12-29-2005, 06:54 PM
<b>வணக்கம்.
இளையவர்க்கு நன்மையளிக்கும் வகையில், பயனளிக்கும் வகையில் பட்டிமன்றத்தை நடத்த
களமமைத்துத் தந்த இணைய ஊடகமான யாழ் களத்துக்கும், அதன் நிர்வாகத்தினர்க்கும்
எனது முதல் வணக்கம். பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து, கள உறுப்பினர்களை ஒருங்கமைத்து
நல்லதொரு பணியை சிறப்பாகச் செய்த இரசிகைக்கு நன்றிகலந்த வணக்கம். அடுத்து
பட்டிமன்றத்தின் நடுவர்களாக, எமது கருத்துக்களின் முன்நிலைப் பார்வையாளர்களாக
வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து
மற்றும் தமிழினிக்கும் சிறப்பு வணக்கம். இணைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறது என்று
தமது கருத்துக்களை களமிறக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், அவ்வணியைத்
தலைமையேற்றுள்ள சோழியான் அண்ணாவுக்கும் பண்பான வணக்கம். இறுதியாக எம்
இருதரப்பு வாதங்களையும், கருத்தாடல்களையும் வாசித்துப் பயனுற இருக்கும் ஏனைய
யாழ்கள உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் வணக்கம்.</b>
அழிவிலிருந்து ஆக்கம் பிறக்கிறது. ஆக்கத்தின் செயற்தொடரில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
அந்தவகையில், உலகவரலாற்றின் மாபெரும் அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து
உருவாக்கம் பெற்றதே இந்த இணையம்.
அந்த இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்து வாழ் இளம் தமிழ்ச்சமூகம் நன்மையடைகிறதா? அல்லது
சீரழிந்துபோகிறதா? என்பதே யாழ் கருத்துக்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்
பட்டிமன்றத்தின் தலைப்பு.
தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய பரிமானங்களை உருவாக்கித் தந்த இந்த இணைய
ஊடகத்தால் நமது புலம்வாழ் இளஞ்சமூகம் அதிகம் நன்மையே அடைகிறது என்கிற
உண்மையை உறுதிபடக் கூற ஒன்றுபட்டிருக்கும் எனது அணிக்கு தலைமை ஏற்று, எமது
கருத்தியல் தளத்தை தெளிவுபடுத்தவும், அதற்கு வலுச்சேர்க்கவும் முதல் கருத்தாளனாக
எனது கருத்தை முன்வைக்கிறேன்.
இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத்தொழில்நுட்பத்திலும்
மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது என்கிற உண்மையை எதிரணியினர்
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா?
கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது. எமது
அணியின் கருத்தியல் தளம் இங்குதான் நிலைகொள்கிறது.
* உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?
* இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்
சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்
நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
* அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.
* வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும்,
தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும்,
வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா?
* சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?
* இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,
கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்
சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த
வழிசமைத்துக்கொடுத்திருப்பது எது? இணையம்தானே? - இது தமிழ் இளையோர்
அடைந்துள்ள மிகப்பெரிய நன்மையில்லையா?
* உலகக் கலைகளெலாம் கற்று தமிழுக்கு வளம் கொணர்ந்து சேர்ப்போம் என்று
பொருள்படும் ஆன்றோர் எண்ணத்தை செயலாக்கும் தளம் எது? கலைகளெல்லாம் விரல்
நுனியில், கலைப்படைப்புகளெல்லாம் கண்ணருகில், சிறு திரையில்.
* பள்ளிக் கல்விக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும்
விலைமதிப்பான புத்தகங்களுக்கு ஈடாக இருப்பது இணையம். நேரத்தை மிச்சப்படுத்தி,
நிறைவான தகவல்களைத் திரட்டிடத் துணைபுரிகிற இணையத்தின் சேவையால் எத்தனை
எத்தனை தமிழ் இளைஞர்கள் நன்மையடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இன்று
எதிரணியினர் தமது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்காய் தகவல்களை எங்கு சென்று
தேடுகிறார்கள்? தோள்கொடுக்கும் தோழனை துரோகி என்கலாமா?
* பள்ளி சென்று பயில வாய்ப்புக் கிட்டாத புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்க்கு
இணையமூடான கல்வி எத்தனை வாய்ப்பளிக்கிறது தெரியுமா? ஆசிரியரில்லாமல்
சுயமாகவும், சுதந்திரமாகவும் தனது கல்வியறிவை வளர்த்துக்கொள்ளவும், உலக அறிவை
விரிவுபடுத்தவும் வழிவகுக்கிறது இணையம் - அதன் வழிநின்று உயர்வு பெறுகிறார் தமிழ்
இளைஞர்.
ஏதோ சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டலாம் என்கிற எண்ணத்தோடு இணைய
ஊடகத்தால் தமிழ் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று வாதாட வந்த எதிரணியினர்
ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்: ஆக்க நினைப்பவர்க்கு இணையம்
என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.
இங்கு நான் அடிப்படையான சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்துள்ளேன். அவற்றை
எனது அணியினர் விரிவாகவும், இன்னும் விளக்கமாகவும் உதாரணங்களுடனும்,
ஆதாரங்களுடனும் எழுதுவார்கள்.
பி.கு.: தாமதத்துக்கு வருந்துகிறேன். நேரம் ஒத்துழைக்கவில்லை. தொடருந்துப் பயணத்தின்போதே இவற்றையாவது தட்டச்ச முடிந்தது. எனவே, எழுத்துப் பிழைகள் இருக்கலாம் - மன்னிக்க.
