12-09-2005, 05:45 PM
அது மட்டுமல்ல அஜிவன் இங்கு ஒரு செய்தியோ கருத்தோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்கு பதில் கருத்து எழுதுபவர்கள் <b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள் </b>என்று வரும் பிரைச்சினையினால் மேலே எழுதப்பட்ட கருத்தை அப்படியே பிரதி செய்து மீண்டும் தாம் எழுதும் பதில்க் கருத்துடன் இணைத்து விடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்ட பக்கத்தில் முதலில் எழுதிய கருத்து திரும்பத் திரும்ப வந்திருப்பதை அவதானிக்கலாம். இது பக்கங்களைத்தான் வீணடிக்கின்றது. நீங்களோ நானோ சுட்டிக் காட்டினாலும் புரிய வேண்டியவர்கள் அடம் பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது.

