12-30-2005, 01:52 AM
அணியின் தலைவர் சோழியான் அவர்களே, அனைத்துக் களஉறவுகளே "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழிந்தார்
"புலத்தில் வளரும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்" என்று பிரித்தார். இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது இப்படியான களங்களில் காண முடிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். "இல்லை" என்று தானே பதிலையும் கூறினார். நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும். (எதிர் அணியினர் இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டாம்)
இந்த சினிமா மோகம் உலகில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஒருவயதில் எல்லோரையும் தொட்டுச்செல்லும் ஒரு வியாதி என்று சொல்லலாம். இந்த வயதுக்கோளாறு உங்களையும் நிச்சயம் தொட்டிருக்கும். "களவையும் கற்று மற" என்று கூறுவார்கள். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்தானே! இதற்கு கணினி தேவையில்லை.
சி.டி அடிப்பது அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன், கேள்விப்படுகிறேன். இதற்குக் கணினி தேவைதான். கலியாணக்காட் அடித்ததுபற்றி ஒருமுறைதான் கேள்விப்பட்டேன். (இப்போது வெளியே மலிவாக அடிக்கலாம் என்று அவர்களுக்குக் கூறவேண்டும்).
சற் ரூம்களிலே போய்ப்பாருங்கள் காதலுக்கு வழிதேடுது என்று கூறினார். முன்னர் ஊரிலே காதலிக்கு கடுதாசி கொடுத்தால் கட்டிப்போட்டு கண்ணுக்கு மிளகாய்த்து}ள் போட்டுவிடுவார்கள். (என் அனுபவமல்ல) அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் இப்போது பெற்றோர்களாக இருக்கின்றார்கள். அதே கொள்கையைத்தான் இப்போதும் புலத்திலும் கடைப்பிடிக்கின்றார்கள். அப்போ இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது பருவக்கோளாறு. சற் ரூம் அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றதுபோல் இருக்கின்றது. (கோபிக்கவேண்டாம்).
மேற்கூறிய இரு களங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பிடுவது சரியல்ல என்று எண்ணுகிறேன். அங்கே 80 வீதம், இங்கே 80 வீதம். அப்போ 50 இற்கு 50 என்று கூறலாமா?
மீண்டும் 80 களைக் காரணம் காட்டினீர்கள். 60 களில் வந்தோரில் அதிகமானோர் வேலை செய்வதற்கு என்றுதான் வந்தார்கள். 70 களில் வந்தோர் படிப்பதற்கு என்றுதான் வந்தார்கள். ஆனால் நாட்டு நிலைமைகள் மாறியதால் 80 களில் வந்தோர் இரண்டுக்குமாகத்தான் வந்தார்கள். இப்படியெல்லாம் வருமென்று யார் கண்டார்கள்?
ஆகவே உங்களின் கருத்துப்படி இணையமானது சற் ரூம்களிலே கூத்தடிக்கவும், அதனு}டாக "டேட்டிங்" காணவும்தான் வழிவகுக்கின்றது என்று கூறினீர்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று எடுக்கலாமா?
இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிமுடையதாயின் அந்த நன்மையின் பயன்பாட்டை, எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக்காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே என்றும் கூறினீர்கள்.
நிச்சயம் வருவார்கள், தொட்டும் காட்டுவார்கள் என்றுகூறி தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி கூறி அடுத்தவரை அழைக்கிறேன்.
அனித்தா உங்கள் அணிக்கு பலம் கூட்டும் கருத்துக்களை முன்வைக்கவும்.
