடர விரும்புகிறேன்.
கனம் நடுவர் அவர்களே! இணையத்தளத்தின் முதல் தீமையாக நான் கூற விரும்புவது இணையத்தள்ங்களினாலும், இணைய ஊடகங்களினாலும் இளையோர்கள் பெறும் ஒரு வித போதையையே. ஒரு நாள் இணையம் வேலை செய்யவில்லை என்றால் இளையோர்கள் துடித்துப்போகின்றார்கள். இதை நாம் யாழ் களத்திலேயே காணலாம். (ஏன் நான் என்னையே உதாரணமாக கூறுவேன்). இதில் நன்மை பெறுவார்களோ தீமை பெறுவார்களோ என்பதல்ல..அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள் என்பதே. ஒன்றுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு(அன்பைத்தவிர) அடிமை ஆதல் என்பது எப்போதுமே நன்மையான விடயமல்ல...! அப்படியாயின் முதல் தீமையை எதிரணியினர் தங்களையே உதாரணமாக எடுத்து புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
<b>மேற்கோள்:
எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்... </b>
...என்றார், எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள்.
தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் போராட்ட சூழலில், அழிவுகளிலிருந்து வருவதால் அவர்கள் சினிமா சம்பந்தமான விடயங்களிலும் பார்க்க நாட்டுப்பற்றுமிக்க விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, பொராட்டம் என்றால் என்னவென செவிவழி கேட்டு பெற்றோரின் வருமானத்தில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களே இணையத்தை தமது கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். (அதாவது பெரும்பான்மையானோர்)
<b>மேற்கோள்:
சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!" </b>
நடுவர் அவர்களே மேலே எதிரணி உறுப்பினர் அனிதா கூறியது போல் , சினிமா அடிப்படைக்காரணம் என்றாலும், சஞ்சிகைகளில் இளையோர் அலசிய விடயங்களை இணையம் இன்னும் விரைவாகவும், இலகுவாகவும் அவர்களிடம் கொண்டு செல்லும் ஒரு கடத்தியாக பயன்படுகிறதல்லவா..? அவர்களின் சினிமா மோகத்திற்கு இணையம் இதனால் இலகுவாக வழி வகுக்கின்றதல்லவா..?
ஆகவே எதிரணியினர் அந்தச் சினிமாவுக்காக இணையத்தைப் பயன்படுத்துவதை சீரழிவு இல்லை என்கிறீர்களா அல்லது இங்கே இணையத்தின் பயன்பாடு சீரழிவுக்கு பயன்படவில்லை என்கிறீர்களா......?
<b>மேற்கோள்:
"தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள்." </b>
தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். அவ்வளவுதான். இப்படியே பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு இருந்தால் எப்போது தான் உண்மை வெளிவரப்போகின்றது..?
இங்கே தான் நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.
இளையோர்கள், சிறியோர்கள் என்றால், அவர்கள் வளர்ந்து வருபவர்கள், புதிய விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள், கூட படிப்பவர்களோ (அவர்கள் வேற்று நாட்டவராக இருந்தாலும் சரி) அல்லது கூடி பழகுபவர்களோ, செய்யும் காரியங்களை தாங்களும் செய்ய எண்ணுவார்கள். அது இள்மைக்கே உரிய ஒரு குணாதிசயமாகும். நீங்கள் சொன்னது போல, முற்றாக வேறு காலாச்சாரத்தைக்கொண்ட வேற்று மொழியினர்டன் பழகையில் வேற்று மொழியின் தளங்களை பயன் படுத்தவும் செய்கிறார்கள். இங்கே தான் நீங்கள் கவனிக்க வேண்டும், வேற்று கலாச்சாரத்தை அவர்கள் பழகும் வாய்ப்பும், அதனால் நம் கலாச்சாரத்தோடு ஒன்றாத குணமும் உருவாகும் என்று. அதனால் அவர்கள் நாளடைவில் வேற்று நாட்டவர்களோடு(அவர்களின் கலாச்சாரத்தின் படி) தவறான இளமையோடு சம்மந்தப்படக்கூடிய எண்ணங்களையோ அல்லது அவற்றை உருவாக்கக்கூடிய தகவல்களை, படங்களை பெற வாய்ப்புக்கள் உண்டு. அதற்கு இணையம் ஒரு இலகுவான ஊடகமாக பயன்படுகின்றது. நாட்கள் செல்ல செல்ல...அதன் மேல் கொண்ட மோகம் அதிகமாக அவர்கள் நீங்கள் சொல்லும் நன்மைகளை விட்டு அவற்றையே நாடத்தொடங்குவார்கள்? இதை நீங்கள் மறுப்பீர்களா?? இல்லை இதற்கும் அவர்களின் இளைமையே காரணம் கூற்ப்போகின்றீர்களா? அப்படியே இளமையே காரணம் என்றாலும், அந்த இளமையின் வேகத்தையும் அந்த காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் உருவாகும் ஒரு வித துடிப்பினை, மோகத்தினை நீக்கும் படியாகவும், அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கவும் எத்தனை ஊடகங்கள் (இதில் தமிழ் ஊடகங்களும், நீங்கள் கூறிய அதே வேற்று மொழி ஊடகங்களும் அடங்கும்) பயன்படுகின்றன?? அதே குணாதிசயங்களை சாதகமாக்கி அதனூடாக பணம் பெற எத்தனை ஊடகங்கள் வழி வகுக்கின்றன.....? இரு வகையிலான இணையத்தளங்களின் எண்ணிக்கைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்....!
