12-30-2005, 12:42 AM
அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கங்கள். 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தனது அணியின் வாதத்தை ஆரம்பித்து இணையம் பற்றி அழகாகக்கூறி இளைஞனது ஒருசில கருத்தையும் தொட்டு வெட்டிச்சென்றார் சோழியான் அவர்கள். சோழியான் அவர்கள் சட்றூம் பற்றி திரும்பத்திரும்ப சொல்லிவிட்டுச்சென்றிருக்கிறார் (என்ன ஏதாவது பாதிப்பே(இதைப்பற்றிய கருத்துக்கள் வேண்டாம்) ) இந்தச்சற்றூமால் எமது இளையோருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதை எதிர்அணியினர் கூறுகிறார்களா பார்ப்போம்.
<b>வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா? </b> என்று கூறுகிறார் திருவாளர் இளைஞன்.
<b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b>
என்ற கேள்வியை எதிரணிமுன் வைக்கிறார் சோழியான் அவர்கள். எங்கே இணையம் மூலம் எதை தமிழினத்திற்கு தந்தார்கள் என்று எதிரணியினர் சொல்வார்களா ஒரு உதாரணத்தை காட்டுவார்களா? எதிர்பார்த்தபடி
அணித்தலைவர் சோழியான் இன்னொருமுக்கிய விடையத்தைச்சுட்டிக்காட்டியுள்ளார். புலத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிங்கிலத்தில் எழுதும் களத்தில் தான் நிக்கிறார்கள் தமிழ்க்களங்களில் எழுதுவதில்லை என்கிறார். ( தட்டச்சுப்பழக பட்ட பாட்டையாருக்குச்சொல்லி அழுவது என்று வரப்போகிறார்கள் எதிரணியினர்). அதுவும் சினிமாவை நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம் பக்கமாய் அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துச்சென்றார். என்ன செய்யவது எல்லாம் கலை என்ற கறுமாந்திரம் என்று சொல்லப்போகிறார்களா?? இல்லை எல்லாக்களங்களிலும் (யாழ் உட்பட) சினிமா ஒருபகுதியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டப்போகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவகாசி சீடியை பிள்ளை அடித்து பெற்றோருக்கு காட்டி அதை அவர்கள் மகிழ்வது பற்றி குறிப்பிட்டுச்சென்றார் அணித்தலைவர் சோழியான். எங்கே எதிரணியினர் எப்படி அடிக்கப்போகிறார்கள். பிள்ளை சீடிவாங்கும் பணத்தை மிச்சப்படுத்துது எனப்போகிறார்களா இல்லை பிள்ளைக்குத் தெரிந்த கணணி வித்தையில் பெற்றோருடன் பகிரக்கூடியது இது மட்டும் தான் எனப்போகிறார்களா.??
<b>ஆக, வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது
பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை</b>
திருவாளர் சோழியான் அவர்கள் இளைஞர்களுக்கு இணையம் எதற்குப்பயன்படுகிறது என்றதை விளக்கியிருக்கிறார். எதிரணியின் பதில் என்னவாய் இருக்கும். அப்பன் அக்கம்பக்கம் பாத்துச்செய்ததை நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் உதவியுடன் செய்கிறோம் எனப்போகிறார்களா பொறுத்திருந்து ரசிப்போம். நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக அடுத்த விவாதியை அழைக்கிறோம்.
<b>மற்றுமொருகருத்தோடு சந்திக்கிறேன் அதுவரை வணக்கங்கள்.</b>
<b>வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா? </b> என்று கூறுகிறார் திருவாளர் இளைஞன்.
<b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b>
என்ற கேள்வியை எதிரணிமுன் வைக்கிறார் சோழியான் அவர்கள். எங்கே இணையம் மூலம் எதை தமிழினத்திற்கு தந்தார்கள் என்று எதிரணியினர் சொல்வார்களா ஒரு உதாரணத்தை காட்டுவார்களா? எதிர்பார்த்தபடி
அணித்தலைவர் சோழியான் இன்னொருமுக்கிய விடையத்தைச்சுட்டிக்காட்டியுள்ளார். புலத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிங்கிலத்தில் எழுதும் களத்தில் தான் நிக்கிறார்கள் தமிழ்க்களங்களில் எழுதுவதில்லை என்கிறார். ( தட்டச்சுப்பழக பட்ட பாட்டையாருக்குச்சொல்லி அழுவது என்று வரப்போகிறார்கள் எதிரணியினர்). அதுவும் சினிமாவை நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம் பக்கமாய் அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துச்சென்றார். என்ன செய்யவது எல்லாம் கலை என்ற கறுமாந்திரம் என்று சொல்லப்போகிறார்களா?? இல்லை எல்லாக்களங்களிலும் (யாழ் உட்பட) சினிமா ஒருபகுதியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டப்போகிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
சிவகாசி சீடியை பிள்ளை அடித்து பெற்றோருக்கு காட்டி அதை அவர்கள் மகிழ்வது பற்றி குறிப்பிட்டுச்சென்றார் அணித்தலைவர் சோழியான். எங்கே எதிரணியினர் எப்படி அடிக்கப்போகிறார்கள். பிள்ளை சீடிவாங்கும் பணத்தை மிச்சப்படுத்துது எனப்போகிறார்களா இல்லை பிள்ளைக்குத் தெரிந்த கணணி வித்தையில் பெற்றோருடன் பகிரக்கூடியது இது மட்டும் தான் எனப்போகிறார்களா.??
<b>ஆக, வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது
பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை</b>
திருவாளர் சோழியான் அவர்கள் இளைஞர்களுக்கு இணையம் எதற்குப்பயன்படுகிறது என்றதை விளக்கியிருக்கிறார். எதிரணியின் பதில் என்னவாய் இருக்கும். அப்பன் அக்கம்பக்கம் பாத்துச்செய்ததை நாங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தின் உதவியுடன் செய்கிறோம் எனப்போகிறார்களா பொறுத்திருந்து ரசிப்போம். நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக அடுத்த விவாதியை அழைக்கிறோம்.
<b>மற்றுமொருகருத்தோடு சந்திக்கிறேன் அதுவரை வணக்கங்கள்.</b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

