12-10-2003, 12:34 PM
ரணில் சந்திரிகா பேச்சு மீண்டும் தோல்வி
கொழும்பு:
தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கும், அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவிற்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. ராணுவ இலாகாவைத் திருப்பித் தர சந்திரிகா மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததாக ரணில் தரப்பினர் தெரிவித்தனர்.
இந் நிலையில் டிசம்பர் 18ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
That'stamil.com
கொழும்பு:
தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கும், அதிபர் சந்திரிகா குமாரதுங்கேவிற்கும் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. ராணுவ இலாகாவைத் திருப்பித் தர சந்திரிகா மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததாக ரணில் தரப்பினர் தெரிவித்தனர்.
இந் நிலையில் டிசம்பர் 18ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
That'stamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