இதிலே நீங்கள் யாகூ பற்றி சொல்லலாம். பட்டிமன்றங்கள் நடத்துகின்றார்கள் என்று.
அங்கே சென்று நம் தமிழ் பிரிவில் பார்த்தால் நம் இளைய உறவுகள் தாகாத வார்த்தைகளால் மற்றவர்களைத் திட்டுவது தான் அதிகம். பட்டிமன்றம் எத்தனை தடவை நடத்தியிருப்பார்கள்...? ஆனால் தினமும் தாகாத வார்த்தைகளால் சண்டை என்பது நடக்கின்றது. மேலும் இப்படியான அரட்டைகளில் கீழ்தரமான பாலியல் விடயங்கள் பரிமாறப்படுகின்றன என்று, எம்.எஸ்.என் எனும் பிரபல்ய தளம் தனது பொது அரட்டை அறையைத் தடை செய்திருப்பதை அறிவீர்களா? இது இளைஞர்கள் இணையம் மூலம் சீரழிகின்றனர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தி நிற்கின்றதல்லவா!
<b>மேற்கோள்:-
சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?</b>
மறுக்கவில்லை, எதிரணித்தலைவர் அவர்களே! அதன் மறுபக்கத்தையும் பார்க்கும்படி கேட்கிறேன். புதிய உலகம்..அழகான அந்த உலகம் மட்டுமா நம் இளையோர் உருவாக்குகிறார்கள்?? இல்லையே அவர்களை அறியாமலேயே , இருக்கும் இந்த ஒரு உலகத்தினையும் மாற்றியல்லவா அமைக்கிறார்கள்...!
ஒரு வீட்டில் பிள்ளைகள் என்பவர்கள் அந்த வீட்டின் தூண்கள்!! புதிய உலகை உருவாக்குகிறார்கள் என்று உங்களைப்போல் பல புலம் வாழ் பெற்றோரும் நினைத்து எதிரணியில் வாதாடிய அனிதா அவர்கள் கூறியது போல் ஒரு குறுகிய வட்டத்தையோ, சதுரத்தையோ அமைத்துக்கொண்டு இருந்தால், இருக்கும் இந்த ஒரு உலகை அவர்கள்- இளையோர்கள் எனும் பெயர் கொண்ட அந்த எதிர்கால சந்ததியினர் , எதிர்மாறாக மாற்றி விட்டால்....?? மாற்றி விட முடியாது என்று அடித்து சொல்ல முடியாது. முடியாது ...என நாம் நன்மையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்க தீமையாகி விடும். எதிர் கொள்ளப்போகும் தீமைகளையும் கருத்தில் கொண்டு நடை போட்டால் நீங்கள் கூறிய புதிய உலகினை அமைக்கா விட்டாலும் இருக்கும் உலகில் அவர்களின் பெரிய நிலையினை காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லையா..?
புலம் வாழ் இளம் தமிழ் சமூகம் இணையத்தால் நன்மையடைந்தால் அதை தமிழ் சமூகமும் நன்மையடைகிறது என்று...அனிதா அவர்கள் கூறினார். அவரின் கருத்தை அப்படியே நான் எடுத்துக்கொண்டால், தூண்களான இளம் சமூகம் நன்மை அடைந்து முன்னேறா விடினும் சீரழிந்து கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமில்லையா..அவை கூறிய்து போல் அது மொத்த
தமிழ் சமூகத்திற்கும் கேடு இல்லையா. ..!
