12-29-2005, 12:37 AM
யாழ் குடாநாட்டில் நாளுக்கு நாள் போர் தீவிரப்படுத்தப்படுவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வன்னி நிலப்பரப்புக்கு வந்தவண்ணமிருக்கின்றனர். இதனை அறிந்த படைவட்டாரங்களும் கூலிக்கும்பல்களும் தமக்கு விழப்போகும் பேரிடியை கருத்தில் கொண்டு மக்கள் இவ்வாறு இடம் பெயர்வதை தடுக்கும் முகமாக தமது சோதனையை மிக தீவிரமாக முடுக்கி விடப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்துக்கு சற்று முன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அறியக்கூடியதாக இருந்தது. இதனிடையே எதிர்வரும் ஆண்டு 4 ம் நாளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் போரை தீவிரப்படுத்த முடிவு செய்திருப்பதாக செய்தியொன்று மக்கள் மத்தியிலே மிகவேகமாக பரவி வருகிறதாம். இதன் உண்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இதனிடையே வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருக்கும் மக்கள் போர் அபாயத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிப்பதாகவும். அத்தோடு யாழ் குடாநாட்டில் இருக்கும் இளைஞர்கள் முகத்தில் பயத்தின் மிகுதி காணப்படுவதாயும் மேலும் அறியக்கூடியதாய் இருக்கிறது.
இதுபற்றி தெரிந்தவர்கள் மேலும் செய்திகளை தாருங்கள்.
இதுபற்றி தெரிந்தவர்கள் மேலும் செய்திகளை தாருங்கள்.

