12-30-2005, 08:22 PM
அடடடடே இத்தனை அழகான விவாதத்தை வாசிக்க வேண்டி உள்ளதே நேரடியாக கேக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை எனக்குள் எழுப்பிவிட்டு எல்லோரையும் தாமரையில் இருக்கச் செய்து தனது அணிக்கு வலுச்சேர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆணித்தரமாக வைத்துச்சென்றிருக்கிறார் அனித்தா.
அனித்தாவின் வாதத்தில் இருந்து..
ஏற்கனவே சினிமா மோகம் உள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தளங்களிற்குச்செல்கின்றார்கள். இணையத்திற்கு முன்னர் சினிமா பற்றியும் நடிகர் நடிகைகள் பற்றியும் அவர்கள் நெளிகோலங்களை பற்றியும் சஞ்சீகைகள் பக்கம் பக்கமாய் அலசியிருக்கின்றன அவற்றை இளைஞர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள் சினிமா என்பதை அவர்களுக்கு இணையம் புதிதாக அறிமுகப்படுத்தவில்லை ஏற்கனவே தெரிந்தது தான் என்று எதிரணித்தலைவரின் கருத்தை வெட்டிப் தனது கருத்தை வைத்திருக்கிறார் அனித்தா.
சஞ்சிகையில் வந்த அந்த நெளிகோல வரணனைகளை ஒருமுறை ஏதாவது தேவைக்குப்பயன்படுத்தினால் அது அத்தோடு குப்பைக்குப்போய்விடும் ஆனால் இணையத்தில் வருகின்ற வர்ணனைகள் என்றும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது அதை எந்த நேரமும் எத்தனை தரமும் பார்க்கலாம் என்றுகூறபோகிறார்களா எதிரணியினர் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்பதை.
இன்னுமொருமுக்கியமான விடையத்தை கூறிவிட்டுள்ளார் அனித்தா.
<b>தமிழில் கருத்தாடும் தளங்களில் கருத்தாடுவதால் மட்டுமே நன்மையடைய முடியும் என்பது யதார்த்தமல்ல...</b>
<b>ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்....</b> ஒரு சில கெட்டவற்றை வைத்துக்கொண்டு இணையம் சீரழிக்கிறது என்று சொல்லலாமா என்கிறார் அனித்தா. (அப்ப சில சீரழிவுகள் இருக்கின்றன என்கிறார்.)
சினிமாப்படங்களை தரவிறக்குவதும் கல்யாணக்காட் அடிப்பதும் தான் வித்தகம் என்று எண்ணுவது பெற்றாரின் அறியாமை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறியாமை நிறைந்த பெற்றோரைத்தான் இப்படியான சிலவற்றை காட்டிவிட்டு பிள்ளைகள் ஏமாற்றி சீரழிந்துபோகிறார்கள் என்று கூறுவார்களோ எதிரணியினர்.
ம் யாகூ சற்றூமில் கெட்டது மட்டும் அல்ல அங்கு நல்லதும் நடக்கிறது என்று உதாரணம் காட்டியிருக்கிறார் அங்கு ஒலிவடிவில் பட்டிமன்றங்கள் நடந்திருக்கின்றன அப்படி என்கிறார் அனித்தா. அறிந்தவர்கள் பகிருங்கள். ஆக நல்லதும் நடக்குது கெட்டதும் நடக்கிது என்றியள் சரி சரி. இந்த சற்றூம்மூலம் தான் நடிகை அசின் என்று ஒரு இளைஞனை ஒரு பெண் ஏமாற்றி பொருட்கள் வாங்கியதாய் செய்தி ஒன்று பரவியதே.. இதை நன்மை என்பதா சீரழிவு என்பதா?? பெண்ணிற்கு நன்மை தானே??
