12-29-2005, 11:48 PM
இளைஞன் தனது பெயருக்கேற்றாற்போல் இளையவர்க்கு… என்று தனது வணக்கத்தினைச்சொல்லி வாதத்தினை ஆரம்பித்தார்.
"இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது என்கின்ற உண்மையை எதிரணியினர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா?" என்று கேள்விகளை எழுப்பினார்.
பக்கவாட்டில் வளர்வதும் ஒருவித வளர்ச்சிதானே! (அப்படியானவர்கள் மன்னிக்கவும்)
தமிழ் இணையத்தளங்கள் உலகிலே இரண்டாவது இடத்தில் இருப்பதைப்பற்றி அறிந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியான விடயம். ஆனால்
"இந்த இணையத்தளங்கள்தானே பிரச்சினைகளையும் உருவாக்கி, சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன"
என்று எதிரணியினர் வாதாட வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவந்தேன்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" இது இங்கே பொருந்துமா? (எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்).
கருத்தாட வந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இளைஞர்கள் என்று அடித்துக்கூறுகின்றார். எப்படி? பெயர்களைப் பார்த்து வயதுகளைக் கணிப்பது சரியா? இது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். (நான் வாதாட வந்திருக்கும் உங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பவில்லை, யாரும் பதில் தரவும் தேவையில்லை).
"குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்களைப் புறந்தள்ளுவதாகவும், இந்த அறிவிலிகளைத் தகர்த்தெறிந்து இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த இணைய ஊடகம் என்றால் மிகையாகாது" என்றும், "இளம் பெண்களின் கருத்தியல் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் தமது எண்ணத்தை, உணர்வுகளை வெளிப்படுத்த வழிசமைத்துக்கொடுத்திருப்பது இந்த இணையம்தானே" என்றும் கூறினார்.
இங்கேதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. (மீண்டும் எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்). இப்படியாக இளையோர் எழுதும் கருத்துக்களை இந்த வயதுபோனவர்கள் இளைஞர்களைப்போல் இணையத்தளத்திலே மணிக்கணக்காக இருந்துகொண்டு படிப்பார்களா? படித்தால்தானே இந்தப்பிரச்சனைகளைப்பற்றி அவர்களுக்கு விளங்கும். (சின்னப்பு, புளுகர் பொன்னையா, முகத்தார் போன்றவர்கள் மன்னிக்கவும்).
பள்ளிக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், பணத்தை மிச்சம்பிடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இணையம் துணைபுரிகிறது என்றும் தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக வைத்தார்.
இறுதியில் "ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்" என்று ஒரு புதிய பழமொழியையும் ஆக்கித்தந்தார். பாராட்டுக்கள்.
அணித்தலைவர் என்ற காரணத்தால் அவர் தனது நேரத்தையும் பொருட்படுத்தாமல் தொடருந்திலே பயணித்துக்கொண்டே இக்கருத்துக்களை எழுதி முன்வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கடமையுணர்வும், அணித்தலைவன் என்ற பொறுப்புணர்வும் இளைஞனிடம் நிறையவே இருக்கின்றன என்பதற்கு இவை போதும். அவர் எழுதிய சில கருத்துக்களை எடுத்து எனது கருத்துக்கள் சிலவற்றைத்தொடுத்தேன். அவை எந்த அணிக்கும் உரம் சேர்ப்பதாக எண்ணவேண்டாம்.
சரி, இனி எதிர் அணியின் தலைவர் சோழியான் அவர்களை அழைக்கிறேன். "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழியுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்றொரு பழமொழி உண்டு. எங்கள் இந்த அணித்தலைவர் சோழியனுக்கு குடுமி இருக்குதா இல்லையா என்பது தெரியாது. அப்படி இருந்தாலும் அது ஆடுதா இல்லையா என்பதும் தெரியாது. (இதனைப்பற்றி யாரும் கருத்தெழுத வேண்டாம்). கருத்துக்களை மட்டும் கூறுமாறு அழைக்கிறேன்.
(சோழியான் தனது கருத்துக்களை நான் எழுத முன்னரே வைத்துவிட்டார். இப்போதும் ஏதாவது கூறவிரும்பினால் மிக மிகச்சுருக்கமாகக் கூறவும்)
"இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத் தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது என்கின்ற உண்மையை எதிரணியினர் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா?" என்று கேள்விகளை எழுப்பினார்.
