Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விழுதுமாகி வேருமாகி நூலுக்கு தலைவர் பிரபா செய்தி
#2
தகவலிற்கு நன்றி சந்திரவதனா அக்கா

இதோ உதயனில் வெளியான கவிஞரின் வாழ்த்து

போராளிகளே சிறந்த எழுத்தாளர்களாகவும் மாறிவிட்டார்கள்
வரலாற்று ஆசிரியர்கள் எழுதும் வரை
ஈழத்தின் வீர வரலாறு இனி காத்திருக்காது!
விழுதாகி வேருமாகி நு}ல் வெளியீட்டு விழாவில் புதுவை உரை
எமது விடுதலைப் போராட் டத்தின் வீர வரலாறு இனி மேல் வரலாற்று ஆசிரியர் களுக்காக காத்திருக்காது. ஏனென்றால், போராளிகளே எழுத்தாளர்களாகி அதனை எழுதத் தொடங்கிவிட்டார் கள்.
- இவ்வாறு தெரிவித் திருக்கிறார் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழக பொறுப் பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
நேற்றுமுன்தினம் மாலை நல்லு}ர் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஷவிழுதாகி வேருமாகி| என்ற நு}லின் அறி முக விழாவுக்கு தலைமை வகித்து உரைநிகழ்த்திய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை மக்களின் துன்பச் சுமைகளை - போராட்டத்தின் கடினமான பாதை களை - சாதனைகளைப் பற்றியெல்லாம் எமது அடுத்த சந் ததி அறிந்து கொள்வதற்காக எழுதுங்கள் என்று எழுத்தாளர் கள் சமூகத்தைப் பார்த்து பல தடவைகள் கேட்டுக்கொண்டோம்.
ஆனால், ஒருசிலரைத் தவிர அந்தப் பணியை பெரிதாக எவ ரும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. இப்போது அந் தப் பணியை போராளி எழுத்தாளர்களே செய்யத்தொடங்கி விட்டார்கள்.
எமது தேசியத் தலைவர், போராளி எழுத்தாளர்களை ஊக்கு வித்து அவர்களைப் பாராட்டி, பரிசு வழங்கி வளர்த்தெடுத்து வருகின்றார்.
போர்க்களத்திலே நேரடியாக நின்று அதன் வலியை அனுபவித்து அதனை இலக்கியமாக படைக்கின்ற ஆற்றலை எமது போராளிகள் பலரும் பெற்றிருக்கின்றார்கள். அந்த வரிசையில் தான் இப்பொழுது மாலதி படையணியின் விழுதாகி வேரு மாகி|| நு}ல் வெளிவந்திருக்கின்றது.
எமது மண்ணின் வீரவரலாறுகளை காண்பியக் காட்சிகளாக கண்முன்னே நிறுத்துகின்றவகையில் இது அமைந்திருக்கின் றது. இதிலே உள்ள கதைகள் முடிந்த கதைகள் அல்ல. அவை இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கதை.
பலகளங்களிலே நின்று போராடிய மூன்று பெண் போராளி கள் இணைந்து இந்த நு}லைப் படைத்திருக்கின்றார்கள். தாம் நேரடியாக அனுபவிக்காத சம்பவங்களையும் கூட உணர்வோட் டத்துடன் இதில் படைத்திருக்கின்றார்கள் அவர்கள்.
எமது இத்தகைய வீர வரலாற்று நு}ல்களை திரைப்படங் களாகத் தயாரிப்பதற்கு ஆங்கிலத் திரைப்பட நிறுவனங்கள் பல எம்மை அணுகியிருக்கின்றன.
அந்தளவுக்கு அவர்கள் எமது வரலாற்றின் ஆழத்தை உணர்ந் திருக்கின்றார்கள். தற்போது வெளிவந்திருக்கும் இந்த நு}லைப் போல இன்னும் பல படைப்புகள் இனி தொடர்ச்சியாக எமது மண்ணில் வெளிவரவிருக்கின்றன என்று தெரிவித்தார்.
நு}லுக்கான அறிமுக உரையை நிகழ்த்திய புரட்சிகா தனது உரையில் தெரிவித்ததாவது:-
இந்த நு}ல் ஒரு குருதிசிந்திய கதை. இதிலுள்ள கதாநாயகிகள் இன்று கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் எல்லையில் காவல்காத்துக் கொண்டி ருக்கின் றார்கள்.
எமது படையணியின் முதற்சமர் இந்த யாழ்.மண்ணிலே தான் நடந்தது. அதுபோலவே, இறுதிச் சமரும் இங்குதான் நடந்தது. எமது போராளிகள் போரிலே அனுபவிக்கின்ற துன்பங்கள், செய்கின்ற தியாகங்கள் அர்ப்பணிப்புகள் யாவும் மக்களுக்கு தெரியவேண்டும். ஒவ்வொரு போராளிகளினதும் வீர வரலாறுகளை இனிவரும் சந்ததிகள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த நு}லை படைத்திருக ;கின்றோம்.
இதனை மக்களுக்கு சொல்லவேண்டிய தேவை எங்களுக்கு உண்டு. இதன் அத்தியாயம் இத்துடன் முடிந்து விடவில்லை. இந்த நு}லின் அடுத்த அத்தியாயத்துக ;கான நாயகிகள் இப்பொழுது களத்திலே காவலில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்க ளின் வரலாற்றை அடுத்த அத்தியாயமாக இனிவரும் சந்ததி எழுதும் - என்றார்.
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் தமிழீழ தேசியகொடியினை மாலதி படையணியின் தளபதி களில் ஒருவரான தமிழ்ச்செல்வி எற்றிவைத்தார்.
நூலின் ஆசிரியர்களில் ஒருவரான புரட்சிகா அறிமுக உரையை நிகழ்த்தினார். மதிப்பீட்டுரைகளை செல்வி சிறி அருளானந்தம், கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
நு}லின் முதற்பிரதியை யாழ். மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் கலைவிழியிடம் இருந்து மாவீரர் மேஜர் பாரதியின் தாயார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதி களை யாழ். நல்லு}ர் கோட்ட அரசியல்துறை மகளிர் பொறுப் பாளர் புூமகள் வழங்கினார்.
மாலதி படையணிப் போராளிகளான புரட்சிகா, காந்தா, மலை மகள் ஆகிய மூவரும் இணைந்து எழுதிய மேற்படி நு}லை வானதி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா அண்மையில் வன்னியில் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே

[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 12-08-2003, 02:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)