12-29-2005, 09:49 PM
இரசிகை அவர்களின் ஒழுங்கமைப்பிலே, 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்து போகிறார்களா?' என்னும் பட்டிமன்றத்துக்கு நடுவர்களாக முன்வந்திருக்கும் தமிழினி அவர்களே! திரு செல்வமுத்து அவர்களே! வாதப் பிரதி வாதங்களின் மூலமாக இன்றைய உண்மை நிலையை முன்வைக்கக் காத்திருக்கும் அணியிலுள்ள யாழ்கள உறவுகளே! மற்றும் பார்வையாளர்களே! முக்கியமாக களம் தந்த திரு மோகன் அவர்களே! தங்கள் யாபேருக்கும் எனது பணிவன்பான வணக்கங்களுடன், 'புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்து போகிறார்கள்' என்ற தலைப்பிலே எனது கருத்துக்களை முன்வைப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.
விஞ்ஞான தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியின் மைல் கல் எனும் அளவிற்கு மானிட குலத்திற்கு வரப்பிரசாகமாக அமைந்திருப்பது 'இணையம்' என்றால் அதிலே ஐயமில்லை. பல்வேறு துறைகள் ஒட்டிய தேவைகளை, ஆலோசனைகளை, அறிவூட்டல்களை, தகவல் பரிமாற்றங்களை மிகவும் இலகுவாக்கி மானுட செளகரியங்களின் விரைவு நிறைவேற்றுதல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளதும் இணையம் என்றாலும் மிகையில்லை.
ஆனால், இத்தகைய இணையத்தின் பயன்பாடு, எம் இளைஞர்களைப் பொறுத்தளவில் எந்தவகையில் பயன்பாடாகிறது என்ற தேடலே இந்தப் பட்டிமன்றத்தின் நோக்கமாகும். அந்தவகையில் எனக்குத் தெரிந்த சில கருத்துகளை இங்கே முன்வைக்க விளைகிறேன்.
<b>புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.</b>
1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.
இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, <b>தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள்</b>. அவ்வளவுதான்.
இன்று புகலிட நாடுகளில் கணனி இல்லாத தமிழ் வீடுகளே இல்லை எனலாம். <b>கணனியை இயக்கத் தெரிகிறதோ இல்லையோ... வானொலி, தொலைக்காட்சி முன்பு வரவேற்பறையில் அலங்காரப் பொருளாக இருந்ததுபோல.. இன்று கணனி அலங்காரப் பொருளாகவாவது வரவேற்பறையில் குந்திக்கொண்டிருக்கிறது.</b> அந்தக் கணனியின் முன்னால் எத்தனை இளைஞர்கள் மணித்தியாலக்கணக்காக குந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. அதுவும் கணக்கிலடங்காதவர்கள். அப்பா அம்மாவை பார்த்தா.. <b>'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..'</b> எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?!
காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்.
உதாரணமாக யாகூ சற் ரூம்களுக்கு போய் பாருங்கள். எம்மவரின் இணைய முன்னேற்றத்தை ஒலிவடிவிலேயே கேட்க முடியும். இப்படி கண்காணிப்பாளரற்ற சற் ரூம்களில் பங்குபற்றும் தமிழ் உறுப்பினர்களது எண்ணிக்கையையும் யாழ் போன்ற ஒழுங்கான கருத்துக்களங்களில் பங்குபற்றும் அங்கத்துவர்களின் எண்ணிக்கையையும் கவனியுங்கள். ஒரு வீதமாவது தேறுமா?!
எதிரணித் தலைவர் கூறியதுபோல, <b>'இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி'</b> என்றால்.. 'சற் ரூம்'களிலே நேரத்தையும் காலத்தையும் கண்ணையும் பழுதாக்கிக்கொண்டு குப்பைகளை வாரி இறைக்கிறார்களே... அவர்களும் இளைஞர்கள்தானே?! அதாவது மாற்று அணித்தலைவரின் கணிப்பீட்டின்படி 80 வீத இளைஞர்களாவது இருப்பார்கள்தானே?!
