Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மல்லிகை
#5
பாவம் அந்த மல்லிகை
கருங்கூந்தல் மேலேற
மங்கையும் கொண்டால்
கூந்தல் வாசம்...!
இறைவன் கூட
நக்கீரன் முன் மண்டியிட்டான்
மங்கைதனின்
மயக்கும் மொழி கேட்டுமே...!
இன்று பள்ளியறையல்ல
மங்கை மேனி முழுதும்
விசிறி அடிக்கும் நாத்த மருந்தாய்
கசக்கிப் பிழிந்தெடுத்தார்
பாவம் அந்த மல்லிகை...!

பள்ளியறைக்கு மல்லிகையேன்
பள்ளி கொள்வது
அன்பால் இணைந்த
மனங்கள் அல்லவா...!
பிறகேன் அங்கும்
'ஓர்' இனம் மீதே கணடனம்....!
ஆடவனிடத்தில் மனமிருக்கு
மங்கையிடத்தில் மனமே இல்லையோ...?
அதுசரி இதயமே கல்லாம்
மனமெங்க கனிந்திருக்க...!

புயல் தாக்க
காதலன் வருத்தம் கண்டு
தாமரை வரவில்லையோ
'நாசா' நேற்றுத்தான் தந்தது செய்தி
சூரியனில் புயலும்
செற்றே தனிந்ததென்று...!
சா... அப்படி இருக்காது
புயல் வீசும்
இவனெல்லாம் ஒரு காதலன்
என்று ஒதுங்கியிருந்ததோ தாமரை...!

ஊடல் கழிந்தால் கூடல் தானே
தாமரை இங்கு மல்லிகை கொண்டு
கூடி நிற்பது காணவில்லையோ
கண்கள் சில.....!
யாழ்களமே மல்லிகையால்
நீ தாமரை கண்டாய் மகிழ்ச்சிதானே...!

வாழ்க மல்லிகை
முல்லை.....????!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மல்லிகை - by thamarai - 12-18-2003, 11:59 PM
[No subject] - by sOliyAn - 12-19-2003, 01:15 AM
[No subject] - by shanmuhi - 12-19-2003, 07:18 AM
அருமை! - by இளைஞன் - 12-19-2003, 10:46 AM
Re: மல்லிகை - by kuruvikal - 12-19-2003, 11:59 AM
[No subject] - by vasisutha - 12-19-2003, 04:31 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 05:15 PM
[No subject] - by nalayiny - 12-19-2003, 09:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)