Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை
#1
கடற்படையினர் மீது தாக்குதல்: இரு படகுகள் சேதம் - மற்றொரு படகுடன் 3 கடற்படையினரைக் காணவில்லை
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn வுhரசளனயலஇ 22 னுநஉநஅடிநச 2005

மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா கடற்படை யினரின் படகுகள் மீது திடீரெனத் தோன்றிய நான்கு மர்மப்படகுகள் தாக்குதலை நடாத்தியுள்ளன. இதனால் சிறீலங்கா கடற்படையின் இரு படகுகள் சேதமடைந்து ள்ளதுடன், மூன்று கடற்படையினருடன் மற்றொரு படகு காணாமல் போயுள்ளது.

இத்தாக்குதலின் போது படுகாயமடைந்த சஞ்சீவ என்ற கடற்படையினன் மன்னார் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து மன்னார் நகரத்தை சுற்றிவளைத்துள்ள சிறீலங்கா காவல்துறையினரும்இ இராணுவத்தினரும் கடற்கரையில் நின்றிருந்த

மக்களை வெளியேற வேண்டாமென்றும் கடைகளை மூடுமாறும் கூறி மிரட்டுகின்றனர். அதனால் மன்னார் நகரப்பகுதியெங்கும் வெறிச்சோடியுள்ளது. மொத்த மன்னார் நகரமுமே பதட்டத்திலும் அச்சத்திலும் மூழ்கியுள்ளது.

இந்த நிலைமைகள் தொடர்பில் படையினருடன் மன்னார் ஆயர் சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடிய பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஆனாலும் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.


சங்கதி
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
கடற்படையின் இரு படகுகள் சேதம் ஒன்றைக் காணவில்லை - by Sriramanan - 12-22-2005, 08:11 AM
[No subject] - by sinnappu - 12-22-2005, 09:33 AM
[No subject] - by sri - 12-22-2005, 09:35 AM
[No subject] - by தூயவன் - 12-22-2005, 02:53 PM
[No subject] - by நர்மதா - 12-22-2005, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)