பக்கவாட்டில் வளர்வதும் ஒருவித வளர்ச்சிதானே! (அப்படியானவர்கள் மன்னிக்கவும்)
தமிழ் இணையத்தளங்கள் உலகிலே இரண்டாவது இடத்தில் இருப்பதைப்பற்றி அறிந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியான விடயம். ஆனால்
"இந்த இணையத்தளங்கள்தானே பிரச்சினைகளையும் உருவாக்கி, சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன"
என்று எதிரணியினர் வாதாட வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவந்தேன்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" இது இங்கே பொருந்துமா? (எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்).
கருத்தாட வந்திருப்பவர்களில் 80 வீதமானோர் இளைஞர்கள் என்று அடித்துக்கூறுகின்றார். எப்படி? பெயர்களைப் பார்த்து வயதுகளைக் கணிப்பது சரியா? இது ஆபத்தில் முடிந்தாலும் முடியும். (நான் வாதாட வந்திருக்கும் உங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பவில்லை, யாரும் பதில் தரவும் தேவையில்லை).
"குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்களைப் புறந்தள்ளுவதாகவும், இந்த அறிவிலிகளைத் தகர்த்தெறிந்து இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த இணைய ஊடகம் என்றால் மிகையாகாது" என்றும், "இளம் பெண்களின் கருத்தியல் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும் தமது எண்ணத்தை, உணர்வுகளை வெளிப்படுத்த வழிசமைத்துக்கொடுத்திருப்பது இந்த இணையம்தானே" என்றும் கூறினார்.
இங்கேதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. (மீண்டும் எதிரணியினர் கவனிக்கவும்: இதனை உங்களுக்குச் சார்பாகக் கூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்). இப்படியாக இளையோர் எழுதும் கருத்துக்களை இந்த வயதுபோனவர்கள் இளைஞர்களைப்போல் இணையத்தளத்திலே மணிக்கணக்காக இருந்துகொண்டு படிப்பார்களா? படித்தால்தானே இந்தப்பிரச்சனைகளைப்பற்றி அவர்களுக்கு விளங்கும். (சின்னப்பு, புளுகர் பொன்னையா, முகத்தார் போன்றவர்கள் மன்னிக்கவும்).
பள்ளிக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும், பணத்தை மிச்சம்பிடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இணையம் துணைபுரிகிறது என்றும் தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக வைத்தார்.
இறுதியில் "ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்" என்று ஒரு புதிய பழமொழியையும் ஆக்கித்தந்தார். பாராட்டுக்கள்.
அணித்தலைவர் என்ற காரணத்தால் அவர் தனது நேரத்தையும் பொருட்படுத்தாமல் தொடருந்திலே பயணித்துக்கொண்டே இக்கருத்துக்களை எழுதி முன்வைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கடமையுணர்வும், அணித்தலைவன் என்ற பொறுப்புணர்வும் இளைஞனிடம் நிறையவே இருக்கின்றன என்பதற்கு இவை போதும். அவர் எழுதிய சில கருத்துக்களை எடுத்து எனது கருத்துக்கள் சிலவற்றைத்தொடுத்தேன். அவை எந்த அணிக்கும் உரம் சேர்ப்பதாக எண்ணவேண்டாம்.
சரி, இனி எதிர் அணியின் தலைவர் சோழியான் அவர்களை அழைக்கிறேன். "புலம்வாழ் தமிழ் இளைஞர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்" என்பதற்கு ஆதாரமாக அந்த அணியின் தலைவர் என்ற முறையில் அவரின் கருத்துக்களை முன்மொழியுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்றொரு பழமொழி உண்டு. எங்கள் இந்த அணித்தலைவர் சோழியனுக்கு குடுமி இருக்குதா இல்லையா என்பது தெரியாது. அப்படி இருந்தாலும் அது ஆடுதா இல்லையா என்பதும் தெரியாது. (இதனைப்பற்றி யாரும் கருத்தெழுத வேண்டாம்). கருத்துக்களை மட்டும் கூறுமாறு அழைக்கிறேன்.
(சோழியான் தனது கருத்துக்களை நான் எழுத முன்னரே வைத்துவிட்டார். இப்போதும் ஏதாவது கூறவிரும்பினால் மிக மிகச்சுருக்கமாகக் கூறவும்)

