12-09-2005, 10:05 AM
அகிலன் Wrote:அதில முக்கியமானதை விட்டுட்டதாகவே படூது குறுக்ஸ். அதாவது இந்தியா தலையிடும் முன் இயன்ற அளவு புலிகளைப் பலவீனப் படுத்துதல். அதுதான் அரசியல் பேரம் பேசலுக்கு இந்தியாவை மேல்த்தட்டில் உயர்த்தி வைத்திருக்கும். இல்லாவிட்டால் புலிகளோட (சாறம் கட்டின இந்தப்பள்ளிக்கூடப் பெடியளோட) சரிசமமாய் இருந்து பேச வேண்டி வரும்.
இலங்கை பாதுகாப்புக்காய் செலவளிக்கும் பணத்தை இந்தியா தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்காய் நேரடியாக செலவளிக்க ஒதுக்குவதாய் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் அண்டை நாடான இலங்கையில் என்ன உண்மையில் நடக்கிறது எண்ட விடயம் கட்டாயம் இந்தியாவுக்கு நன்குதெரியும். மக்களின் ஆதரவு இருக்கும் வரை புலிகளையோ இல்லை அவர்கள் ஆதரவு அமைப்புகளையோ ஒண்டும் செய்ய முடியாதவிடயம் என்பதை அவர்கள் பட்டு உணர்ந்தவர்கள்.
தமிழ்மக்களை எதிர்ப்பதும் புலிகளை எதிர்ப்பதும் ஒண்றுதான் என்பது நன்குதெரிந்தவர்கள் தங்களுடைய பழய கொள்கைகளுடன் திரும்பி வரமாட்டார்கள். அதுவும் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க.
::

