12-26-2005, 05:42 AM
சர்வதேச சமூகத்துடனான புலிகளின் உறவைச் சிதைக்க சிறிலங்காவின் புதிய சதி
சர்வதேச சமூகத்துடனான தமிழீழ விடுதலைப் புலிகள் உறவைச் சிதைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் புதிய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு தர்சினியின் பாலியல் படுகொலைக்கு எதிர்வினையாக மன்னாரில் பொங்கியெழும் மக்கள் படையினரால் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை வைத்து புதிய இராஜதந்திர சதித் திட்டத்தை நகர்த்த சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.
மன்னார் பேசாலைத் தாக்குதலில் உலக அளவில் தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதல்நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று மன்னார் சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி சுதத் அசமதல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவ்த்துள்ளார்.
இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளர் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தக் கதையை சோடனை செய்வதற்காகஇ கைக் குண்டுத்தாக்குதல்களால் மனித உடல்கள் இப்படி சிதையாது என்றும் அனைத்துலக நாடுகள் தடை செய்த தெர்மொபெரிக் ரக ஆயுதங்களை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தினார்கள் என்றும் புதிய விளக்கங்களையும் அவர் அளித்துள்ளார்.
நேர்மைப் பேச்சுகளில் நம்பிக்கையின்றிஇ சர்வதேச சமூகத்திடம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்ற புதிய கதையை அவிழ்த்துவிட சிறிலங்கா அரசாங்கம் தயாராக வருவதையே இந்தச் செய்திகள் சுட்டிக்காட்டுவதாக கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதினம்
சர்வதேச சமூகத்துடனான தமிழீழ விடுதலைப் புலிகள் உறவைச் சிதைக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் புதிய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு தர்சினியின் பாலியல் படுகொலைக்கு எதிர்வினையாக மன்னாரில் பொங்கியெழும் மக்கள் படையினரால் 13 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை வைத்து புதிய இராஜதந்திர சதித் திட்டத்தை நகர்த்த சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.
மன்னார் பேசாலைத் தாக்குதலில் உலக அளவில் தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதல்நிலை தகவல்கள் தெரிவிக்கின்றன என்று மன்னார் சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி சுதத் அசமதல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவ்த்துள்ளார்.
இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளர் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தக் கதையை சோடனை செய்வதற்காகஇ கைக் குண்டுத்தாக்குதல்களால் மனித உடல்கள் இப்படி சிதையாது என்றும் அனைத்துலக நாடுகள் தடை செய்த தெர்மொபெரிக் ரக ஆயுதங்களை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தினார்கள் என்றும் புதிய விளக்கங்களையும் அவர் அளித்துள்ளார்.
நேர்மைப் பேச்சுகளில் நம்பிக்கையின்றிஇ சர்வதேச சமூகத்திடம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்துகிறார்கள் என்ற புதிய கதையை அவிழ்த்துவிட சிறிலங்கா அரசாங்கம் தயாராக வருவதையே இந்தச் செய்திகள் சுட்டிக்காட்டுவதாக கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