சற்றூமும் சினிமாத்தளங்களும் தான் இணையம் என்பது குறுகியபார்வை என்றும் அதற்கு அப்பால் விரிந்து பரந்து பயனுள்ள விடயங்கள் நிறைய உள்ளன என்றும் கூறுகிறார். இதை மறுப்பார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிரணித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில்கள் என்று பல இணைய நிர்வகிப்பவர்களைப்பற்றி அனித்தா குறிப்பிட்டிருக்கிறார். அவர்களும் இளைஞர்கள் தான் எனச்சுட்டிக்காட்டியிருக்கிறார் அந்த இணையங்களால் இளையோர் அடையும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் உள்ள சீரழிவுகள் பற்றி மற்ற அணியினர் குறிப்பிடுகிறார்களா என்று பார்ப்போம்.
எதிரணித்தலைவருக்கு இன்னொரு கருத்தைச்சொல்லிச்சென்றிருக்கிறார் டேற்றிங் செய்வதற்கு இணையம் தவிர்ந்த இன்னும் பல சாதனங்கள் இருக்கின்றது. அந்த சாதனங்கள் மூலமும் அவர்கள் டேற்றிங் செய்து கொள்ளலாம்.. இணையத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்று சொல்லிச்செல்கிறார். எங்கே எதிரணியினர் கருத்து என்னவாக இருக்கும். மற்றைய சாதனங்களை விட இணையத்தில் டேற்றிங் செய்பவர்கள் அதிகம் என்று புள்ளிவிபரம் வரப்போகிறதா இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்...
ஆக்க நினைப்பவர்க்கு இணையம் ஊக்க சக்தி சீரழிய நினைப்பவர்க்கு சிறு துரும்பும் போதும்.. என்று தனது அணித்தலைவரின் வரிகளைச்சுட்டிக்காட்டி இணையத்தால் புலம்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்று உறுதிகூறிச்செல்கிறார் அனித்தா.
அனித்தாவைத்தொடர்ந்து சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து அடுத்த விவாதியை அழைக்கிறோம்.
ஆசிரியர் செல்லமுத்துவின் தாயாரது செய்தி அறிந்திருப்பியள். இனி பட்டிமன்றம் தொடருமா இல்லையா என்பதை ரசிகையும் உறுப்பினர்களும் தான் சொல்லவேண்டும்.
அனித்தாவின் வாதத்தில் இருந்து..
ஏற்கனவே சினிமா மோகம் உள்ள இளைஞர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தளங்களிற்குச்செல்கின்றார்கள். இணையத்திற்கு முன்னர் சினிமா பற்றியும் நடிகர் நடிகைகள் பற்றியும் அவர்கள் நெளிகோலங்களை பற்றியும் சஞ்சீகைகள் பக்கம் பக்கமாய் அலசியிருக்கின்றன அவற்றை இளைஞர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள் சினிமா என்பதை அவர்களுக்கு இணையம் புதிதாக அறிமுகப்படுத்தவில்லை ஏற்கனவே தெரிந்தது தான் என்று எதிரணித்தலைவரின் கருத்தை வெட்டிப் தனது கருத்தை வைத்திருக்கிறார் அனித்தா.
சஞ்சிகையில் வந்த அந்த நெளிகோல வரணனைகளை ஒருமுறை ஏதாவது தேவைக்குப்பயன்படுத்தினால் அது அத்தோடு குப்பைக்குப்போய்விடும் ஆனால் இணையத்தில் வருகின்ற வர்ணனைகள் என்றும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது அதை எந்த நேரமும் எத்தனை தரமும் பார்க்கலாம் என்றுகூறபோகிறார்களா எதிரணியினர் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்பதை.
இன்னுமொருமுக்கியமான விடையத்தை கூறிவிட்டுள்ளார் அனித்தா.
<b>தமிழில் கருத்தாடும் தளங்களில் கருத்தாடுவதால் மட்டுமே நன்மையடைய முடியும் என்பது யதார்த்தமல்ல...</b>
<b>ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்....</b> ஒரு சில கெட்டவற்றை வைத்துக்கொண்டு இணையம் சீரழிக்கிறது என்று சொல்லலாமா என்கிறார் அனித்தா. (அப்ப சில சீரழிவுகள் இருக்கின்றன என்கிறார்.)