நன்றி
"புலத்தில் வளரும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்" என்று பிரித்தார். இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது இப்படியான களங்களில் காண முடிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். "இல்லை" என்று தானே பதிலையும் கூறினார். நான் ஒன்று கூறுவேன் தாயகத்திலிருந்து வந்த இளைஞர்களைவிட இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சிலர் தமிழ், நுண்கலைப பரீட்சைகளிலே தமிழிலே எழுதி அதிகப்படியான பெறுபேறுகளைப்பெறுகிறார்கள், வாய்ப்பாட்டிலே அரங்கேற்றம் செய்கிறார்கள், மேடை நிகழ்ச்சிகள் செய்கிறார்கள், எல்லாவற்றையும் நன்றாகவே செய்கிறார்கள். கருத்துக்களங்களில் இருக்கிறார்களோ இல்லையோ இணையத்தளங்களைப் பாவிக்கிறார்கள், பயனடைகிறார்கள் என்றே கூறவேண்டும். (எதிர் அணியினர் இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டாம்)
இந்த சினிமா மோகம் உலகில் எந்தப் பாகத்தில் இருந்தாலும் ஒருவயதில் எல்லோரையும் தொட்டுச்செல்லும் ஒரு வியாதி என்று சொல்லலாம். இந்த வயதுக்கோளாறு உங்களையும் நிச்சயம் தொட்டிருக்கும். "களவையும் கற்று மற" என்று கூறுவார்கள். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்தானே! இதற்கு கணினி தேவையில்லை.
சி.டி அடிப்பது அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன், கேள்விப்படுகிறேன். இதற்குக் கணினி தேவைதான். கலியாணக்காட் அடித்ததுபற்றி ஒருமுறைதான் கேள்விப்பட்டேன். (இப்போது வெளியே மலிவாக அடிக்கலாம் என்று அவர்களுக்குக் கூறவேண்டும்).
சற் ரூம்களிலே போய்ப்பாருங்கள் காதலுக்கு வழிதேடுது என்று கூறினார். முன்னர் ஊரிலே காதலிக்கு கடுதாசி கொடுத்தால் கட்டிப்போட்டு கண்ணுக்கு மிளகாய்த்து}ள் போட்டுவிடுவார்கள். (என் அனுபவமல்ல) அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் இப்போது பெற்றோர்களாக இருக்கின்றார்கள். அதே கொள்கையைத்தான் இப்போதும் புலத்திலும் கடைப்பிடிக்கின்றார்கள். அப்போ இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இது பருவக்கோளாறு. சற் ரூம் அனுபவம் உங்களுக்கு நிறையவே இருக்கின்றதுபோல் இருக்கின்றது. (கோபிக்கவேண்டாம்).
மேற்கூறிய இரு களங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பிடுவது சரியல்ல என்று எண்ணுகிறேன். அங்கே 80 வீதம், இங்கே 80 வீதம். அப்போ 50 இற்கு 50 என்று கூறலாமா?
மீண்டும் 80 களைக் காரணம் காட்டினீர்கள். 60 களில் வந்தோரில் அதிகமானோர் வேலை செய்வதற்கு என்றுதான் வந்தார்கள். 70 களில் வந்தோர் படிப்பதற்கு என்றுதான் வந்தார்கள். ஆனால் நாட்டு நிலைமைகள் மாறியதால் 80 களில் வந்தோர் இரண்டுக்குமாகத்தான் வந்தார்கள். இப்படியெல்லாம் வருமென்று யார் கண்டார்கள்?
ஆகவே உங்களின் கருத்துப்படி இணையமானது சற் ரூம்களிலே கூத்தடிக்கவும், அதனு}டாக "டேட்டிங்" காணவும்தான் வழிவகுக்கின்றது என்று கூறினீர்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்று எடுக்கலாமா?
இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிமுடையதாயின் அந்த நன்மையின் பயன்பாட்டை, எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக்காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே என்றும் கூறினீர்கள்.
நிச்சயம் வருவார்கள், தொட்டும் காட்டுவார்கள் என்றுகூறி தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி கூறி அடுத்தவரை அழைக்கிறேன்.
அனித்தா உங்கள் அணிக்கு பலம் கூட்டும் கருத்துக்களை முன்வைக்கவும்.
நன்றி