இளையவர்க்கு நன்மையளிக்கும் வகையில், பயனளிக்கும் வகையில் பட்டிமன்றத்தை நடத்த
களமமைத்துத் தந்த இணைய ஊடகமான யாழ் களத்துக்கும், அதன் நிர்வாகத்தினர்க்கும்
எனது முதல் வணக்கம். பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து, கள உறுப்பினர்களை ஒருங்கமைத்து
நல்லதொரு பணியை சிறப்பாகச் செய்த இரசிகைக்கு நன்றிகலந்த வணக்கம். அடுத்து
பட்டிமன்றத்தின் நடுவர்களாக, எமது கருத்துக்களின் முன்நிலைப் பார்வையாளர்களாக
வாதப்பிரதிவாதங்களை அடிப்படையாக வைத்து தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து
மற்றும் தமிழினிக்கும் சிறப்பு வணக்கம். இணைய ஊடகம் இளைஞர்களை சீரழிக்கிறது என்று
தமது கருத்துக்களை களமிறக்க ஒன்றிணைந்திருக்கும் எதிரணியினருக்கும், அவ்வணியைத்
தலைமையேற்றுள்ள சோழியான் அண்ணாவுக்கும் பண்பான வணக்கம். இறுதியாக எம்
இருதரப்பு வாதங்களையும், கருத்தாடல்களையும் வாசித்துப் பயனுற இருக்கும் ஏனைய
யாழ்கள உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் வணக்கம்.</b>
அழிவிலிருந்து ஆக்கம் பிறக்கிறது. ஆக்கத்தின் செயற்தொடரில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
அந்தவகையில், உலகவரலாற்றின் மாபெரும் அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து
உருவாக்கம் பெற்றதே இந்த இணையம்.
அந்த இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்து வாழ் இளம் தமிழ்ச்சமூகம் நன்மையடைகிறதா? அல்லது
சீரழிந்துபோகிறதா? என்பதே யாழ் கருத்துக்களத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப்
பட்டிமன்றத்தின் தலைப்பு.
தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதிய பரிமானங்களை உருவாக்கித் தந்த இந்த இணைய
ஊடகத்தால் நமது புலம்வாழ் இளஞ்சமூகம் அதிகம் நன்மையே அடைகிறது என்கிற
உண்மையை உறுதிபடக் கூற ஒன்றுபட்டிருக்கும் எனது அணிக்கு தலைமை ஏற்று, எமது
கருத்தியல் தளத்தை தெளிவுபடுத்தவும், அதற்கு வலுச்சேர்க்கவும் முதல் கருத்தாளனாக
எனது கருத்தை முன்வைக்கிறேன்.
இணையம் என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்திலும், தொடர்புத்தொழில்நுட்பத்திலும்
மிகப்பெரிய வளர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது என்கிற உண்மையை எதிரணியினர்
ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா?
கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது. எமது
அணியின் கருத்தியல் தளம் இங்குதான் நிலைகொள்கிறது.
* உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?
* இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்
சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்
நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
* அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தை
உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.
* வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும்,
தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும்,
வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது
இணையம் என்றால் மறுக்கமுடியுமா?
* சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தை
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?
* இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,
கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்
சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த
வழிசமைத்துக்கொடுத்திருப்பது எது? இணையம்தானே? - இது தமிழ் இளையோர்
அடைந்துள்ள மிகப்பெரிய நன்மையில்லையா?
* உலகக் கலைகளெலாம் கற்று தமிழுக்கு வளம் கொணர்ந்து சேர்ப்போம் என்று
பொருள்படும் ஆன்றோர் எண்ணத்தை செயலாக்கும் தளம் எது? கலைகளெல்லாம் விரல்
நுனியில், கலைப்படைப்புகளெல்லாம் கண்ணருகில், சிறு திரையில்.
* பள்ளிக் கல்விக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும்
விலைமதிப்பான புத்தகங்களுக்கு ஈடாக இருப்பது இணையம். நேரத்தை மிச்சப்படுத்தி,
நிறைவான தகவல்களைத் திரட்டிடத் துணைபுரிகிற இணையத்தின் சேவையால் எத்தனை
எத்தனை தமிழ் இளைஞர்கள் நன்மையடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இன்று
எதிரணியினர் தமது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்காய் தகவல்களை எங்கு சென்று
தேடுகிறார்கள்? தோள்கொடுக்கும் தோழனை துரோகி என்கலாமா?
* பள்ளி சென்று பயில வாய்ப்புக் கிட்டாத புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்க்கு
இணையமூடான கல்வி எத்தனை வாய்ப்பளிக்கிறது தெரியுமா? ஆசிரியரில்லாமல்
சுயமாகவும், சுதந்திரமாகவும் தனது கல்வியறிவை வளர்த்துக்கொள்ளவும், உலக அறிவை
விரிவுபடுத்தவும் வழிவகுக்கிறது இணையம் - அதன் வழிநின்று உயர்வு பெறுகிறார் தமிழ்
இளைஞர்.
ஏதோ சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டலாம் என்கிற எண்ணத்தோடு இணைய
ஊடகத்தால் தமிழ் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று வாதாட வந்த எதிரணியினர்
ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்: ஆக்க நினைப்பவர்க்கு இணையம்
என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.
இங்கு நான் அடிப்படையான சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்துள்ளேன். அவற்றை
எனது அணியினர் விரிவாகவும், இன்னும் விளக்கமாகவும் உதாரணங்களுடனும்,
ஆதாரங்களுடனும் எழுதுவார்கள்.
பி.கு.: தாமதத்துக்கு வருந்துகிறேன். நேரம் ஒத்துழைக்கவில்லை. தொடருந்துப் பயணத்தின்போதே இவற்றையாவது தட்டச்ச முடிந்தது. எனவே, எழுத்துப் பிழைகள் இருக்கலாம் - மன்னிக்க.

