12-22-2005, 10:11 PM
மன்னார் கடலில் 3 சிறிலங்கா படையினர் மூழ்கினர்: விடுதலைப் புலிகள் விளக்கம்
மன்னார் கடலில் 3 சிறிலங்கா கடற்படையினர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:
மன்னார் கடலில் 22ஆம் நாள் காலை நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக இந்தக் கடிதத்தை நாம் அனுப்புகிறோம்.
சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலுக்குள்ளான எமது போராளிகள் தப்பி வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்தால் தங்களுக்கு உடனடியாக முழுமையான தகவல்களை உரிய நேரத்தில் தர இயலவில்லை.
மன்னார் கடற்பிரதேசத்தில் பயணம் செய்து கொண்டிருந்த எமது 3 படகுகளை சிறிலங்கா கடற்படையினரின் படகுகள் இடைமறித்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கின. தற்காப்புக்காக எமது போராளிகளும் திருப்பித் தாக்குதல் நடத்தனர்.
கடற்படையினர் படகு பின்வாங்கிச் சென்ற போது ஒரு கடற்படை படகு பின்னால் நிற்பதையும் எதுவித அசைவுகளற்று அது இருப்பதையும் எமது போராளிகள் அவதானித்தனர். அந்தப் படகை எமது போராளிகள் பரிசோதித்ததில் கடும் சேதமடைந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்த படகில் 2 கடற்படையினர் இறந்து கிடந்தனர். கடும் காயங்களுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் படகில் இருந்தார். மூழ்கிய படகையும் இறந்த இரு கடற்படையிரையும் கைவிட்டுவிட்டு உயிருக்குப் போராடிய கடற்படையைச் சேர்ந்தவரை காப்பாற்றுவதற்காக கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மிக மோசமாக சேதமடைந்திருந்த எமது படகில் ஏற்றினர்.
இருந்த போதும் எமது படகிலும் கடல் நீர் உள்புகுந்து படுகாயமடைந்த வீரருடன் மெதுவாக எமது படகும் மூழ்கத் தொடங்கியது.
இதையடுத்து எமது போராளிகள்இ காயமடைந்த சக போராளியுடன் கடலில் நீந்தி நேற்று மாலையில்தான் கரை சேர்ந்தனர்.
கரை சேர்ந்த எமது உறுப்பினர்களிடம் நாம் கேட்டறிந்த தகவல்கள் இவை. அதற்குள்ளாக சிறிலங்கா அரசாங்கம்இ கண்காணிப்புக்குழுவுக்கும் ஊடகங்களுக்கும் விடுதலைப் புலிகள் மூன்று கடற்படையினரை கடத்திச் சென்றதாக செய்தி பரப்பியுள்ளனர்.
மூன்று கடற்படையினரும் கடற்படை படகுடன் கடலில் மூழ்கிவிட்டனர் என்பதை எமது போராளிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் கடலிலும் நிலத்திலும் எமது உறுப்பினர்களின் பயண ஒழுங்குகளுக்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்று நாம் மீண்டும் வேண்டிக்கொள்கிறோம்.
கடலில் செல்லும் எமது போராளிகள் தொடர்ந்து தற்காப்புக்கான ஆயுதங்களோடு பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எமது வேண்டுகோளுக்கமைய எதிர்கால பயண ஒழுங்குகள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான பதில் அவசியமாகிறது. இதுவிடயத்தில் விரைந்து உத்தியோகப்பூர்வமான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் மூலம் தற்போதைய சம்பவங்கள் இனி நடைபெறாது தவிர்க்க முடியும் என்று தமிழ்ச்செல்வன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புதினம்
மன்னார் கடலில் 3 சிறிலங்கா கடற்படையினர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:
மன்னார் கடலில் 22ஆம் நாள் காலை நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக இந்தக் கடிதத்தை நாம் அனுப்புகிறோம்.
சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலுக்குள்ளான எமது போராளிகள் தப்பி வந்தடைவதில் ஏற்பட்ட தாமதத்தால் தங்களுக்கு உடனடியாக முழுமையான தகவல்களை உரிய நேரத்தில் தர இயலவில்லை.
மன்னார் கடற்பிரதேசத்தில் பயணம் செய்து கொண்டிருந்த எமது 3 படகுகளை சிறிலங்கா கடற்படையினரின் படகுகள் இடைமறித்துத் தாக்குதல் நடத்தத் தொடங்கின. தற்காப்புக்காக எமது போராளிகளும் திருப்பித் தாக்குதல் நடத்தனர்.
கடற்படையினர் படகு பின்வாங்கிச் சென்ற போது ஒரு கடற்படை படகு பின்னால் நிற்பதையும் எதுவித அசைவுகளற்று அது இருப்பதையும் எமது போராளிகள் அவதானித்தனர். அந்தப் படகை எமது போராளிகள் பரிசோதித்ததில் கடும் சேதமடைந்து மூழ்கிக் கொண்டிருந்த அந்த படகில் 2 கடற்படையினர் இறந்து கிடந்தனர். கடும் காயங்களுடன் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் படகில் இருந்தார். மூழ்கிய படகையும் இறந்த இரு கடற்படையிரையும் கைவிட்டுவிட்டு உயிருக்குப் போராடிய கடற்படையைச் சேர்ந்தவரை காப்பாற்றுவதற்காக கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மிக மோசமாக சேதமடைந்திருந்த எமது படகில் ஏற்றினர்.
இருந்த போதும் எமது படகிலும் கடல் நீர் உள்புகுந்து படுகாயமடைந்த வீரருடன் மெதுவாக எமது படகும் மூழ்கத் தொடங்கியது.
இதையடுத்து எமது போராளிகள்இ காயமடைந்த சக போராளியுடன் கடலில் நீந்தி நேற்று மாலையில்தான் கரை சேர்ந்தனர்.
கரை சேர்ந்த எமது உறுப்பினர்களிடம் நாம் கேட்டறிந்த தகவல்கள் இவை. அதற்குள்ளாக சிறிலங்கா அரசாங்கம்இ கண்காணிப்புக்குழுவுக்கும் ஊடகங்களுக்கும் விடுதலைப் புலிகள் மூன்று கடற்படையினரை கடத்திச் சென்றதாக செய்தி பரப்பியுள்ளனர்.
மூன்று கடற்படையினரும் கடற்படை படகுடன் கடலில் மூழ்கிவிட்டனர் என்பதை எமது போராளிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளின் அடிப்படையில் கடலிலும் நிலத்திலும் எமது உறுப்பினர்களின் பயண ஒழுங்குகளுக்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்று நாம் மீண்டும் வேண்டிக்கொள்கிறோம்.
கடலில் செல்லும் எமது போராளிகள் தொடர்ந்து தற்காப்புக்கான ஆயுதங்களோடு பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எமது வேண்டுகோளுக்கமைய எதிர்கால பயண ஒழுங்குகள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமான பதில் அவசியமாகிறது. இதுவிடயத்தில் விரைந்து உத்தியோகப்பூர்வமான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல் மூலம் தற்போதைய சம்பவங்கள் இனி நடைபெறாது தவிர்க்க முடியும் என்று தமிழ்ச்செல்வன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புதினம்