சினிமாப்படங்களை தரவிறக்குவதும் கல்யாணக்காட் அடிப்பதும் தான் வித்தகம் என்று எண்ணுவது பெற்றாரின் அறியாமை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறியாமை நிறைந்த பெற்றோரைத்தான் இப்படியான சிலவற்றை காட்டிவிட்டு பிள்ளைகள் ஏமாற்றி சீரழிந்துபோகிறார்கள் என்று கூறுவார்களோ எதிரணியினர்.
ம் யாகூ சற்றூமில் கெட்டது மட்டும் அல்ல அங்கு நல்லதும் நடக்கிறது என்று உதாரணம் காட்டியிருக்கிறார் அங்கு ஒலிவடிவில் பட்டிமன்றங்கள் நடந்திருக்கின்றன அப்படி என்கிறார் அனித்தா. அறிந்தவர்கள் பகிருங்கள். ஆக நல்லதும் நடக்குது கெட்டதும் நடக்கிது என்றியள் சரி சரி. இந்த சற்றூம்மூலம் தான் நடிகை அசின் என்று ஒரு இளைஞனை ஒரு பெண் ஏமாற்றி பொருட்கள் வாங்கியதாய் செய்தி ஒன்று பரவியதே.. இதை நன்மை என்பதா சீரழிவு என்பதா?? பெண்ணிற்கு நன்மை தானே??
சற்றூமும் சினிமாத்தளங்களும் தான் இணையம் என்பது குறுகியபார்வை என்றும் அதற்கு அப்பால் விரிந்து பரந்து பயனுள்ள விடயங்கள் நிறைய உள்ளன என்றும் கூறுகிறார். இதை மறுப்பார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிரணித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில்கள் என்று பல இணைய நிர்வகிப்பவர்களைப்பற்றி அனித்தா குறிப்பிட்டிருக்கிறார். அவர்களும் இளைஞர்கள் தான் எனச்சுட்டிக்காட்டியிருக்கிறார் அந்த இணையங்களால் இளையோர் அடையும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் உள்ள சீரழிவுகள் பற்றி மற்ற அணியினர் குறிப்பிடுகிறார்களா என்று பார்ப்போம்.
எதிரணித்தலைவருக்கு இன்னொரு கருத்தைச்சொல்லிச்சென்றிருக்கிறார் டேற்றிங் செய்வதற்கு இணையம் தவிர்ந்த இன்னும் பல சாதனங்கள் இருக்கின்றது. அந்த சாதனங்கள் மூலமும் அவர்கள் டேற்றிங் செய்து கொள்ளலாம்.. இணையத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்று சொல்லிச்செல்கிறார். எங்கே எதிரணியினர் கருத்து என்னவாக இருக்கும். மற்றைய சாதனங்களை விட இணையத்தில் டேற்றிங் செய்பவர்கள் அதிகம் என்று புள்ளிவிபரம் வரப்போகிறதா இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்...
ஆக்க நினைப்பவர்க்கு இணையம் ஊக்க சக்தி சீரழிய நினைப்பவர்க்கு சிறு துரும்பும் போதும்.. என்று தனது அணித்தலைவரின் வரிகளைச்சுட்டிக்காட்டி இணையத்தால் புலம்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்று உறுதிகூறிச்செல்கிறார் அனித்தா.
அனித்தாவைத்தொடர்ந்து சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து அடுத்த விவாதியை அழைக்கிறோம்.
ஆசிரியர் செல்லமுத்துவின் தாயாரது செய்தி அறிந்திருப்பியள். இனி பட்டிமன்றம் தொடருமா இல்லையா என்பதை ரசிகையும் உறுப்பினர்களும் தான் சொல்லவேண்டும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