நடுவர் அவர்களே! நம் இளையோர் இணையத்தால் நன்மை மட்டுமே அடையாத பட்சத்தில் அவர்களின் நன்மையில் பங்கு கொள்ளும் தமிழ் சமூகம், அதே இளையோர்கள் சீரழிந்தாலும் பங்கு பெறும் அல்லவா? பல நன்மைகளை பெற்று முன்னேறினால் பாராட்டும் நம் சமூகம் (அநேக சமயங்களில்) ஒரே ஒரு சீரழிவினையோ, தீங்கையோ பெற்றால் அதன் இரட்டிப்பு மடங்காக தூற்றும் இல்லையா....?? ஒரு அஜீவ்ன் அண்ணா, ஒரு மோக்ன் அண்ணா, ஒரு சோழியன் அண்ணா உருவாகி இருப்பதாக கூறினார். உண்மை தான். இவர்கள் மூவருமா இணையத்தளத்தை பயன் படுத்துகிறார்கள்..? இன்னும் எத்தனையோ ஆயிரமாயிரம் இளையோர்கள் பயன்படுத்தவில்லையா..? அப்படிப்பார்க்கப்போனால் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் அண்ணாமார்கள் உருவாகி இருக்க வேண்டும் அல்லவா..?விதிவிலக்காக இவர்களைப்போல் சிலர் முன்னேறி இருக்கிறார்கள்.! இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் அதற்கும் மேலான எண்ணிக்கையில் எத்தனை எத்தனை சண்டைகள், சச்சரவுகள், பாலியல் வன்முறைகள் , பெண்களை அவமானப்படுத்தும் கேடான படங்கள், செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் ஏன் எதிரணியினர் எண்ணிப்பார்க்கத்தவறி விட்டனர்...?(இல்லை தவற்றி விட்டனரா..?)
இறுதியாக அனிதா அவர்கள்
<b>டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !</b> என்று அடித்து கூறினார்.
புலம் பெயர் நாடுகளில் எத்தனை தடவைகள் இப்படியான சடங்குகள் நடை பெறுகின்றன? அதுவே எத்தனை வீடுகளில் கணணிகள் இருக்கின்றன?
சடங்குகள் மூலம் இப்படியானவற்றை தவறான பாதைக்கு இழுத்துச்செல்லக்கூடிய தகவல்கள் பரிமாறப்படுவதிலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கணணி முன்னால் அதிகமாக பரிமாறப்படுகின்றன என்பதை நீங்கள் அறியவில்லையா...? அதனால் வரும் விளைவுகள் இன்னும் அதிகமானதென்பதை நீங்கள் உணரவில்லையா....?
இறுதியாக நடுவர் அவர்களே! எத்தனையோ காலமாக நம் ஈழ மக்களுக்கும் நன்மையே தந்த அந்தப்பெரும் கடல் கூட ஒரு நாளில் அத்தனை நன்மைகளுக்கும் பதிலாக ஈடற்ற நம் உறவுகளின் உயிர்களை அள்ளிச்சென்றது. நன்மைகளை பெறலாம்...வேறு வழிகளில்! உடலினை விட்டுச்சென்ற உறவுகளின் ஆருயிர்களை திருப்பிப்பெற முடியுமா..? அதே போலவே இணையமும் நன்மைகள் தரும் பெருங்கடல். நன்மைக்கு பதிலாக நம் இளையோர்களின் இளமையும் இணைந்து அவர்களின் ஈடற்ற, திருப்பி பெற முடியாத எதிர்காலத்தை சீரழிக்கின்றது...என்று வருத்தத்தோடு கூறி......
இந்த அருமையான பட்டிமன்றத்தில், வாதிட எனக்கு வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து, நம் அணியினர் வெற்றி பெற இன்னும் பல சத்தான கருத்துக்களோடு காத்திருக்கும் நம் அணி உறுப்பினர்களை வாழ்த்தி , மலரப்போகும் இப் புத்தாண்டு உங்களுக்கும், எல்லோருக்கும், ஒரு இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டி..., விடை பெறுகின்றேன்.
<span style='font-size:25pt;line-height:100%'><b>நன்றி வணக்கம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </b></span>
..
....
..!
....
..!

