12-18-2005, 05:39 PM
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களின் போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகிய நான்கு தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதற்கமைய எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே கூட்டமைப்பாக புதிய சின்னத்துடன் போட்டியிடுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பி. சந்திரசேகரன் ,மனோகணேஷன், ஆர். சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் புதிய கூட்டமைப்பின் பெயர் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே கூட்டமைப்பாக புதிய சின்னத்துடன் போட்டியிடுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பி. சந்திரசேகரன் ,மனோகணேஷன், ஆர். சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் புதிய கூட்டமைப்பின் பெயர் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