சில விடயங்களை கூற வேண்டுமாயின் வேறு விடயங்களையும் துணைக்கு அழைக்கத்தான் வேண்டும். அதேபோல, 80ம் ஆண்டுகளிலேயே பெரும்பாலான தமிழர்கள் புலம்பெயர்ந்து காலூன்றினார்கள். அப்போது அவர்கள் 20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான இளைஞர்கள். அன்று அவர்கள் தமிழ் பாடசாலைகளை நிறுவினார்கள். அமைப்புகளை உருவாக்கினார்கள். வியாபாரங்களை ஆரம்பித்தார்கள். ஆக, <b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b> என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவதையும் தவிர்க்க முடியாமலுள்ளது. இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிய முடையதாயின், அந்த நன்மையின் பயன்பாட்டை.. எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக் காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே!
தற்போது புலம் பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் இணையமானது, 'சற் ரூம்'களில் கூத்தடிக்கவும், அதனூடாக 'டேட்டிங்' காண வழி தேடலாகவுமே உள்ளது. இதைத் தவிர, இணையத்தால் அவர்களின் பயன்பாடு.. அந்தப் பயன்பாட்டினூடாக நமது இனம் பெற்ற பிரயோசனம் என்பது 'பூச்சியம்'ஆகவே என்மட்டில் தோன்றுகிறது.
ஆக, <b>வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை.. </b>எனவே, இணையமானது புலம்பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கிறது எனக் கூறி... மேலும் பல கருத்துகளை எனது அணியினர் முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து.. அவர்களை வாழ்த்தி.. விடைபெறுகிறேன். வணக்கம்.
விஞ்ஞான தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியின் மைல் கல் எனும் அளவிற்கு மானிட குலத்திற்கு வரப்பிரசாகமாக அமைந்திருப்பது 'இணையம்' என்றால் அதிலே ஐயமில்லை. பல்வேறு துறைகள் ஒட்டிய தேவைகளை, ஆலோசனைகளை, அறிவூட்டல்களை, தகவல் பரிமாற்றங்களை மிகவும் இலகுவாக்கி மானுட செளகரியங்களின் விரைவு நிறைவேற்றுதல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளதும் இணையம் என்றாலும் மிகையில்லை.
ஆனால், இத்தகைய இணையத்தின் பயன்பாடு, எம் இளைஞர்களைப் பொறுத்தளவில் எந்தவகையில் பயன்பாடாகிறது என்ற தேடலே இந்தப் பட்டிமன்றத்தின் நோக்கமாகும். அந்தவகையில் எனக்குத் தெரிந்த சில கருத்துகளை இங்கே முன்வைக்க விளைகிறேன்.
<b>புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.</b>
1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.
இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, <b>தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள்</b>. அவ்வளவுதான்.
இன்று புகலிட நாடுகளில் கணனி இல்லாத தமிழ் வீடுகளே இல்லை எனலாம். <b>கணனியை இயக்கத் தெரிகிறதோ இல்லையோ... வானொலி, தொலைக்காட்சி முன்பு வரவேற்பறையில் அலங்காரப் பொருளாக இருந்ததுபோல.. இன்று கணனி அலங்காரப் பொருளாகவாவது வரவேற்பறையில் குந்திக்கொண்டிருக்கிறது.</b> அந்தக் கணனியின் முன்னால் எத்தனை இளைஞர்கள் மணித்தியாலக்கணக்காக குந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. அதுவும் கணக்கிலடங்காதவர்கள். அப்பா அம்மாவை பார்த்தா.. <b>'எங்கடை பிள்ளை கணனீல அந்தமாதிரி பாருங்கே.. சிவகாசி நேற்றுத்தான் வெளியிட்டாங்கள்.. பிள்ளை சீடீல அடிச்சு நாங்களும் பாத்திட்டம்..'</b> எனும்போது... வாளி வாளியாக பெருமை முகத்தில் வழியும். அப்பா அம்மாவைப் பொறுத்தளவில் சினிமா படச் சீடீயும், கலியாணக் காட்டடிப்பும்தான் பிள்ளையின் கணனி வித்தகமாக இருக்க, பிள்ளை கணனியில் என்ன செய்யுது?!
காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்.
உதாரணமாக யாகூ சற் ரூம்களுக்கு போய் பாருங்கள். எம்மவரின் இணைய முன்னேற்றத்தை ஒலிவடிவிலேயே கேட்க முடியும். இப்படி கண்காணிப்பாளரற்ற சற் ரூம்களில் பங்குபற்றும் தமிழ் உறுப்பினர்களது எண்ணிக்கையையும் யாழ் போன்ற ஒழுங்கான கருத்துக்களங்களில் பங்குபற்றும் அங்கத்துவர்களின் எண்ணிக்கையையும் கவனியுங்கள். ஒரு வீதமாவது தேறுமா?!
எதிரணித் தலைவர் கூறியதுபோல, <b>'இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி'</b> என்றால்.. 'சற் ரூம்'களிலே நேரத்தையும் காலத்தையும் கண்ணையும் பழுதாக்கிக்கொண்டு குப்பைகளை வாரி இறைக்கிறார்களே... அவர்களும் இளைஞர்கள்தானே?! அதாவது மாற்று அணித்தலைவரின் கணிப்பீட்டின்படி 80 வீத இளைஞர்களாவது இருப்பார்கள்தானே?!
சில விடயங்களை கூற வேண்டுமாயின் வேறு விடயங்களையும் துணைக்கு அழைக்கத்தான் வேண்டும். அதேபோல, 80ம் ஆண்டுகளிலேயே பெரும்பாலான தமிழர்கள் புலம்பெயர்ந்து காலூன்றினார்கள். அப்போது அவர்கள் 20க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான இளைஞர்கள். அன்று அவர்கள் தமிழ் பாடசாலைகளை நிறுவினார்கள். அமைப்புகளை உருவாக்கினார்கள். வியாபாரங்களை ஆரம்பித்தார்கள். ஆக, <b>இன்றைய இளைஞர்களின் பல தேவைகள் பூர்த்தியடைய அவர்கள் வழி கண்டார்கள். இன்றைய இளைஞர்கள் இங்கு கற்ற கல்வியால்... ஏன் இந்த இணையத்தால் எதை எமது இனத்திற்குத் தந்தார்கள்?</b> என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவதையும் தவிர்க்க முடியாமலுள்ளது. இன்றைய இளைஞர்கள் இணையத்தால் அடையும் நன்மை ஆரோக்கிய முடையதாயின், அந்த நன்மையின் பயன்பாட்டை.. எமது இனத்துக்கான பெறுபேற்றை மாற்று அணியினர் தொட்டுக் காட்டுவார்களாயின் அது வரவேற்கக்கூடியதே!
தற்போது புலம் பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைப் பொறுத்தளவில் இணையமானது, 'சற் ரூம்'களில் கூத்தடிக்கவும், அதனூடாக 'டேட்டிங்' காண வழி தேடலாகவுமே உள்ளது. இதைத் தவிர, இணையத்தால் அவர்களின் பயன்பாடு.. அந்தப் பயன்பாட்டினூடாக நமது இனம் பெற்ற பிரயோசனம் என்பது 'பூச்சியம்'ஆகவே என்மட்டில் தோன்றுகிறது.
ஆக, <b>வாசல்படி தாண்டி வீதியில் இறங்கி, உற்றம் சுற்றம் இனத்தவர் யாராவது கவனிக்கிறார்களோ என அச்சப்பட்டுச் செய்யும் தவறுகளை, வீட்டினுள் நாலு சுவர்களுக்குள் இருந்து கூச்சமோ வெட்கமோ மனக்குறுகுறுப்போ இன்றி செய்யவே புலம்பெயர் இளைஞர்களுக்கு இணையமானது பயன்பாடாகிறது... இதற்கு ஆண் பெண் பேதமில்லை.. </b>எனவே, இணையமானது புலம்பெயர்ந்து வாழ் தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கிறது எனக் கூறி... மேலும் பல கருத்துகளை எனது அணியினர் முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து.. அவர்களை வாழ்த்தி.. விடைபெறுகிறேன். வணக்கம்.
.

